13 – மீள்நுழை நெஞ்சே
13 - மீள்நுழை நெஞ்சே கனிமொழியும், துவாரகாவும் யோசித்தபடி மாடிக்கு சென்றனர். நெல் வயலின் வாசம் மூக்கைத் துளைக்க, துவாரகா அதை ஆழமாக உள்ளிழுத்தபடிச் சிறிது நேரம் அந்தச் சூழலை இரசித்துக்கொண்டு இருந்தாள். சில நிமிடங்கள் கடந்தும் அமைதியாக இருப்பதுக் கண்டு கனியிடம் திரும்பி, “என்ன யோசிக்கற கனி?”, எனக் கேட்டாள். “நீ என்ன யோசிக்கற ?”, கனி அவளிடம் திருப்பிக் கேட்டாள். “நான் ஒண்ணுமே யோசிக்கல கனி.. இந்த இடம்.. இந்த வாசனை.. இந்த ...