மழை
போதாது இந்த வருகை..நித்தம் வரவேண்டும் ...என்னைக் காண...பூமியும் அழைக்கிறாள்....மழை இளவரசியை... - ஆலோன் மகரி
போதாது இந்த வருகை..நித்தம் வரவேண்டும் ...என்னைக் காண...பூமியும் அழைக்கிறாள்....மழை இளவரசியை... - ஆலோன் மகரி
கொடுப்பவன் கொடுக்கப் படவில்லை….நேசிப்பவன் நேசிக்கப் படவில்லை….உன்னை நீ யாரென நியமித்துக்கொள்…யாசிப்பவனாய் மட்டும் இறாதே….ஏமாற்றமே அணைக்கும் அடிக்கடி.... - ஆலோன் மகரி
உருண்ட நீரில் உச்சரிப்பு..... யாரும் கேட்பார் ......யாரோ கேட்பார்...... - ஆனால்உன் விழி என்மீதிருக்க ஆசை தான்...பேராசையாக இருந்தாலும்ஆசை ஆசை தான் உன்மீது ♥♥♥♥♥!!! - ஆலோன் மகரி
காகிதங்கள் நிறைந்தது....உன்னை கவியாய் ஊற்றமுயன்று முயன்று தோற்கிறேன் ....ஒவ்வொரு தோல்வியிலும்உன் நெஞ்சத்தை வென்றேன்...மீண்டும் தோற்கவே ஆசை ...உனக்காக தோற்றுஉன்னை வென்றிட... - ஆலோன் மகரி
அறியா பருவம் முதல் என் மனதின் முதல் அன்பனானவன்…. உன்னருகில் இருந்த தருணங்கள் குறைவே - அதில் நான் நிறைவாய் இருந்ததும் நிஜமே… என்னவென்று அறியும் முன்னே உண்டான அன்பு…. இடையில் சிலகாலம் காணாத போதும் மனதின் ஆழத்தில் வேரூன்றி நின்றுவிட்ட அன்பு…. ஏழு வருடங்கள்….. உன்னை காணவில்லை… உன் குரல் கேட்கவில்லை…...
கனவினை துறத்திட துணிந்தேன்…. - அதுஎனை விலகிட நினைத்தது…..காலங்கள் உருண்டோட … - நானும்அதனோடு நாட்களைக் கடந்தோட…..எண்ணிய காரியங்கள் ஈடேறவில்லை…. - நீநினைத்த யாவும் நடந்தேறியபின்….மீண்டும்……முதலில் இருந்து ஓடச் சொல்கிறாய்….ஈசா….உனை என்னுள் நிறைத்துள்ளேன்….உனையே திட்டித் தீர்க்கிறேன்….எனைத் தேடி வந்துவிடு…. - உன் உயிரைஉன்னோடு கொண்டு சென்றுவிடு…….இருவரும் தொடங்கலாம் மீண்டுமோர் அத்தியாத்தை….. - ஆலோன் மகரி
உனை பாடி காவியம் படைக்க எண்ணினேன் ...கவிதையாய் உருக வைத்தாய்....உன்னில் கரைந்து...என்னை வடிவமைத்தேன் ....இறுதியில் நீயாக மாறிவிட்டேன்.... - ஆலோன் மகரி
கடக்கின்ற நொடிகள்........நீளமாவதை உணர்கிறேன்.... - இன்னும்கடக்க வேண்டிய நீளம் எவ்வளவோ ?!இதுவரை காணா புது உணர்வு கொள்கிறேன்....கொள்ளும் உணர்வினை கொல்லவா?காரணமில்லா கோபங்கள்.....அன்புகாட்டும் இதயத்தை எனையறியாமல் தாக்குகிறேன்......விடை தெரியாது குழம்பி நிற்கிறேன்....வேண்டும் என யாசிக்கவில்லை....வேண்டாமென தூற்றவும் இல்லை....ஏனோ என் மனநிலையில் மாற்றம்...மாற்றத்தின் காரணமாய் குழப்பமா?மாற்றமே குழப்பமா ???!!! - ஆலோன் மகரி
வாழ்க்கையின் சாராம்சத்தை ருசிக்க ...... - இரண்டு துருவத்திலும்மிகவும் அத்தியாவசியம்....காதல் மட்டுமே.....- ஆலோன் மகரி
பல் வகை மனிதர்களை அறியும் நான்...உன் மனதினை அறியாது இருப்பேனோ?உலகம் ஆயிரம் சொல்லினும்... - நீஎனது தோழியே....உன் அடையாளம் காட்டி.... - என்தனித்துவத்தை ஒதுக்கி.... - நம்நட்பை கிள்ளியெறியாதே...... - ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….