Tag: சுயம்

20 – மீள்நுழை நெஞ்சே

20 - மீள்நுழை நெஞ்சே   அடுத்த நாள் காலையில் அவளது அறையின் அழைப்பு மணி அலறிக்கொண்டிருந்தது‌. வெகு நேரமாக போன் எடுக்காததால் இனியாவும், ரிச்சர்ட் வில்சனும் அவளது அறைக்கு வந்திருந்தனர். அரைமணி நேரமாக அடிக்கும் அழைப்புமணியின் ஓசையின் இடையே கலைந்த தூக்கத்தில், கேசம் கூட ஒதுக்காமல் கொட்டாவி விட்டபடி வந்து அறைக்கதவைத் திறந்தாள் துவாரகா. "என்ன காய்ஸ்… இவ்வளோ சீக்கிரம் வந்து இருக்கீங்க?", எனத் தூக்கத்திலேயே உளறினாள். "ஓஹ் ...

1 – வலுசாறு இடையினில் 

1 – வலுசாறு இடையினில் 

1 - வலுசாறு இடையினில்  ‘விடியாத இரவுகள் என்று எதுவும் இல்லை… அஸ்தமித்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தே ஆக வேண்டும்…’‘உறங்கிய நாமும் காலையில் விழித்தே ஆக வேண்டும். பூமியில் விழி திறக்காத பொழுது, நமக்கு மற்றொரு வகையான விடியல் வேறு ஒரு உலகத்தில் ஏற்பட்டிருக்கும்..’‘கடந்த நொடிகளை நினையாதே…. இனி கடக்க வேண்டிய நொடிகளை மட்டும் மனதில் கொள்…. ‘இப்படி பல பல வாசகப்படங்கள் அறையின் சுவர் முழுக்க ஒட்டி வைக்கப்பட்டிருந்தது."எருமை ...

19 – மீள்நுழை நெஞ்சே

19 - மீள்நுழை நெஞ்சே  துவாரகா அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் விமானம் விட்டு இறங்கினாள். அங்கே அவளுக்காக ஒரு இந்திய பெண்ணும், அந்நாட்டு ஆணும் காத்திருந்தனர். தனது பைகளை எடுத்துக்கொண்டு இம்மிகிரேஷன் முடிந்து வெளியே வந்தாள். "துவாரகா", என்று எழுதப்பட்ட போர்ட் கண்டு அவர்கள் அருகில் சென்றுத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். "ஹாய் காய்ஸ்… ஐ ம் துவாரகா", என இருவரிடமும் கைக்குலுக்கினாள். "ஹாய்.. நான் இனியா… இவன் ரிச்சர்ட் ‌… ...

18 – மீள்நுழை நெஞ்சே

18 - மீள்நுழை நெஞ்சே வைரத்தின் கண்ணீர் கண்ட அருணாச்சலம் மனதினுள் மௌனமாக வருந்திக்கொண்டிருந்தார்.குட்டிச் சுவற்றில் அமர்ந்துப் பீடி குடித்த அன்றே அருணாச்சலம் அக்காவிடம் கூறினார் அவனைக் கண்டிக்கும் படி, ஆனால் வயது கோளாறு அது இது என்று சாக்குக் கூறி, அவனை அப்போதிருந்து அக்காவும், தன் தாயும் தாங்கியதால் வந்த வினை என்று உணர்ந்தார்.அதற்கு பின் அவன் சென்ற இடங்களில் எல்லாம் ஏதேனும் ஒரு தவறைச் செய்து இன்றுவரை மாமன்களின் ...

17 – மீள்நுழை நெஞ்சே

17 - மீள்நுழை நெஞ்சே "துவாரகா‌…‌ துவாரகா… கதவ தொற…. எங்கடி என் மகன்? ", என‌ வைரம் மரகதம்மாவின் வீட்டுக் கதவை உடைத்தார்.உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்த மைனா பயத்துடன் கனியைப் பார்க்க, துவாரகா தட்டில் இருந்த நெத்திலி மீனை உறிஞ்சிக்கொண்டே எழுந்து கதவிடம் சென்றாள்."நீ உள்ள போ துவா… நான் பேசிக்கறேன்…", கனி அவளைத் தடுத்தபடிக் கூறினாள்."உன்ன முன்ன விட்டு என்னை பின்ன நிக்க சொல்றியா? நீ உள்ள போ… இத நான் ...

16 – மீள்நுழை நெஞ்சே

16 - மீள்நுழை நெஞ்சே பின்பக்க சுவற்றில் ஏறி உள்ளே குதித்தவன், சத்தம் செய்யாமல் கனிமொழியின் அறையைக் கணித்தபடி அந்தப் பக்கம் நடந்தான்.ஜன்னலைத் திறந்துவைத்தபடி உள்ளே கனி, துவாரகா, மைனா மூவரும் ஒரே கட்டிலில் படுத்திருந்தனர். மைனாவை நடுவில் விட்டு இருபக்கமும் தோழிகள் அணைக்கட்டி இருந்தனர்."இந்த கனிமொழிய ஒரு நாள் நல்லா கவனிக்கணும்… நம்ம பண்றதெல்லா துவாரகா காதுல போட்டதே இவதான்… ", எனப் பொறுமியபடி அந்த அறையின் பின்பக்கக் கதவைத் ...

15 – மீள்நுழை நெஞ்சே

15 - மீள்நுழை நெஞ்சே  “நீங்க எங்க இந்த பக்கம்?”, எனத் துவாரகா மைனாவை மறைத்தபடிக் கேட்டாள். “என்ன மருமகளே .. ஊர்ல இருந்து வந்தா இந்த அத்தைய பாக்கணும்ன்னு உனக்கு தோணறதே  இல்லயா ?”, என அங்கே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். “உங்களுக்கு தான் ஊருல இருக்க ஆளுங்களுக்கு எல்லாம் வட்டிக்கு குடுத்து, குடும்பத்த எல்லாம் தெருவுக்கு கொண்டு வந்துட்டு இருக்கறதுக்கு நேரம் பத்தலன்னு கேள்விப்பட்டேன் .. இந்த உயர்ந்த ...

14 – மீள்நுழை நெஞ்சே

14 - மீள்நுழை நெஞ்சே  “கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன் கனி.. இன்னிக்கு ரவைக்குள்ள கட்டலன்னா அப்டியே ரெண்டு மடங்கு வட்டி கட்டணும். அதான் ..”, எனக் கனிமொழியிடம் காரணத்தை விளக்கினான். “எல்லா திருட்டு பயலுகளும் நல்லா தான் சொல்றாங்க காரணம்.. ஏன் கனி இவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?”, என துவா அவன் சட்டையை ஆராய்ந்தபடிக் கேட்டாள். “இரு துவா .. யார்கிட்ட கடன் வாங்கின ? எதுக்கு வாங்கின ?”, எனக் ...

திடம்

பலதையும் கொட்ட நினைக்கிறேன்.... உள்ளத்தின் பாரம் தீர அல்ல.... வார்த்தையே வேண்டாம்.... சாய ஓர் தோள் போதும்...ஏதோ நினைத்த மனதின் வெளிப்பாடாகஎன்னுதட்டில் ஏளனச்சிரிப்பு...... கிறுக்கி..... இதையும் தாங்குவாள் (மன) திடம் கொண்டு.... - ஆலோன் மகரி

சீமாறு

சீமாறு

உணர்வுகளற்ற பார்வையுடன் அவளது விடியல் வழக்கம் போலவே தொடங்கியது. வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து நம்பிக்கையற்ற  வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாள்.  அவள் கணவனை இழந்தும் இழக்காத நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறாள்.  இழந்து விட்டால் அந்த வலி சில நாட்களில் தனது பாதையை காட்டி விடும். இழக்கவில்லை என்றால் வாழ்க்கை அதன் போக்கில் ஓட ஆரம்பித்துவிடும். ஆனால் இவளுக்கோ இழந்தும் இழக்காத நிலை. அவன் இருக்கிறானா இல்லையா ...

Page 6 of 8 1 5 6 7 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!