Tag: அகரநதி

3 – அகரநதி

34 – அகரநதி

34 - அகரநதி ஸ்வாமி சந்நிதியில் அதிர்ச்சியின் உச்சத்தில் அங்கிருந்த அனைவரும் நின்றிருக்க, அகரன் வினயை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டு இருந்தான். அவனின் மனதில் வினயைக் கொன்றுவிடும் அளவிற்கு கோபம் கொதித்துக்கொண்டு இருந்தது. மதுரனும் வினயைக் கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டு இருந்தான். சரியான தருணத்தில் மதுரன் வினயை தடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் எவராலும் அந்த சம்பவத்தை ஜீரணிக்க முடிந்திருக்காது. வினய் கொண்டு வந்த தாலியை மதுரன் தடுக்க, ஸ்வாமி பாதத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட பொன்னாலான மாங்கல்யத்தை ஐயர் வெளியே ...

3 – அகரநதி

33 – அகரநதி

33 - அகரநதி                                          நடு இரவில் ஊருக்கு வந்த அகரனும் சரணும் நேராக அகரனின் இல்லத்திற்கு வந்தனர். திலகவதி கதவைத் திறந்துவிட்டு அவர்களுக்கு சாப்பிட தோசையும் பாலும் கொடுத்தார். பின் இருவரையும் சீக்கிரம் காலையில் எழுந்துக் கொள்ளச்சொல்லிவிட்டு சென்று உறங்கி விட்டார். "டேய்…. என்னடா நடக்குது இங்க? எதுக்கு இப்ப என்னை அவசரமா ஊருக்கு கூட்டிட்டு வந்த? அம்மாவும் ஒன்னும் சொல்லாம போறாங்க", அகரன் சரணைக் கேட்டான். "பெருசா ஒன்னுமில்ல மச்சான். எல்லாம் காலைல ...

3 – அகரநதி

32 – அகரநதி

32 - அகரநதி வீட்டில் கால் வைக்கும் சமயம் ஸ்டெல்லா யாரையோ கெட்அவுட் என கத்தியது தான் அனைவரின் செவிகளிலும் விழுந்தது. யாரிடம் அவள் இப்படிக்  கத்திக்கொண்டு இருக்கிறாள் என்கிற யோசனையுடன் முதலில் சரண் தான் உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து அகரனும் சிதம்பரமும் உள்ளே வந்தனர். நதியாளும் சஞ்சயும் பரமசிவத்தைக்  கைத்தாங்கலாகப்  பிடித்தபடி மெல்ல உள்ளே வந்தனர். அங்கே சரிதா வினயின் பின்னே நின்றபடி ஸ்டெல்லாவை முறைத்துக்கொண்டு இருந்தாள். சக்ரதேவும் மீராவும் சங்கடமாக நெளிந்தபடி நின்றிருக்க, ...

3 – அகரநதி

31 – அகரநதி

31 - அகரநதி சரணுக்கு போன் கால் வந்தததும் பதற்றமாய் மூவரும் கிளம்பி ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மதுரன் வரவேற்பறையில் நின்றிருந்தான். அவனைக் கண்ட நதியாள் யோசனையாக அகரனைப் பார்க்க , அகரன் சரணைப் பார்த்தான். "அவர் தான் கால் பண்ணாரு. அப்பாக்கு ஆக்சிடெண்ட்னு…", சரண் பதில் கொடுத்தபடி அவனருகில் சென்றான். "பெரியப்பாக்கா? என்னாச்சி?", நதியாள் பதறிப்போய் கேட்டாள். "ஆமா. சஞ்சய், மாமா ,அப்பா எல்லாரும் ரோட் ஓரமா நின்னுட்டு இருந்து இருக்காங்க. ஈ.சி.ஆர்ல ...

3 – அகரநதி

30 – அகரநதி

30 - அகரநதி ஹோட்டல் வந்து சேர்ந்தவர்கள் மைரா இருக்கும் இடம் அறிந்து அங்கே சென்றனர். நதியாள் அகரனையும் சரணையும் கடந்து கோபத்தில் முன்னால் சென்றாள். அவள் வருவதை தன்னெதிரில் இருக்கும் கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டு இருந்தான் மைராவுடன் அமர்ந்திருந்தவன். அவள் நடையின் வேகம், அவளின் வனப்பு என்று அனைத்தையும் தன் முன்னால் இருக்கும் கறி இரசத்தைக் குடித்தபடிக் கண்ணாடியில் இரசித்துக்கொண்டு இருந்தான். மைரா பேசுவதை காதில் வாங்காமல் நதியாளைக் கண்களால் களவாடியபடி இருந்தான் அவன். மைராவின் ...

3 – அகரநதி

29 – அகரநதி

29 - அகரநதி அகரன் வீட்டின் கதவை திறந்ததும், அந்த வீட்டை கண்டவள் அப்படியே ஒரு நொடி திகைத்து நின்று , ஊரில் இருக்கும் தன் அறைக்கு வந்து விட்டோமோ என்று தான் எண்ணினாள். அவள் அறைக்கும் இந்த வீட்டின் ஹாலிற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை என்று தான் கூறவேண்டும். கூர்ந்து கவனித்தால் சிறிதாக ஒன்று இரண்டு பர்னிச்சர் மட்டுமே மாறுபட்டு இருப்பது தெரிந்தது. அத்தனை நேர்த்தியாக இருந்ததோடு, அவளின் அறை ...

3 – அகரநதி

28 – அகரநதி

28 - அகரநதி அகரனின் அறையில் அவனுக்கு முன் காத்திருந்த நதியாள், அவன் உள்ளே நுழையும் சமயம் சரியாக அவளின் போனில் அவனது புகைப்படத்துடன் பேசிக்கொண்டு இருந்தாள். "ஏய் அகன்…. நான் கேள்வி கேட்டா நீ பதில் சொல்ல மாட்டியா? என்னைய திருப்பி கேக்கற? உனக்கு அவ்வளவு தைரியம் வந்துரிச்சா ? இந்த நதி மேல பயம் இல்லாம போச்சி உனக்கு. இருடா உன்ன கல்யாணம் பண்ணி ஒரு வழி பண்றேன். அய்யோ ...

3 – அகரநதி

27 – அகரநதி

27 - அகரநதி வளர்பிறை நிலவை இரசித்தபடி நின்றிருந்த நதியாளை அகரன் கண்ணிலும் இதயத்திலும் நிறைத்துக் கொண்டான். முகில் மறைத்த நிலவின் ஒளியில் நதியாளும் அகரனும் காதல் சிற்பங்கள் ஊடலில் லயித்திருப்பதைப் போல நின்றிருந்தனர்.உண்மையில் ஊடல் தானோ இருவருக்கும்? "என்னாச்சி நதி? ஏன் அமைதியா இருக்க?", அகரன் நதியை தோள் திருப்பிக் கேட்டான். "என்னை கல்யாணம் பண்ணிக்கறியா அகன்?", நதியாள் அவனின் கண் பார்த்துக் கேட்டாள். அவளின் கேள்வி நிஜம் தானா? இல்லை கனவா? அகரன் திகைத்து அவளைப் ...

3 – அகரநதி

26 – அகரநதி

26 - அகரநதி அகரன் நதியாளிடம் மன்னிப்பு கேட்கும் விதத்தைப்  பார்த்துக்  கதவருகில் நின்ற உருவம் அதிர்ச்சியில் உறைந்து நின்றது. நதியாள் கதவை நோக்கித்  திரும்பும் சமயம் தான், அந்த உருவத்தைக்  கவனித்தாள். சட்டென்று அகரனை திரும்பிப்  பார்க்க இன்னும் நதியாள் அப்படியே நிற்பதைக் கண்டு, அவனும் அவளை பார்த்துவிட்டு அவளின் பார்வைக்  கதவருகில் நிற்பதைக் கண்டு, அவனும் பார்க்க அந்த உருவத்தைக் கண்டான். "தாத்தா….. எப்ப வந்தீங்க?", அகரன் எழுந்து அவர் அருகில் ...

3 – அகரநதி

25 – அகரநதி

25 - அகரநதி அகரன், நதியாள், சஞ்சய் மூவரும் அந்த ரெஸ்டாரெண்டின் உள்ளே நுழையும் சமயம் சக்ரதேவ்வும் , சரிதாவும் உள்ளிருந்து வெளியே வந்தனர்."ஹேய் அகர்...எப்படி டா இருக்க? ஹாய் நதியாள் எப்படி இருக்க?", சக்ரதேவ்."நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க? ஹலோ சிஸ்டர்", என அகரன் தேவ்விடம் பேசிவிட்டு சரிதாவிடம் நலம் விசாரித்தான்."சிஸ்டரா….. மிஸ்டர் நான் உங்களுக்கு சிஸ்டர் இல்லை. என்னை பேர் சொல்லி கூப்பிட்டா போதும்", சரிதா ...

Page 3 of 6 1 2 3 4 6

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!