வாராயோ ?
சிதறிய சிற்பங்கள்....தேர்ந்தெடுக்கும் சிற்பிகள்...பவள சிரிப்பில்....சிதறும் முத்துக்களாய்...உன் மின்னல் சிரிப்பு....சிதறிய நெஞ்சத்தை...கோர்த்தெடுக்க வாராயோ..... - ஆலோன் மகரி
சிதறிய சிற்பங்கள்....தேர்ந்தெடுக்கும் சிற்பிகள்...பவள சிரிப்பில்....சிதறும் முத்துக்களாய்...உன் மின்னல் சிரிப்பு....சிதறிய நெஞ்சத்தை...கோர்த்தெடுக்க வாராயோ..... - ஆலோன் மகரி
காமத்தில் இழுத்தனைக்கும் பொழுதிலும்....காதலை உணர்த்த...... - உன்னால்மட்டுமே முடிகிறது.... - ஆதலால்உனை பிரியா வரம் வேண்டி.....இயற்கையிடம் பிச்சை கேட்கிறேன்... ♥♥♥ - ஆலோன் மகரி
திமிராய் நிராகரத்தவளே... - உன்திமிர் கண்டே அடிமையாகிபோனேன்....நம் ஒழுக்கத்தின் திமிரை ஒன்றாக்கி புது திமி(உயி)ர் உருவாக்குவோம் வா...... - ஆலோன் மகரி
இரசனை தான் பல இராசயன மாற்றங்களை இயக்க வைக்கிறது ....மனதிலும்...உடலிலும் ...இயற்கையிலும்....இறுதியில் தமிழிலும்....மூச்சுமுட்ட முட்ட காதலனவனின் இதழணைத்த கிறக்கத்தில் நான்...... - ஆலோன் மகரி
நடந்தாலும் அமர்ந்தாலும்….பசித்தாலும் புசித்தாலும்….எதனோடும் நானல்ல…. - உன்இடர்பாடும் பெரிதல்ல….கண்டும் காணாமல்….பேசியும் பேசாமல்….உண்மை ஒளித்து - நீவாய்மை உயர்த்த…நின்றாலும் ஜதிமாறா…ஸ்வரங்கள் பாடி ….லயம் இயைந்து வாழ்கிறேன் - உன் மடியமர்ந்து…. - ஆலோன் மகரி
இருதுருவங்களின் தோள்களில் ….கயிற்றைக் கட்டி….நீட்டி இழுத்து முறுக்கியிருக்கும் இருமுனையில்….ஆலமரத்தின் விழுது படர்ந்த…அகன்ற தேக்கு மரக்கிளையில் ….இருதுருவங்களையும் ஒன்றிணைத்து….தனியே கிளையில் ஏற கனத்து நின்ற நொடி….பாதம் தொட வந்த அலை நுரைகளில்….தாயுமானவனின் முகம் கண்டு…மகிழ்ச்சியை முகத்தில் செலுத்த மறந்து…..அவன் முகம் காண முயல்கையில்- என்இடைத்தூக்கி அம்மரக்கொடியில் அமரவைத்தான்…..தோழனவன் மடி சாய்ந்து…முன்னும் பின்னும் ஆடும் ஊஞ்சலில் கண்ணயர்ந்த நேரம் தான்…அவன் தூரிகையை கையில் பிடித்து….எங்களில் அவனைப் பிரித்து..."ஊஞ்சலாடும் காரிகை இவள்" எனதனியே சாயம் ...
காயமெல்லாம் காய்ந்து போகத்தான் முயல்கிறது...காலமும் கடந்து போகத்தான் நினைக்கிறது.... எவ்வினையும் நல்வினையாகத்தான் தெரிகிறது....எதிர்வரும் இன்னலுக்கு எவ்வினை ஆற்றுவது??காத்திருந்த காலமும் தான் வந்து சேருமா?காத்திருத்தலே இக்காற்றினிலில் கலந்திருத்கிறதா ?மாற்றம் தேடும் பாதையில் இருந்தும்.....மாற்றமில்லாத நிகழ்வுகளாகத் தான் நடக்கிறது.... எந்த மனிதரும் நிரந்தரமில்லை....எந்த இலக்கும் மொத்த வாழ்வில்லை....இலக்குகளை எட்டாமல் தோற்கலாம்....வாழ்விலும் வாழாமல் தோற்கலாம்....தோற்றல் பொதுவானது....எழுவது தான் எனது இயல்பானது....மீண்டும் விழுந்து கிடக்கிறேன்....எனது இயல்புடனே வாழவும் முயற்சிக்கிறேன்....போட்டியில் தோற்கலாம்....இயல்புகள் தோற்பதில்லை..... - ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….