வெற்றி
காகிதங்கள் நிறைந்தது....உன்னை கவியாய் ஊற்றமுயன்று முயன்று தோற்கிறேன் ....ஒவ்வொரு தோல்வியிலும்உன் நெஞ்சத்தை வென்றேன்...மீண்டும் தோற்கவே ஆசை ...உனக்காக தோற்றுஉன்னை வென்றிட... - ஆலோன் மகரி
காகிதங்கள் நிறைந்தது....உன்னை கவியாய் ஊற்றமுயன்று முயன்று தோற்கிறேன் ....ஒவ்வொரு தோல்வியிலும்உன் நெஞ்சத்தை வென்றேன்...மீண்டும் தோற்கவே ஆசை ...உனக்காக தோற்றுஉன்னை வென்றிட... - ஆலோன் மகரி
உனை பாடி காவியம் படைக்க எண்ணினேன் ...கவிதையாய் உருக வைத்தாய்....உன்னில் கரைந்து...என்னை வடிவமைத்தேன் ....இறுதியில் நீயாக மாறிவிட்டேன்.... - ஆலோன் மகரி
வாழ்க்கையின் சாராம்சத்தை ருசிக்க ...... - இரண்டு துருவத்திலும்மிகவும் அத்தியாவசியம்....காதல் மட்டுமே.....- ஆலோன் மகரி
தினம் தினம் பயந்தது.....உயிர் வர போகவென இருந்தது.....எனை விட்டு போனாயே....சென்ற உயிர் திரும்பவில்லை...நிரந்தர உறக்கத்தில்.....என் கைபேசி.... - ஆலோன் மகரி
கணநேர சங்கமத்தில் ஆயிரமாயிரம் பரிமாற்றங்கள்.......கோடி வார்த்தைகள் கோர்த்தாலும்....பரிமாற்றத்தை முழுதாய் கோர்க்க முடியாது வார்த்தைகளில்...... - ஆலோன் மகரி
54 - அகரநதி சிறிது நேரத்தில் நதியாளுக்கு சுவாசம் சீராக வராமல் எக்குதப்பாக எகிற ஆரம்பித்தது. டாக்டர்கள் அனைவரும் எத்தனை முயற்சித்தும் தலையில் வரும் இரத்த போக்கை நிறுத்த முடியாமல் தவித்தனர். சுவாசத்தைச் சீராக்க முயற்சித்ததில் சிறிது நேரத்தில் சுவாசக் குழாய் மூலமாக சீராக மூச்சு வந்தது. நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிற்க ஆரம்பித்தது. நதியாள் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர் கூறிச் சென்றார்.அனைத்து காயங்களுக்கும் மருந்திட்டு ...
53 - அகரநதி தங்களில் ஐவரைக் காணாது பதறியபடி மற்றவர்கள் அந்த ரெஸ்டாரெண்டில் ஓடி ஓடித் தேடத் தொடங்கினர். தேவ் தான் உள்ளே வரும் பொழுது சம்பந்தமே இல்லாமல் பத்து பேர் பார்க்கிங்ல் நின்றதை ஒரு நொடி கவனித்து பின் நண்பர்களைக் காணும் ஆவலில் சென்று விட்டான். இப்பொழுது அது அவனுக்கு பொறியில் தட்ட உடனே பார்க்கிங் சென்று பார்த்தான். அந்த ஆட்கள் நின்று பேசிக்கொண்டு இருந்த இடம் காலியாக இருந்தது. சிறிது தூரம் தள்ளி ...
52 - அகரநதி ஒரு வாரம் அவரவர் அவரவர் வேலைகளில் மூழ்கி இருக்க , நம் காதல் ஜோடிகளும் காதலில் லயித்தபடி வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தனர். அகரனும் சரணும் சேர்ந்நு கருப்பசாமியை பிடித்து அவர் வாயிலாகவே அந்த கட்டிடம் அகரன் கம்பெனிக்கு கொடுத்தது எனக் கூற வைத்து பூரணன் வாங்கிய ஸ்டேவை கேன்சல் செய்ய வைத்தனர். வினய் ஒரு வாரமாக நதியாளை வேவு பார்த்தபடி இருக்க, பூரணன் மீண்டும் அகரனிடம் தோற்றதில் வெறி ...
51 – அகரநதி அந்த சந்தோஷமான மனநிலையில் அனைவரும் லயித்திருக்க அகரனுக்கு வந்த அழைப்பு அவனை கோபத்தில் முகம் சிவக்க வைத்தது. "அரை மணி நேரத்துல வரேன். அதுவரைக்கும் எவனும் உள்ள வரக்கூடாது பாத்துக்க", எனக் கூறி போனை வைத்துவிட்டு சரணிடம் வெளியே செல்வதாக கூறி ஒரு மணி நேரத்தில் தான் அழைக்கவில்லையென்றால், அவனை முன்னேற்பாட்டுடன் அவ்விடம் வரக்கூறினான் அகரன். நதியாள் இங்கே விஷேசத்தில் நண்பர்களுடன் ஆளவளாவிக்கொண்டிருந்த சமயம் அகரன் அவளிடம் சொல்லாமல் சென்று ...
50 – அகரநதி ஸ்டெல்லாவின் தந்தை அகரனிடம் கோபமாக பேசிய சமயம் நம் மகளிர் அணி அங்கே சென்றது. "ஸ்டெல்லா… இது தான் நீ படிக்கற லட்சனமா?", என ஸ்டெல்லாவின் தாய் அவளை சாடினார். "ஆண்டி….", என நதியாள் பேசும் சமயம் ஸ்டெல்லா தடுத்து தானே பேசினாள். "நீங்க ஏன் எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றத சொல்லலம்மா? ", என ஸ்டெல்லா எதிர்கேள்வி கேட்டாள். "ஸ்டெல்லா…. எங்களையே எதிர்த்து பேசற அளவுக்கு வந்துட்டியா? உன்ன பெத்து வளர்த்த ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….