aalonmagari

எதுவோ… நானோ….

வெட்டவெளியில் தான் திசை தெரியாது நிற்கிறேன் ....இருட்டென்பது தனியே பிரித்து காண அவசியமில்லாத நாட்கள் ...வடகயிறு கொண்டு மனதை எதுவோ இறுக்குகிறது ...மூச்சு நிற்கும் நொடியில் சற்று ஆசுவாசமெடுக்க வைக்கிறது ...அனுமதி கேளாமல் மீண்டும் மீண்டும் இதுவே நிகழ்வுகளாக தொடர்கிறது ....பெருங்குரலெடுத்து கத்த நினைக்கிறேன் ...அடிகுரல் கூட வெளி வர மறுக்கிறது ...இந்நிலை...

தூரம்

என்னவென்று அறியும் முன்னே ....உன்னில் இருந்து என்னைப் பிரித்தாய்....இன்றே உணர்ந்தேன் உந்தன் காதலை...மீண்டும் இணையமுடியா தூரத்தில்.... - ஆலோன் மகரி 

நிலை கொள்ளா ஆன்மா

மனதில் ஆடும் சொற்கள்..... ஊசலாடும் உணர்வுகள்..... வருணனின் வருடல்கள்.... காலதேவனின் ஒளடதங்கள்.... இவற்றுக்கிடையில்....... நிலைகொள்ளா ஆன்மாவாக நான்.... - ஆலோன் மகரி

அன்பின் ஆழம் என்னவோ?

உனைவிட்டு பிரிய பார்க்கிறேன்..... உன் மீதான அன்பு ஆழப்பாய்வதால்..... பிரிய எத்தணிக்கும் போது பிரியம் கூட..... மீண்டும் தூரச்செல்ல பார்க்கிறேன்.... முடியாதென முதல் முறை - என் முயற்சியை கைவிடுகிறேன்..... அன்பு ஆழப்பாய்வதற்காக..... - ஆலோன் மகரி 

மழை

போதாது இந்த வருகை..நித்தம் வரவேண்டும் ...என்னைக் காண...பூமியும் அழைக்கிறாள்....மழை இளவரசியை... - ஆலோன் மகரி 

நீ யார்?

கொடுப்பவன் கொடுக்கப் படவில்லை….நேசிப்பவன் நேசிக்கப் படவில்லை….உன்னை நீ யாரென நியமித்துக்கொள்…யாசிப்பவனாய் மட்டும் இறாதே….ஏமாற்றமே அணைக்கும் அடிக்கடி.... - ஆலோன் மகரி 

ஆசை

உருண்ட நீரில் உச்சரிப்பு..... யாரும் கேட்பார் ......யாரோ கேட்பார்...... - ஆனால்உன் விழி என்மீதிருக்க ஆசை தான்...பேராசையாக இருந்தாலும்ஆசை ஆசை தான் உன்மீது ♥♥♥♥♥!!! - ஆலோன் மகரி

வெற்றி

காகிதங்கள் நிறைந்தது....உன்னை கவியாய் ஊற்றமுயன்று முயன்று தோற்கிறேன் ....ஒவ்வொரு தோல்வியிலும்உன் நெஞ்சத்தை வென்றேன்...மீண்டும் தோற்கவே ஆசை ...உனக்காக தோற்றுஉன்னை வென்றிட... - ஆலோன் மகரி

பிறந்தநாள் வாழ்த்துகள்

அறியா பருவம் முதல் என் மனதின் முதல் அன்பனானவன்…. உன்னருகில் இருந்த தருணங்கள் குறைவே - அதில் நான் நிறைவாய் இருந்ததும் நிஜமே… என்னவென்று அறியும் முன்னே உண்டான அன்பு…. இடையில் சிலகாலம் காணாத போதும் மனதின் ஆழத்தில் வேரூன்றி நின்றுவிட்ட அன்பு…. ஏழு வருடங்கள்….. உன்னை காணவில்லை… உன் குரல் கேட்கவில்லை…...

மீண்டும் ஓர் அத்தியாயம்

கனவினை துறத்திட துணிந்தேன்…. - அதுஎனை விலகிட நினைத்தது…..காலங்கள் உருண்டோட … - நானும்அதனோடு நாட்களைக் கடந்தோட…..எண்ணிய காரியங்கள் ஈடேறவில்லை…. - நீநினைத்த யாவும் நடந்தேறியபின்….மீண்டும்……முதலில் இருந்து ஓடச் சொல்கிறாய்….ஈசா….உனை என்னுள் நிறைத்துள்ளேன்….உனையே திட்டித் தீர்க்கிறேன்….எனைத் தேடி வந்துவிடு…. - உன் உயிரைஉன்னோடு கொண்டு சென்றுவிடு…….இருவரும் தொடங்கலாம் மீண்டுமோர் அத்தியாத்தை….. - ஆலோன் மகரி

Page 17 of 28 1 16 17 18 28

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!