19 – அகரநதி
19 – அகரநதி அங்கிருந்து கிளம்பிய நதி நேராக சரணின் இல்லத்திற்கு சென்றாள்."சரணா…. டேய் சரணா….", என அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்."அடடே…. வாடா யாள் குட்டி….இப்பதான் இந்த பெரியப்பா வீட்டுக்கு வரணும்னு தோணிச்சா?",பரமசிவம் கேட்டபடி அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டார்."நான் எப்ப லீவுக்கு வந்தாலும் வந்துட்டு தானே இருக்கேன் பெரியப்பா", அவளும் சலுகையுடன் அவர் தோளில் இடித்தாள்."ஹாஹா… ஆமா… சரி இன்னிக்கு இராத்திரி இங்கயே தங்கிக்க குட்டி. நாம இராத்திரி மாடில ...