aalonmagari

மழை

போதாது இந்த வருகை..நித்தம் வரவேண்டும் ...என்னைக் காண...பூமியும் அழைக்கிறாள்....மழை இளவரசியை... - ஆலோன் மகரி 

நீ யார்?

கொடுப்பவன் கொடுக்கப் படவில்லை….நேசிப்பவன் நேசிக்கப் படவில்லை….உன்னை நீ யாரென நியமித்துக்கொள்…யாசிப்பவனாய் மட்டும் இறாதே….ஏமாற்றமே அணைக்கும் அடிக்கடி.... - ஆலோன் மகரி 

ஆசை

உருண்ட நீரில் உச்சரிப்பு..... யாரும் கேட்பார் ......யாரோ கேட்பார்...... - ஆனால்உன் விழி என்மீதிருக்க ஆசை தான்...பேராசையாக இருந்தாலும்ஆசை ஆசை தான் உன்மீது ♥♥♥♥♥!!! - ஆலோன் மகரி

வெற்றி

காகிதங்கள் நிறைந்தது....உன்னை கவியாய் ஊற்றமுயன்று முயன்று தோற்கிறேன் ....ஒவ்வொரு தோல்வியிலும்உன் நெஞ்சத்தை வென்றேன்...மீண்டும் தோற்கவே ஆசை ...உனக்காக தோற்றுஉன்னை வென்றிட... - ஆலோன் மகரி

பிறந்தநாள் வாழ்த்துகள்

அறியா பருவம் முதல் என் மனதின் முதல் அன்பனானவன்…. உன்னருகில் இருந்த தருணங்கள் குறைவே - அதில் நான் நிறைவாய் இருந்ததும் நிஜமே… என்னவென்று அறியும் முன்னே உண்டான அன்பு…. இடையில் சிலகாலம் காணாத போதும் மனதின் ஆழத்தில் வேரூன்றி நின்றுவிட்ட அன்பு…. ஏழு வருடங்கள்….. உன்னை காணவில்லை… உன் குரல் கேட்கவில்லை…...

மீண்டும் ஓர் அத்தியாயம்

கனவினை துறத்திட துணிந்தேன்…. - அதுஎனை விலகிட நினைத்தது…..காலங்கள் உருண்டோட … - நானும்அதனோடு நாட்களைக் கடந்தோட…..எண்ணிய காரியங்கள் ஈடேறவில்லை…. - நீநினைத்த யாவும் நடந்தேறியபின்….மீண்டும்……முதலில் இருந்து ஓடச் சொல்கிறாய்….ஈசா….உனை என்னுள் நிறைத்துள்ளேன்….உனையே திட்டித் தீர்க்கிறேன்….எனைத் தேடி வந்துவிடு…. - உன் உயிரைஉன்னோடு கொண்டு சென்றுவிடு…….இருவரும் தொடங்கலாம் மீண்டுமோர் அத்தியாத்தை….. - ஆலோன் மகரி

மாறிவிட்டேன்

உனை பாடி காவியம் படைக்க எண்ணினேன் ...கவிதையாய் உருக வைத்தாய்....உன்னில் கரைந்து...என்னை வடிவமைத்தேன் ....இறுதியில் நீயாக மாறிவிட்டேன்.... - ஆலோன் மகரி

மாற்றம்

கடக்கின்ற நொடிகள்........நீளமாவதை உணர்கிறேன்.... - இன்னும்கடக்க வேண்டிய நீளம் எவ்வளவோ ?!இதுவரை காணா புது உணர்வு கொள்கிறேன்....கொள்ளும் உணர்வினை கொல்லவா?காரணமில்லா கோபங்கள்.....அன்புகாட்டும் இதயத்தை எனையறியாமல் தாக்குகிறேன்......விடை தெரியாது குழம்பி நிற்கிறேன்....வேண்டும் என யாசிக்கவில்லை....வேண்டாமென தூற்றவும் இல்லை....ஏனோ என் மனநிலையில் மாற்றம்...மாற்றத்தின் காரணமாய் குழப்பமா?மாற்றமே குழப்பமா ???!!! - ஆலோன் மகரி

சாராம்சம்

வாழ்க்கையின் சாராம்சத்தை ருசிக்க ...... - இரண்டு துருவத்திலும்மிகவும் அத்தியாவசியம்....காதல் மட்டுமே.....- ஆலோன் மகரி

நட்பு

பல் வகை மனிதர்களை அறியும் நான்...உன் மனதினை அறியாது இருப்பேனோ?உலகம் ஆயிரம் சொல்லினும்... - நீஎனது தோழியே....உன் அடையாளம் காட்டி.... - என்தனித்துவத்தை ஒதுக்கி.... - நம்நட்பை கிள்ளியெறியாதே...... - ஆலோன் மகரி

Page 16 of 27 1 15 16 17 27

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!