- 2022 Aalonmagari. All Rights Reserved.
மௌனம்…..
இன்று அதிகம் ஆட்கொள்ள எண்ணுகிறேன்..
மடைதிறந்த வெள்ளமாக இருந்த நான்…
அணை கட்டிய நீராய் தேங்கி நிற்பதேனோ?
பின் சென்று என்னை இழந்தேனா?
முன்னே பாய பதுங்கி வாழ்கிறேனா?
இந்நிலை புரிந்தும் புரியா சூழ்நிலையாக…
வலையில் சிக்கி சிக்காமல் நான்….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.