• Home
  • About us
  • Contact us
  • Login
Friday, January 27, 2023
Aalonmagari
Subscribe
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
No Result
View All Result
Aalonmagari
Register
No Result
View All Result

48 – அகரநதி

by aalonmagarii
June 11, 2022 - Updated On June 16, 2022
in கதை, நாவல்
0
3 – அகரநதி

48 – அகரநதி



வரவேற்பிற்கு இரண்டு நாட்கள் முன்பு அனைவரும் வந்தால் போதுமென இவர்கள் கூறிவிட, பெரியவர்களும் அங்கே வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு விசேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் மாலை சென்னை வந்து சேர்ந்தனர். 

அதற்கு முன்பே அகரன், நதியாள், சரண் அனைவரும் நண்பர்களுடன் இணைந்து வரவேற்பிற்கான வேலைகள் முடித்து இன்விடேசனும் வைத்து முடித்திருந்தனர். 

வேண்டிய ஆடை அணிகலன் முதற்கொண்டு ஒரு வாரம் முதலாகவே தயார் செய்து விட்டனர். பெரியவர்கள் பாதி பேர் அகரன் வீட்டிலும், நதியாள் இருந்த வீட்டிலும் தங்கிக் கொண்டனர். மேலும் சில முக்கிய சொந்தங்களை ஹோட்டலில், மண்டபம் அருகிலேயே தங்க வைத்தனர். 

பெரியவர்கள் வந்ததும் சிறியவர்கள் குழந்தைதளாய் மாறி ஆடல் பாடல் குறும்பென கலகலப்பாக சென்றது நாட்கள். அந்த நாளும் விடிந்தது…

அந்த பிரம்மாண்டமான மண்டபத்தின் வாசலில் இருந்தே பூ அலங்காரம் ஆரம்பித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 

அகரன் நதியாள் என பூக்களுடன் வண்ண விளக்குகளும் பெயரை மிண்ணச் செய்து இது அவர்களின் நாள் என்பதை உறுதி செய்தது. 

அந்த பெரிய மண்டபத்தில் கார் ஒரு பக்கம் உள்ளே வந்து பார்க்கிங் எடுத்துச் செல்ல டிரைவர்கள் வரிசையாக நின்றிருந்தனர் , விருந்தினர்களின் வாகனங்களை கொண்டு சென்று பின்பக்க பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தினர். 

வெளியே போகும் வழியும் இரண்டு பக்கம் இருந்தது முன்னேயும், பக்கவாட்டிலும்.

ஊருக்குள் இருந்தாலும் மிகவும் விஸ்தீரனமாகவும், அனைத்து வசதிகளும் கொண்டு, ரம்யமான பூந்தோட்டத்துடன், பூ அலங்காரமும் சேர்ந்து அவ்விடத்தை சொர்க்கலோகம் போலவே உணரச்செய்தது. 

வாசலில் அகரனின் பெற்றோரும், நதியாளின் பெற்றோரும் விருந்தினர்களை வரவேற்றபடி நின்றிருந்தனர். 

சரண், தேவ், மதுரன் மூவரும் அனைத்து வேலைகளையும் பிரித்துக்கொண்டு நிற்கவும் நேரமில்லாமல் செய்தபடி தன் இணைகளை கண்களால் துலாவியபடி இருந்தனர். 

அகரன் அருகில் அவனின் கல்லூரி நண்பர்கள் சிலர் கலாய்த்தபடி அவனை தயார் செய்தபடி இருந்தனர். 

அந்த அந்திமாலை வேளையில் அனைவரின் முகமும் சந்தோஷமும் உற்சாகமும் பொங்கி வழிந்தபடி இருக்க , ஓரத்தில் சில ஜோடி கண்கள் மட்டும் பொறாமையிலும், வன்மத்திலும் வெறித்துக்கொண்டிருந்தன. 

இங்கே நதியாளை அனைவரும் பாடாய் படுத்தி எடுக்க ஒரு நிலை வரை பொறுத்தவள்,” வாய மூடுங்க எல்லோரும் … எத்தனை டிரஸ் தான் நான் கலட்டி மாட்றது? ஒழுங்கா ஒன்னை சொல்லுங்கடி”, என கத்தினாள். 

“கவுன் போடு யாள்”, என  ரிஸ் ஒன்றை கையில் எடுத்தாள். 

“இல்ல இந்த சேரி தான்”, என மீரா ஒன்றை எடுத்தாள். 

“இந்த ஹால்ப் சேரி தான் போடணும்”, என ஸ்டெல்லா ஒன்றை எடுத்தாள். 

மூவரையும் எரிக்கும் பார்வை பார்த்தவள் கதவை திறந்து கொண்டு அகரனின் அறை நோக்கிச் சென்றாள். 

“ஏய் நில்லுடி… டீசர்ட் டிராக் பேண்டோட எங்க போற?”, எனக் கத்தியபடி மீராவும் ஸ்டெல்லாவும் அவளைத் தொடர்ந்தனர். 

“அகன்…. அகன்…..”, என அழைத்தபடி அவள் கதவை திறக்க துவாரகனுடன் சிலர் அங்கிருப்பதை பொருட்படுத்தாமல் அகரனிடம் சென்றாள். 

“வந்து எனக்கொரு டிரஸ் செலக்ட் பண்ணு அகன். இவளுங்க என்னை இம்சை பன்றாளுங்க ஆளுக்கு ஒரு டிரஸ கைல வச்சிட்டு கொடுமை பண்றாங்க”, நதியாள் அவனிடம் முறையிட்டாள் சிறுகுழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு. 

“என்னம்மா பொண்ணு… என்ன இந்த பக்கம்?”, என துவாரகன் அவளை அழைத்தான். 

“என் புருஷனை பார்க்க நான் வரேன்.உனக்கு என்னடா ? அதான் இரண்டு பேரும் பேசிட்டு இருக்கோம்ல எல்லாரும் வெளியே போங்க”, என நதியாள் கத்தவும் அனைவரும் கப்சிப்பென வெளியேறினர். 

“ஏய் நதி ஏன் எல்லாரையும் வெளியே அனுப்பற ? உனக்கு பிடிச்சத போடு. சீக்கிரம் ரெடி ஆகுடா”, அகரன் அவளைப் பார்த்துக் கூறினான். 

“எல்லாமே எனக்கு பிடிச்சி இருக்கு … அதான் குழப்பமே”, நதியாள். 

கண்ணாடி வழியாக அவளின் முகத்தை பார்த்தவன், அவளின் அருகில் நெருங்கி வந்து அவளின் தாடையை உயர்த்தி கண்ணோடு கண் கலந்து உலகம் மறந்து நின்றிருந்தான். 

குளித்து முடித்து எவ்வித அலங்காரமும் இன்றியே பூவாய் மலர்ந்திருந்த முகமும், கருவிழியில் காதலும், இதழில் மென்னகையும் என மனதை களவாடும் கள்ளியாய் இருந்தாள் அவனின் நதி.

நதியாளும் அகரனின் கழுத்தில் தன் கரங்களை மாலை போல கோர்த்தபடி அவனையே இமைக்காது பார்த்திருந்தாள். 

இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து இதழணைக்கும் நேரம் சரியாக மதுரன், சரண் , தேவ் முவரும் அறைக்குள் வந்தனர். 

வந்தவர்கள் இவர்களின் நிலைக்கண்டு முதலில் மதுரன் கத்திவிட இருவரும் சுயநிலை அடைந்தனர்.

“டேய் என்னடா நடக்குது இங்க ? உங்களுக்கு ரிஷப்சன் டா பர்ஸ்ட் நைட் இல்ல… “, என மதுரன் கூற அகரன் அசடு வழிந்தான். 

“அய்யே…. ரொம்ப வழியுது…. இந்தா தொடச்சிக்க…. என்னம்மா பொண்ணு உனக்கு இங்க என்ன வேலை? முதல்ல ரெடி ஆகு. இன்னும் ஒன் ஹவர்ல பங்சன் ஆரம்பிக்கணும்ல… “, சரண். 

“சரணா”, என நதியாள் பல்லை கடிக்க,” இந்தா உங்களுக்கு எங்களோட ஸ்பெஷல் கிப்ட்”, என தேவ் சரண் மதுரன் மூவரும் இரண்டு கவரை கொடுத்தனர். 

“என்னடா இது?”, அகரன். 

“இத தான் இன்னிக்கு நீங்க போட்டுக்கணும்”, தேவ். 

“என் பிரண்ட் கிட்ட சொல்லி ரொம்ப ஸ்பெஷலா ரெடி பண்ண சொன்னோம்டா. இத நீங்க கடைசி வரைக்கும் பத்திரமா வச்சி இருக்கணும்”, மதுரன். 

“யாள்…. அகர்… இரண்டு பேரும் உடனே ரெடி ஆகுங்க… ஸ்டேஜ் ல தான் அகைன் நீங்க மீட் பண்ணணும்”, என சரண் நதியாளை அனுப்பிவிட்டு அகரனை தயாராகச் சொல்லி தாங்களும் தயாராகச் சென்றனர். 

அகரனும் நதியாளும் பார்வையாலேயே விடைபெற விருப்பமின்றி விடைபெற்றனர்.

“என்னடி புது கவரோட வர?”, ஸ்டெல்லா. 

“இது தான் போட்டுக்கணும். முதல்ல பிரிங்க. நான் முகம் கழுவிட்டு வரேன்”, என பிரஸ் ஆகச் சென்றாள் நதி. 

அழகான லெஹங்கா கருநீலமும், கடல் நீலம், தாமரை சிகப்பும் கலந்தபடி கழுத்து பகுதி முழுக்க அழகான வேலைபாடு செய்யப்பட்டு, உடலிலும் புதுவிதமான வேலைபாட்டுடன் கற்களும் மின்னின. மூன்று நிறமும் முழுதாக கலக்காமல் ஒரு பக்கம் கருநீலம் நீண்டு மறுபக்கம் சிகப்பு குறைந்தது போலவும் இன்னோர் இடத்தில் கடல்நீலம் நீண்டு அதே போல இருந்தது. கண்களுக்கு குளிர்ச்சியாகவும், பிரம்மாண்ட வேலைபாட்டுடன் இருந்தது. 

பெண்கள் மூவரும் அதன் வேலைபாடுகளிலும், அந்த நிறத்திலும் பிரம்மித்து நின்றிருந்தனர். 

“ஹேய் என்ன எல்லாரும் ஷாக்காகி நிக்கறீங்க? எப்படி இருக்கு டிரஸ்?”, எனக் கேட்டபடி நதியாள் வந்து பார்த்தாள். 

“யாள்… செம வர்க் .. சூப்பர் க்ளாத்… யாரு டிசைன் பண்ணது?”, ரிஸ்.

“தெர்ல. மதுவோட பிரண்ட்கிட்ட சொல்லி செஞ்சதா சொன்னாங்க. நல்லா இருக்கு”, என நதியாளும் அதன் நேர்த்தியிலும் வேலைபாடிலும் ஈர்க்கப்பட்டு நின்றிருந்தாள்.

“புள்ளைங்களா இன்னும் ரெடி ஆகலியா நீங்க? சீக்கிரம்…. சீக்கிரம்….”, என மீனாட்சி பாட்டி அவசரப்படுத்தவும் தயாராகத் தொடங்கினாள் நதி. 

மணப்பெண் அலங்காரம் ப்யூட்டிசியன்கள் ஆரம்பிக்கவும் ரிஸ்வானா, ஸ்டெல்லா, மீரா மூவரும் மறுபக்கம் தயாராகிக் கொண்டு இருந்தனர். 

இவர்கள் ஏற்கனவே லெஹங்கா எடுத்திருந்ததால் அனைவரும் மலமலவென்று தயாராகி வெளியே சென்று வந்தவர்களை உபசரிக்கும் வேலையில் இறங்கினர். 

திலகவதி வந்து நதியாளுக்கு வைரத்தில் நகைகளை கொடுத்துவிட்டுச் செல்ல, தாமிரா உள்ளே வரவும் அவளிடம் அருகில் இருக்கும்படி உரைத்துவிட்டு வெளியே சென்றார்.

“ஹேய் தமி…. யூ லூக் கார்ஜியஸ்”, என நதியாள் அவளை பாராட்ட,” இன்னிக்கு நாங்க தான் உன்னை பாராட்டணும் யாள். யூ லூக் அமேஸிங்”, என சிரித்தபடிக் கூறினாள் தாமிரா. 

“ஹாஹா… மேடம் வந்திருக்காங்களா? நீ எங்க தங்கி இருந்த? நேத்தே வந்துட்டதா சொன்ன ஆனா வீட்டுக்கு வரவே இல்ல”, நதியாள். 

“இங்க என் ரிலேட்டீவ் வீடு இருக்கு யாள். அம்மா அங்க தங்கிக்க சொல்லிட்டாங்க. அவங்களும் கேட்டுட்டே இருந்ததால அங்க இருந்தேன். இன்னிக்கும் நாளைக்கும் உங்க கூட தான் ஸ்டே. பாட்டி வரலடா. ஊருக்கு நீங்க வரப்ப பாத்துக்கோங்க”, தாமிரா. 

“என்னப்பா ? சரி.. மேடம் உடம்பு பரவால்ல தானே?”, நதியாள். 

“அதுல்லாம் ஒன்னும் இல்ல யாள். எங்க மத்தவங்க எல்லாம்?”, என தாமிரா கேட்டாள். 

“யாள்…. இந்த நெக்லஸ் போட்டுக்க”, என சரண் உள்ளே வந்தான். 

“எத்தனை டா சரணா?”, என நதியாள் பாவமாக கேட்க, சரணோ விண்ணில் பறந்து கொண்டிருந்தான் தன் தேவதையை கண்டதும். 

தாமிராவும் லெஹங்கா தான் போட்டிருந்தாள். அழகாக தலைமுடியை முன்பக்கம் எடுத்துவிட்டு பக்கவாட்டில் சிறிதாக பின்னலிட்டு முடியை விரித்துவிட்டிருந்தாள். 

கண்களில் இருந்த கருவிழிகள் சரணை கட்டி நிறுத்திட, சில நொடிகள் அவன் இப்பூவுலகிலேயே இல்லை. 

“சரண் …குடுத்துட்டியா ?”, எனக் கேட்டபடி தேவ் அங்கே வந்தான். 

நதியாள் சிரித்தபடி சரணையும் தாமிராவையும் பார்த்திருக்க தேவ்வும் அவர்களின் நிலை கண்டு சிரித்தபடி சரணின் தோளில் தட்டினான். 

இத்தனை நேரம் தாமிராவும் அவனையே விழி எடுக்காது பார்ந்திருந்தாள் என்பதை நதியாள் நன்றாக கவனித்தபடி தன் வேலையை செய்து கொண்டிருந்தாள். 

“இந்தாங்க தாமிரா. இதை நதியாள போட்டுக்க சொல்லுங்க”, என சரண் அவள் கையில் கொடுத்துவிட்டு வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றான். 

தாமிரா தன்னிலை உணர்ந்து சன்னமாக சிரித்தபடி நதியாளைப் பார்க்க , அவள் இவளைக் கண்டு புன்னகைத்தபடி கை கட்டி புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க தாமிரா வெட்கத்தில் கன்னம் சிவந்து போனாள். 

“அடடா… அண்ணியாரே…. இப்படி வெட்கப்பட்டா என் அண்ணன் க்ளீன் போல்ட் தான். ஜஸ்ட் மிஸ்.. தேவ் சரண கூப்பிடுங்க இன்னொருமுறை அண்ணியார வெட்கப்பட சொல்லி சரண் பாக்கட்டும்”, என வம்பிலுத்தாள் நதி. 

“சரண் இப்பவே நிலையில்லாம தான் சுத்திட்டு இருக்க போறான் யாள். கவலை வேணாம் இன்னிக்கு நிறைய காதல் காட்சிகள் நமக்கு விருந்தா கிடைக்கும்னு நினைக்கறேன்”, என தேவ்வும் சிரித்தபடிக் கூறினான். 

“ஹேய்…என்னப்பா எல்லாரும் கிண்டல் பண்றீங்க….”, என தாமிரா தன் முகத்தை மறைக்க இன்னும் சிரிப்பு கூடியது அவ்விடத்தில். 

“சரி சரி. சீக்கிரம் ரெடி ஆகி வா யாள். எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க”, எனக் கூறி தேவ் வெளியே சென்றான். 

“இந்தா யாள்… டிரஸ் சூப்பர். யார் செலக்ஷன்?”, எனக் கேட்டபடி நதியாளுக்கு உதவினாள் தாமிரா. 

“இது கிப்ட் தமி. சரண், தேவ் மதுரன் மூனு பேரும் இதான் போடணும்னு குடுத்தாங்க. நாங்க எடுத்தது தனியா அங்க இருக்கு”, என நதியாள் விளக்கம் கொடுத்தபடி தயாராகிக் கொண்டு இருந்தாள். 

பத்து நிமிடத்தில் முழு அலங்காரமும் முடிந்து கண்ணாடி முன் நிற்கவும் சுந்தரம் தாத்தா, மீனாட்சி பாட்டி, சரோஜா பாட்டி, என அனைவரும் உள்ளே வந்தனர். 

மிதமான ஒப்பனையில் பௌர்ணமியாய் ஜொலிப்பவளைக் கண்டு அனைவரின் உள்ளமும் பூரித்து இருந்தது. 

அவள் மன சந்தோஷத்தின் வெளிப்பாடு அவளின் முகத்தில் நன்றாக தெரிந்தது. 

“என் கண்ணு….”,என மீனாட்சி பாட்டி நெட்டி முறிக்க, சரோஜா பாட்டி திருஷ்டி பொட்டை காதிற்கு கீழே பின்பக்கமாக வைத்தார். 

“ஓக்கேவா சுந்தா?”, என நதியாள் கேட்க, சுந்தரம் தாத்தா அவளின் முன்நெற்றியில் இதழ் பதித்து தன் உள்ளம் நிறைந்திருப்தை உணர்த்தினார். 

“வாங்க போலாம்”, என அழைத்துக் கொண்டு தாமிராவை நதியாள் அருகில் நிறுத்தியபடி மேடைக்கு அழைத்து வந்தனர். 

சரியாக அகரனும் அதே நேரம் வெளியே வர இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு மயங்கி நின்றுவிட்டனர். 

ஏறத்தாழ இருவருக்கும் ஒன்று போல நிறங்களும் , வேலைபாட்டில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. 

ஆணழகான அகரன் இன்னும் கம்பீரமும் பொலிவும் கூடியபடி வர, நதியாளை முழு பெண்ணிலவாய் கண்டு மயங்கி நின்றான். 

நதியாள் அவன் மீதிருந்து கண்ணெடுக்க முடியாமல் திணற, ஆண் அவன் நிலையோ படு மோசமாக இருந்தது. 

“அகன்….. “, நதியாள் மெதுவாக அவன் காதருகில் அழைத்தாள். 

“ப்ளீஸ் நதிமா… நானும் நீயும் எங்கயாவது ஓடிடலாமா ? இன்னிக்கு உன் முகமும் கண்ணும் என்னை அநியாத்துக்கு ஆட்டிவைக்குது…. ஓடிப்போலாமா?”, என அகரன் கேட்க, அருகில் இருந்த சரணும் தேவ்வும் அதிர்ந்து சிரிக்க, மதுரனோ அவன் காதருகில் வந்து,” நீ வழியறது ஒட்டு மொத்த ஊருக்கும் நாமலே அழைச்சி காட்டணுமா அகர்? கொஞ்சம் கண்ணை நேரா வை. அவ எங்கயும் போகமாட்டா”, என அவன் தலையை திருப்பினான். 

“அத நீ சொல்லாத…. மண்டபமே உன் ஜொள்ளுல மிதக்குதுன்னு எனக்கும் தெரியும்”, என அகரன் மதுரனிடம் ஸ்டெல்லாவை கண்களால் ஜாடை காட்ட , இப்போது அவ்விடத்தில் சிரிப்பு சத்தம் கூடியது. 

“சரி விடு விடு. இதுல்லாம் சகஜம் “, என மதுரன் ஸ்டெல்லா அருகில் சென்று நின்று கொண்டான். 

பின் விழா தொடங்கவும் அனைவரும் வந்து பரிசு கொடுத்து வாழ்த்துக் கூறிச் சென்றனர். 

அகரனும் நதியாளும் அவரவருக்கு தெரிந்தவர்களை மற்றவருக்கு அறிமுகப்படுத்தி நொடியும் நகராமலும், கண்களையும்  விலக்காமலும் நின்றிருந்தனர். 

ரிஸ்வானா ரஹீமுடன் மேடையேறி வாழ்த்து கூறி ஒன்றாக சென்று அமர்ந்து கொண்டனர். 

ஸ்டெல்லாவுடன் மதுரனும் சேர்ந்து வாழ்த்துக் கூறி தனியாக அமர்ந்து கொள்ள, சரணும் தாமிராவிடம் ஒரு கண்ணை வைத்தபடி அனைவரையும் கவனித்துக் கொண்டு இருந்தான். 

அனைவரும் அவரவர் ஜோடிகளுடன் இருப்பதைக் கண்ட தேவ் மீராவை ஏக்கமாக பார்க்க, மீரா தாமிராவுடன் பேசிக்கொண்டு நதியாளுக்கு வரும் பரிசுப் பொருட்களை வாங்கி வைத்த வண்ணம் இருந்தாள்.  

“ஹ்ம்ம் … நம்ம பாடு கஷ்டம் தான் போல டா தேவ். எப்ப அவ சமாதானம் ஆவாளோ? நாம எப்ப டூயட் பாட்றது?”, என நினைத்து பெருமூச்சு விட்டபடி சரணுடன் வேலைகளை கவனிக்கச் சென்றான். 

மீரா தேவ் சென்ற பிறகு அவன் சென்ற வழி பார்த்தவள் வலிமிகுந்த முறுவலை புரிந்து பழையபடி நின்றிருந்தாள். 

வினயும், பூரணணும் மண்டபத்தின் ஓரத்தில் இருந்து வெளியே சென்று அப்பொழுது தான் உள்ளே வருவதைப் போல வந்தனர்.

சரண் இருவரையும் யோசனையாக பார்த்துவிட்டு வரவேற்றான். 

நேராக இருவரும் மேடைக்குச் சென்று பரிசுப் பொருட்களை கொடுத்து விட்டு,” என்ன அகரன் சந்தோஷமா இருக்க போல?”, என பூரணன் கேட்டான். 

“ரொம்பவே சந்தோஷமா தான் இருக்கேன் பூரணன். நீ வரமாட்டன்னு நினைச்சேன் வந்துட்ட…”, அகரனும் சிரித்தபடி கேட்டான். 

“நீ அவ்வளவு கெஞ்சி கூப்பிடறப்ப வராமா இருந்தா நல்லா இருக்காதுல்ல அகரன். உங்க பொண்டாட்டி வேற லெவல்னு சொன்னீங்க… அதான் என்ன லெவல்னு பாத்துட்டு போகலாம்னு வந்தேன்”, பூரணன் நதியாளை கண்களால் பருகியபடி கூறினான். 

“டேய் பூரான்…. வாங்கனது மறந்துரிஞ்சா ? வந்தமா சாப்டமா போனோமான்னு இரு”, என நதியாள் சிரித்தபடி அவனை மட்டும் கனல் கக்கும் பார்வை பார்த்து கூறினாள். 

“என்னம்மா ஒரு தடவை நடந்தது மறுபடியும் நடக்கும்னு கனவு காணாத. உங்க இரண்டு பேரையும் நான் வாழவிடுவேன்னு கனவுல கூட நினைக்காதீங்க…. “, என வன்மம் பொங்க கூறியவன் உடனே மேடையில் இருந்து கீழிறங்கி சென்றான். 

வினய் இருவரையும் நக்கலாகவும், நதியாளை துகிலுறிக்கும் பார்வையும் பார்த்துச் சென்றான். 

நதியாள் இருவரையும் எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு சரணைப் பார்க்க, அவனும் அருகில் வந்தான். 

“யாள்…”, என சரண் ஆரம்பிக்க, ” நான் எதுவும் கேட்கல… அவன முடிஞ்சவரைக்கும் சீக்கிரம் அனுப்பற வழிய பாரு”, எனக் கூறி பழையபடி கலகலப்பாக நின்று கொண்டாள். 

“நதிமா… என்மேல கோவமா?”, அகரன். 

“உன் மேல எதுக்கு கோவம் ? அதுல்லாம் ஒன்னும் இல்ல அகன்.. அப்பறம் பேசிக்கலாம்”, எனக் கூறிவிட்டு திரும்பிக் கொண்டாள். 

“ஐ லவ் யூ டி பொண்டாட்டி”,  என அகரன் மெல்லமாகக் கூற, நதியாள் முகம் சிவந்து போனாள் வெட்கத்தில். 

நதியாளின் முகம் சிவப்பதைக் கண்ட அகரன், அவள் காதருகில் குனிந்து இன்னுள் சில காதல் வார்த்தைகள் உரைக்க, அதில் மேலும் செம்மைபெற்று அவனை அடிக்க அகரன் அவள் கைகளை பிடிக்கவென இருந்த சமயம் மைரா மேடைக்கு வந்தாள். 

அவள் கண்களில் ஏக்கம் இருந்ததோ என்று ஒரு கணம் யோசிக்க வைத்து மறுகணம் குழப்பியதாக தோன்றியது மீராவிற்கு. 

பின் மைரா பரிசு கொடுத்துவிட்டு கீழே சென்றவள் மதுரன் எங்கென கண்களால் துழாவினாள். 

மதனும் அவர் மனைவியும் உள்ளே வந்தவர்கள் மதுரனை அழைக்க மீண்டும் அனைவரும் மேடையெறினர். ஸ்டெல்லா கீழேயே தங்கிவிட தேவ் கூறிய வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். 

சந்திராகாந்தும், மதியும் சரிதாவுடன் மண்டபம் நுழைந்தனர். 

சரிதா அகரனையும் நதியாளையும் பொறாமையும் ஏக்கமும் கலந்த பார்வை பார்த்தவள், பின் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டாள். 

வினய் அவளருகில் வந்து அமர்ந்து கொண்டான். பூரணனை அப்பொழுதே அனுப்பிவைத்துவிட்டான் போலும். 

“என்ன வினய்… பெருசா ஏதோ புடுங்கப் போறதா சொன்ன? இங்க எல்லாரும் சந்தோஷமா ரிஷப்சன நடத்திட்டு இருக்காங்க. அகரனும் நதியாளும் நம்ம கைவிட்டு போயிடுவாங்களா?”, எனக் கேட்டாள் சரிதா. 

“இது நடந்துட்டா இரண்டு பேரும் சந்தோஷமா இருந்துடுவாங்களா? நான் பூரணன கைக்குள்ள போட்டு வச்சிருக்கேன். அவன் ஒரு வடிகட்டின முட்டாள் முரடன். ஏற்கனவே அவனுக்கும் அகரன் சரணுக்கும் முன்பகையும் இருக்காம். சோ நம்ம வேலை ஈசியா இருக்கும். அதுக்கான வேலைய ஆரம்பிச்சிட்டேன்…. இது தான் அவங்க கடைசியா சந்தோஷமா இருக்கற நாளா இருக்கும்”, என வன்மம் பொங்கக் கூறியவன் மேடையில் இருப்பவர்களைக் கண்டு வெறிப்பிடித்த நரியைப் போல சிரித்தான் வினய். 

மீராவின் தாயும், ஸ்டெல்லாவின் பெற்றோரும் அப்பொழுது தான் வந்தனர். சஞ்சயும், திலீப்பும் பரமசிவம் கூறும் பணிகளை சிரமேற்கொண்டு செய்துக்கொண்டிருந்தனர். 

“வாங்கம்மா…. வாங்கப்பா…. ஏன் இவ்வளவு நேரம்?”, என நதியாள் அவர்களைப் பார்த்துக் கேட்டாள். 

“கிளம்ப நேரம் ஆகிரிச்சி டா. இரண்டு பேரும் ரொம்ப காலம் சந்தோஷமா வாழணும் “, என ஸ்டெல்லாவின் பெற்றோர்கள் அவர்களை வாழ்த்தினர். 

மீராவின் தாயும் நதியாள் அகரனை வாழ்த்திவிட்டு கண்ணன் ராதாவிடம் நின்று பேசிக்கொண்டு இருந்தார். 

தொழில்துறை நண்பர்கள் முதல் கல்லூரி பள்ளி நண்பர்கள் வரை அனைவரும் இருக்க அகரனும் நதியாளும் ஒரு நொடி கூட ஆஸ்வாசம் செய்துக்கொள்ள நேரமில்லாமல் சென்றது. 

அனைத்து காதல் ஜோடிகளும் பரவசமாக சுற்றிக் கொண்டு வேலை செய்துக்கொண்டிருந்தனர். 

இரவு 9 மணிக்கு மேல் தான் இருவருக்கும் உட்காரவே நேரம் கிடைத்தது. 

“நதிமா… கால் வழிக்குதா டா ?”, அகரன் அவளின் கைகளைப்பிடித்தபடி கேட்டான். 

“ஆமா அகன். ரொம்ப டயர்ட்ஆ இருக்கு. பசி வேற எடுக்குது. பட் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அகன் ….”, என புன்னகையுடன் கூறினாள். 

“அகர்… வாங்க சாப்பிடலாம்”, என சரண் அழைக்க நண்பர்கள் கூட்டம் சூழ சாப்பிடும் இடத்திலும் கலாட்டாவுடன் விருந்துண்டு முடித்தனர். 

“டேய் சரணா….. இன்னும் எவ்வளவு நேரம் டா?”, நதியாள் கேட்டாள். 

“அவ்வளவு தான். இன்னும் அரலமணி நேரத்துல நீங்க கிளம்பலாம். நாங்க மத்த வேலை முடிச்சிட்டு வந்துடறோம் யாள்”, எனக் கூறி அவளின் முன்நெற்றியில் இதழ் பதித்து அவளின் கைபிடித்தபடி நின்றான் சரண். 

“என்னடா பாசபலர் படம் ஓட்றீங்களா?”, என மதுரனும் தேவ்வும் கிண்டல் அடித்தனர். 

“இல்லடா…. யாள் கூட நான் அதிகம் டைம் ஸ்பெண்ட் பண்ணது இல்ல. பட் இப்ப அவள பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு தோணுது. இத்தனை நாள் அண்ணனா  உன்னை கவனிக்காம இருந்ததுக்கு மன்னிச்சிடு டா யாள்குட்டி”, என சரண் உணர்ச்சி பொங்க கேட்டான். 

நதியாள் அவனின் நிலை உணர்ந்து,” போதும் டா. இதுக்கு மேல நீ விடாது கருப்புனு என்னை கிண்டல் பண்ற அளவுக்கு உனக்கு கல்யாணம் ஆனாலும் உன்னை தனியா விடாம கூடவே இருப்பேன். சம்மதமா டா சரணா?”, என லேசாக தலைசாய்த்து பவ்யமாக குரலில் மட்டும் குறும்பு காட்டிக் கேட்டாள். 

“வாலு…”, என சரண் அவளை அணைத்துக் கொண்டான்.

“போதும் போதும்….”, என அகரன் அவளை தன் கைவளைவில் நிறுத்திக் கொண்டான். 

“பொறாமையாம்”, என மதுரன் கிண்டல் செய்ய, ஸ்டெல்லா,” யாரது எங்க அண்ணனை கிண்டல் பண்றது?”, என மிரட்டும் தொணியில் கேட்டபடி அகரன் அருகில் நின்றுக் கொண்டு பழித்துக் காட்டினாள். 

“பாத்தியா எனக்கு சப்போர்ட்அ. என்னை பகைச்சிகிட்டா உனக்கு தான் கஷ்டம் மச்சி”, என அகரன் செல்லமாக மிரட்டினான். 

“அடேங்கப்பா …. ரொம்ப பயந்துட்டேன் டா…. “,  என மதுரனும் நடித்துக்காட்டி நக்கல் செய்ய, ஸ்டெல்லா அவனை அடிக்கவென அவ்விடமே கலகலப்பாக மாறியது. 

பின் சிறிது நேரத்தில் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். 

“அம்மா… நதியும் நம்ம கூட தானே வருவா?”, என அகரன் திலகவதியிடம் கேட்டான்.

திலகவதி அவனைத் திரும்பி பார்த்துவிட்டு தன் அத்தையிடம்,” அத்தை நதிய நம்ம வீட்டுக்கு தானே கூட்டிட்டு போகணும்?”, எனக் கேட்டார். 

“ஆமா திலகா…. ஆரத்தி எடுத்து உள்ள கூப்பிடணும். நீயும் செல்லம்மாவும் முன்ன போங்க. நாங்க பிள்ளைங்கள கூட்டிட்டு வந்துடறோம்”, என மீனாட்சி பாட்டி கூறியதைக் கேட்டவன் சிறு பிள்ளைப் போல தன் தாயைக் கட்டி கன்னத்தில் முத்தம் வைத்து ஓடினான். 

“அடேய்… இன்னும் சின்னப்புள்ளத்தனமா இப்படி இருக்கானே”, என முனகியபடி நகர்ந்தார் திலகவதி. 

“நதி…. நதி….. நதி…….”, என நதியாளை அழைத்தான் அகரன். 

“ஏன்டா ஏலம் விட்ற? என்ன சொல்லு”, என ஒரு சேரை அருகில் இழுத்துப் போட்டு அமர்ந்தாள். 

கல்யாண மண்டபத்தில் பொதுவாகவே வெளிக் கூட்டம் குறைந்தபின் சற்று நெருங்கிய சொந்தமும் நட்பும் மட்டுமே எப்பொழுதும் இருக்கும். அந்த நேரங்களில் நடக்கும் விளையாட்டுக்களும், பேச்சும், கிண்டல் கேலி என அனைவரும் இணக்கமாகவும், சந்தோஷமாகவும் கல்யாண வேலையை கவனித்தபடி பேசிக் கொண்டு இருப்பர். 

அது ஒரு அழகான தருணம் தான்… நம்முடன் வளர்ந்த நபருக்கோ, நாம் வளரும் சமயம் நம்மை ஈர்த்த நபருக்கோ, நம்முடன் நன்றாக பழகியவருக்கோ திருமணம் எனில் அங்கே நம் மனமும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டு இருக்கும். 

கூட்டம் குறைந்து சற்றே ஆசுவாசம் செய்தபடி கிடைக்கும் தருணம்.  அங்கே பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்தாலே நம்முள்ளும் உற்சாகம் பெருக்கெடுக்கும். சில மறக்க முடியாத நிகழ்வுகள், பேச்சு என அனைத்தும் நிச்சயமாக அத்தருணத்தில் இடம் பெறும். 

சில நேரங்களில் சண்டை வருவதும் அப்பொழுது தான்… ஆனால் இன்றும் இதுபோன்ற தருணங்கள் இனிமையான நினைவுகளைத் தான் நமக்கு பரிசளிக்கின்றன. 

என்னை பொறுத்தவரையில் நம்மைவிட  நம் முன்னோர் இத்தருணங்களை அதிகம் சந்தித்தவர்கள் , மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் தான்…. 

“இப்ப சொல்லு நாம ஓடிப்போலாமா?”, என அகரன் கேட்க நதியாள் அவனை துளைக்கும் பார்வை பார்த்தாள். 

“ஏன் நதிமா இப்படி பாக்கற?”, அகரன். 

“உனக்கு நட்டு கழன்டுரிச்சா அகன்?”, நதியாள் சந்தேகமான பார்வையுடன் கேட்டாள். 

“ஏன் இப்படி கேக்கற நதி?”, அகரன். 

“நான் உன் பொண்டாட்டி டா. என்கிட்ட ஓடிப்போலாமான்னு கேக்கற… காதலிக்கறப்ப தாலி கட்டுற.. ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசற நடந்துக்கற?”, நதியாள் லேசாக மென்னகை புரிந்தபடிக் கேட்டாள். 

அந்த அரைவெளிச்சத்தில் வேர்த்து அலங்காரம் முழுதும் கலைந்து களைத்திருந்த முகத்தை கண் இமைக்காது கண்டிருந்தான் அகரன். 

அவளின் அன்பு, அக்கறை, கோபம், சுட்டித்தனம், குழந்தைத்தனம், அதிகாரம், என அனைத்தும் உணர்ந்தவன் உணர்ந்து கொண்டிருப்பவன் அவன் ஒருவனே அல்லவா? 

பெற்றவரிடம் கூட இத்தனை குணமும் யாரும் காட்டியிருக்க வாய்பில்லை. ஆனால் அகரன் நதியாளின் அனைத்தும் தெரிந்து அவளை முழுதாய் உணர்ந்து வைத்திருந்தான். 

புரிதலும், உணர்தலும் வெவ்வேறு என்ற வித்தியாசம் புரிந்து அவளை உணரத் தொடங்கி இருந்தான். 

“டேய்… அகன்…அகன்…. என்ன என் முகத்துல அப்படி என்ன பாக்கற? நாம எப்ப வீட்டுக்கு போறது? எனக்கு தூக்கமா வருது”, என அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். 

“இப்ப நீ சந்தோஷமா இருக்கியா நதிமா?”, அகரன் அவளை தோளோடு அணைத்தபடிக் கேட்டான். 

“ரொம்பவே அகன்… என் ஏக்கம் தீர்ந்துரிச்சி… நீ சந்தோஷமா இருக்கியா அகன்?”, என தலை தூக்காமல் கண்ணை மட்டும் உயர்த்தி அகரனைப் பார்த்துக் கேட்டாள். 

அகரன் சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன் அவளின் முன்நெற்றியில் இதழ் பதித்து,” எப்பவும் உன்னை இப்படியே சந்தோஷமா வச்சிக்கணும்னு ஆசைபடறேன் நதி. நிச்சயம் வச்சிப்பேன். நீ என்ன கண் கலங்காம பாத்துப்பியா?”, என ஒரு கண் சிமிட்டிக் கேட்டான். 

“உன் கண் கலங்காம இருக்கறது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் முயற்சி செய்றேன் மிஸ்டர் நதியாள்….”,என அவளும் கண்ணடித்துக் கூறினாள். 

“எனக்கு உறுதி குடு”, என அகரன் வம்பிலுக்க,” அதுல்லாம் வாழ்ந்து தான் காட்டணும் டா என் மண்டு அகன்”, என நதியாள் அவன் தலையில் கொட்டினாள். 

“ஹல்லோ… இங்க எல்லாரும் இருக்கோம். கொஞ்சம் பாத்து நடந்துகிட்டா நல்லது”, என தேவ் அங்கே வந்து கூறி சென்றான். 

“அகர்.. யாள். வாங்க போகலாம்”, என சரண் அழைக்க அவர்கள் புறப்பட்டனர். 

வீட்டில் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். 

இருவரையுய் வெவ்வேறு அறையில் உறங்கச் சொல்லி பெரியவர்கள் உறங்கச் சென்றனர். 

அகரனும் நதியாளும் ஒருவரை ஒருவர் கண்ணும் மனதும் நிறைய பார்த்துவிட்டு, தங்கள் அறையில் புன்னகையுடன் உறங்கியிருந்தனர். 

இருவருக்கும் பால் கொடுக்க வந்த செல்லம்மாளும் திலகவதியும் இருவரும் உறங்குவதைக் கண்டு அறையை சாற்றி விட்டு வந்தனர். 

இருவரின் உதட்டிலும் புன்னகை உறைந்திருந்தது அவர்கள் மனது நிறைந்திருப்பதை உறுதி செய்யும் விதத்தில் …….

 

முந்தின அத்தியாயம் படிக்க .. 

அடுத்த அத்தியாயம் படிக்க .. 

Click to rate this post!
[Total: 0 Average: 0]
Post Views: 1,470
Tags: அகரநதிகாதல்நகைச்சுவை
Previous Post

47 – அகரநதி

Next Post

49 – அகரநதி

Next Post
3 – அகரநதி

49 - அகரநதி

Please login to join discussion
இயல்புகள்

நர்மதா சுப்ரமணியம்

January 26, 2023
0
1 – வலுசாறு இடையினில் 

16 – வலுசாறு இடையினில் 

January 25, 2023
0

33 – மீள்நுழை நெஞ்சே

January 20, 2023
0

Subscribe to our newsletter

Please wait...
Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
I agree to Terms of Service and Privacy Policy

        Terms & Conditions

            Privacy Policy

  • aalonmagari@gmail.com
  • 2022 Aalonmagari. All Rights Reserved.
Facebook Twitter Instagram
No Result
View All Result
  • Login
  • Sign Up
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
  • Category
    • மகரியின் பார்வையில்
    • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • புத்தகம் வாங்க
  • Login

© 2022 By - Aalonmagari.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!