எப்பொழுது
மனதில் பதிந்த பார்வை .....செவிதனில் நுழைந்த வார்த்தைகள் ....கண்களில் விழும் பிம்பமாய் நீ ....இதயத்தில் நுழைந்தது எப்பொழுது ......????? - ஆலோன் மகரி
மனதில் பதிந்த பார்வை .....செவிதனில் நுழைந்த வார்த்தைகள் ....கண்களில் விழும் பிம்பமாய் நீ ....இதயத்தில் நுழைந்தது எப்பொழுது ......????? - ஆலோன் மகரி
நிறைய சொல்ல நினைத்தும்வெளிவராத சொற்கள் .....ஒன்றும் இல்லை பேசதடையின்றி தாரை வார்க்கும் உதடுகள் ....இரண்டும் உணர்ந்தேன்உன் கருவிழியின் சிறையில் ....ஆளுனர்-க்கு மனு அனுப்பினேன் ...இச்சிறையில் இருந்து மீளாதிருக்க .... - ஆலோன் மகரி
இன்சொல் நீ உரைத்திட்டால்இவ்வுலகம் வண்ணமயமாகுதடி ....கொடுஞ்சொல் நீ கூறிவிட்டால் - உன் எண்ணங்களே என் உலகென ஆகுதடி ....செங்கோல் ஆட்சி செய்த நீ ...கொடுங்கோல் எடுத்தாயோ ....என்னை மட்டும் உன்னோடு இருத்திக்கொள்ள ...?????? - ஆலோன் மகரி
தம்பூராவாக என் இரத்த நாளங்களே மாறி விடுகிறது உன் கண்கள் காணும்போதெல்லாம் ....தனியே ஓர் தம்பூரா உனக்கெதற்கு ?? - ஆலோன் மகரி
வெண்பட்டு சூடி தன்னுடல் மறைக்கும் பெண் போல .....உன் முகம் மறைத்து ....நாணச் சிவப்பை ஒளித்து ....புறக்கண் பார்வைக்கு வெள்ளைச்சோலையாய் மாறினாலும் ...என் அகக்கண் கொண்டு .... - உன் பொய்யெனும் துகிலுறித்து உனது வர்ணஜாலங்களை கண்டுவிட்டேன் ....... !!!! - ஆலோன் மகரி
என் கைப்பிடித்து செல்லாமல் .. உன் பாதம் பதித்துச் செல்வதேனோ? - ஆலோன் மகரி
தடுமாறி விழுந்தாலும் உன் இருதய கூட்டினுள் விழ வேண்டும்.... உன் மீதான என் நேசத்தை உன்னுள் அளந்து பார்த்திட...... - ஆலோன் மகரி
என்னவென்று அறியும் முன்னே ....உன்னில் இருந்து என்னைப் பிரித்தாய்....இன்றே உணர்ந்தேன் உந்தன் காதலை...மீண்டும் இணையமுடியா தூரத்தில்.... - ஆலோன் மகரி
உனைவிட்டு பிரிய பார்க்கிறேன்..... உன் மீதான அன்பு ஆழப்பாய்வதால்..... பிரிய எத்தணிக்கும் போது பிரியம் கூட..... மீண்டும் தூரச்செல்ல பார்க்கிறேன்.... முடியாதென முதல் முறை - என் முயற்சியை கைவிடுகிறேன்..... அன்பு ஆழப்பாய்வதற்காக..... - ஆலோன் மகரி
உருண்ட நீரில் உச்சரிப்பு..... யாரும் கேட்பார் ......யாரோ கேட்பார்...... - ஆனால்உன் விழி என்மீதிருக்க ஆசை தான்...பேராசையாக இருந்தாலும்ஆசை ஆசை தான் உன்மீது ♥♥♥♥♥!!! - ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….