9 – அகரநதி
9 – அகரநதி விடிகாலையில் ஊருக்கு வந்த நதியாள் ஊர் எல்லையிலேயே பஸ்விட்டு இறங்கி நடக்கத்தொடங்கினாள்.அன்று நாம் பார்த்ததை போல எல்லையில் இருந்தே பச்சைகம்பளம் பரந்து விரிந்து இருந்தது. வயல்வெளிகளில் அதிகாலை பனித்துளிகள் ஒவ்வொரு பயிரின் தலையிலும் அமர்ந்திருக்க, மரகதத்தின் உச்சியில் வைரம் வைத்தது போல காட்சியளித்தது. ஆங்காங்கே பறந்து பறந்து தன் இரையை தேடியபடி பறவைகளின் நாளும் ஆரம்பமானது.இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் பூமித்தாயின் மரகத உடையில் ஒற்றை காலுடன் ...