Tag: காதல்

எப்பொழுது

மனதில் பதிந்த பார்வை .....செவிதனில் நுழைந்த வார்த்தைகள் ....கண்களில் விழும் பிம்பமாய் நீ ....இதயத்தில் நுழைந்தது எப்பொழுது ......????? - ஆலோன் மகரி

மீள்

நிறைய சொல்ல நினைத்தும்வெளிவராத சொற்கள் .....ஒன்றும் இல்லை பேசதடையின்றி தாரை வார்க்கும் உதடுகள் ....இரண்டும் உணர்ந்தேன்உன் கருவிழியின் சிறையில் ....ஆளுனர்-க்கு மனு அனுப்பினேன் ...இச்சிறையில் இருந்து மீளாதிருக்க .... - ஆலோன் மகரி

கொடுங்கோல்

இன்சொல் நீ உரைத்திட்டால்இவ்வுலகம் வண்ணமயமாகுதடி ....கொடுஞ்சொல் நீ கூறிவிட்டால் - உன் எண்ணங்களே என் உலகென ஆகுதடி ....செங்கோல் ஆட்சி செய்த நீ ...கொடுங்கோல் எடுத்தாயோ ....என்னை மட்டும் உன்னோடு இருத்திக்கொள்ள ...?????? - ஆலோன் மகரி 

தம்பூரா

தம்பூராவாக என் இரத்த நாளங்களே மாறி விடுகிறது உன் கண்கள் காணும்போதெல்லாம் ....தனியே ஓர் தம்பூரா உனக்கெதற்கு ?? - ஆலோன் மகரி

வெள்ளை ரோஜா

வெண்பட்டு சூடி தன்னுடல் மறைக்கும் பெண் போல .....உன் முகம் மறைத்து ....நாணச் சிவப்பை ஒளித்து ....புறக்கண் பார்வைக்கு வெள்ளைச்சோலையாய் மாறினாலும் ...என் அகக்கண் கொண்டு .... - உன் பொய்யெனும் துகிலுறித்து உனது வர்ணஜாலங்களை கண்டுவிட்டேன் ....... !!!! - ஆலோன் மகரி

பாதம்

என் கைப்பிடித்து செல்லாமல் .. உன் பாதம் பதித்துச் செல்வதேனோ? - ஆலோன் மகரி

விழ வேண்டும்

தடுமாறி விழுந்தாலும் உன் இருதய கூட்டினுள் விழ வேண்டும்.... உன் மீதான என் நேசத்தை உன்னுள் அளந்து பார்த்திட...... - ஆலோன் மகரி

தூரம்

என்னவென்று அறியும் முன்னே ....உன்னில் இருந்து என்னைப் பிரித்தாய்....இன்றே உணர்ந்தேன் உந்தன் காதலை...மீண்டும் இணையமுடியா தூரத்தில்.... - ஆலோன் மகரி 

அன்பின் ஆழம் என்னவோ?

உனைவிட்டு பிரிய பார்க்கிறேன்..... உன் மீதான அன்பு ஆழப்பாய்வதால்..... பிரிய எத்தணிக்கும் போது பிரியம் கூட..... மீண்டும் தூரச்செல்ல பார்க்கிறேன்.... முடியாதென முதல் முறை - என் முயற்சியை கைவிடுகிறேன்..... அன்பு ஆழப்பாய்வதற்காக..... - ஆலோன் மகரி 

ஆசை

உருண்ட நீரில் உச்சரிப்பு..... யாரும் கேட்பார் ......யாரோ கேட்பார்...... - ஆனால்உன் விழி என்மீதிருக்க ஆசை தான்...பேராசையாக இருந்தாலும்ஆசை ஆசை தான் உன்மீது ♥♥♥♥♥!!! - ஆலோன் மகரி

Page 2 of 8 1 2 3 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!