Tag: கவிதைகள்

நீயாக….

ஏதொன்றின் சாயலாகவும் வேண்டாம்.... - நீநிஜத்தில் நீயாகவே இரு போதும்....உன் அணுக்களில் நிறைந்திருக்கும்உன்னை.....வேறெவ்வித ஒப்பீடும் இல்லாது....உன்னை....உனக்காகவே காதல் செய்ய வேண்டும்.... உன்னில் இருக்கும் வெற்றிடத்தை....என் நிஜத்தை நிரப்பி வாழ்ந்து கொள்ளலாம்....வேறெந்த பொய்யும் வேண்டாம்....புனைவும் வேண்டாம்.... நீ.... நீயாகவே இரு....நீயாக மட்டுமே இரு.....- ஆலோன் மகரி

ஏகாந்தமல்ல…

போதுமென்றளவு தனிமையில் கழித்துவிட்டேன்....இவ்வாழ்வில்....பெற்றவரும் சில காலம் தான்....உடன்பிறந்தவரும் சில காலம் தான்....ஒன்றாயிருக்கும் போதே தனிமை தேடுகிறது...தனித்திருத்தல் பல நேரங்களில் ஏகாந்தம் தான்‌......ஏகாந்தம்....இச்சொல்லின் மெய்ப்பொருள் விளங்கினேன்....பெற்றவரோ.... உற்றவரோ....உடன்பிறந்த இரத்தமோ....இதில் ஒன்றோ அல்லது அனைத்துமோ.....அனைத்து பாத்திரத்திலும் அன்பு பெற்று நிறைந்தால் அன்றி....ஏகாந்தமென்ன ‌.....வாழ்தலே சாபம் தான்....இவை ஏதுமின்றியோ....காலத்தின் தேவையானதின்றியோ வாழ்ந்தால்....அது வாழ்தலல்ல....அத்தனிமை ஏகாந்தமுமல்ல.... -ஆலோன் மகரி

உருமாறியதோ ???

மனதினில் ஏற்படும் வெறுமையை ஒழிக்க....புகை பிடிக்க இஷ்டமில்லை....புண்பட்ட மனதை புகை விட்டு உடலையும் வதைக்க விரும்பவில்லை...மது நாட நாட்டமில்லை...என் வலியை பல்மடங்காய் மாற்றி வலிக்க வைத்துவிடும்...மாதுவான நானே மாதுவை தேட முடியாது....ஹாஹாஹாஹா....மாதனை தேட இஷ்டமில்லை...மனிதனின் மேல் நம்பிக்கையில்லை....இவ்வாழ்வின் மீது பிடிப்பும்‌ இல்லை....ஆனாலும் ஏதோ ஒன்று....என்னை உயிர்வாழ வைக்கிறது....உயிர் மட்டுமே இயங்குகிறது...உணர்வில்லை....உணர்ச்சிகள் இல்லை....வெறுமை...சூன்யம் நிறைந்த வெறுமை.....வாழ்வை அரித்துக் கொண்டிருக்கிறது....வெள்ளமாய் ஊறும் ஊற்றானது கைகளை எட்டும் நேரம்...சட்டென நீரின் பாதை வழிமாறி ஓடியது ...

வீண் தான்…..

வீண் தான்....இதுநாள் வரையிலும்.....காட்டிய ஆசையும்....உணர்ந்த நேசமும்.....மூழ்கிப்போன இதயமும்....கொடுத்த அரவணைப்பும்....கிட்டாத காதலும்.....இடிந்த குடும்பமும்....உடைந்த புத்தியும்.....நொறுங்கிய அனைத்தும்.....வீண் தான்.....இவளின் இந்நாள் வரையிலான உயிர்த்திருத்தலில்.....உள்ளாவியின் குரல் கேட்டு...... அக்கண்ணில்படா விரல் பிடித்து.....நொறுங்கிய மொத்தத்தையும்....மீண்டும்....முதலில் இருந்து....அக்குரல் மொழியும் வழியே....இவளை இவளே தெளிவுப்படுத்தி....திடம் கொடுத்தபடி.....அஞ்சிய மனதை அதட்டி.....உடைந்த பாகங்கள் எல்லாம் சேர்த்து....இம்மனித கூட்டின் ஆவி பிரியும் வரையிலும்....இப்பிரபஞ்சம் சலித்துபோகும் வரையும்....எழுந்து நின்றுகொண்டே இல்லையென்றால்....மொத்தமும் வீண் தான்....அவளின்  இப்பிறவி..... - ஆலோன் மகரி

அந்தர பயணம்

செயற்கையான இயற்கை வேண்டாம்....நூதனமான தடங்கள் வேண்டாம்.....அறை அடைக்கும் காகிதங்கள் வேண்டாம்...பழைய நான் வேண்டவே வேண்டாம்.....புதிய நான் முற்றிலும் வேண்டாம்....நிஜமான "நான்" யார்?நிஜத்தை உணரும் நுட்பமின்றிய வாழ்விது....இறுதியில் அந்தகாரம் நோக்கிய அந்தர பயணத்தில்..... ஆங்கோர் ஒளிக்கீற்று ஒளிர்வதால்....!!!- ஆலோன் மகரி

விழித்திடு மனமே…

ஏதோவொன்று முடியும் போது மற்றொன்றின் தொடக்கம் இயல்பே....இயல்பின் குணங்கள் அறிய விழைகிறேன்....இத்தனை நாள் நம்பிய நிஜங்கள் பொய்யென உணரும் தருணம்‌.... அவ்வியல்பு எத்தகையது?ஏதோவொன்றை அறிய நேரும் தேடலில் முடிந்தவைகள் தொடரப்படுகிறது....எதிர்காலத்தின் புதைகுழிகள் இறந்தகாலத்தில் அறியப்படலாம்...நிகழ்வில் நடப்பவை அனைத்தும் முற்றிலும் வேறொன்றே.... நீ நினைப்பதும் அல்ல...நான் நினைப்பதும் அல்ல....ஓர் கனவின் முடிச்சுகள் அவிழும் தருணம்....இறந்தகாலத்தின் துரோகமாக....எதிர்காலத்தின் முக்கிய திருப்பமாகவும் இருக்கலாம்......விழித்திடு மனமே.... இயல்பை உணர்ந்திடு....- ஆலோன் மகரி

பிரதிபலிப்பு

உன் எண்ணங்களின் பிரதிபலிப்பு.... உன் ஆசைகளின் பிரதிபலிப்பு.... உனது பிரதிபலிப்பு.... நள்ளிரவில் உலகம் உறங்கும் சமயத்தில்.... உன் எழுத்து என்பது..... நீ தான்..... நீ மட்டும் தான்..... - ஆலோன் மகரி

நடனம்

நடனம்....எத்தனை அற்புதமான கலை....மனதின் லயத்திற்கு ஜதி மாறாமல் ஆடிவிடும்....கோபமோ....அழுகையோ....வேண்டலோ....ஒதுக்கமோ...இணக்கமோ....ஆனந்தமோ....எல்லாம் அதன் வெளிப்பாட்டில் கோபுர உயரம் தான்.....மெல்ல மெல்ல அஸ்திவாரத்தை பலமாக்கி...உயர்ந்தோங்கி நின்று தனது நடனத்தை அரங்கேற்றம் செய்துவிடும்....அப்படித்தான் .... மாமாங்கமாக மறந்து போயிருந்த உற்சாகம்...சட்டென மேலெழும்பி வந்துவிட்டது.... - என்அஸ்திவாரத்தை கருவியாக இயக்கி ஆடவைத்தது..‌சிறிது நேரம் தான்.... இன்னும் கூட கொஞ்சம் நீண்டிருக்கலாம்...மறந்துவிட்ட உற்சாகத்தை....தொலைத்துவிட்ட சுயத்தை.....கட்டப்பட்டிருந்த மனதை.... எதுவோ.... என்னவோ.... மீண்டும் கிடைத்த உணர்வு.....இன்றோர் நாள் மட்டுமா? இனி எப்போதும் ...

அன்பு கொண்டாயா ?

மாட்டிக்கொண்ட மனமும்.... மீளாதிருக்கும் நினைவும்.... வெட்டிப் பேச்சு பொழுதும்....என்பதாய் சென்ற நாட்களில் தான்....நீ எனக்காய் ஒன்றும் செய்யவில்லை...இந்த விசறு பிடித்த மனது அனைத்துமே நீயென காட்டுகிறது.... தெளிய வைத்து பைத்தியமாக்கும் அன்பு... ஒன்றுமே நீ எனக்காய் செய்யவில்லை தான்....ஆனாலும் அன்பை வெறுப்பாக மாற்றவும் முடியவில்லை....களங்கிய சகதி குளத்தில்.... மெல்ல மெல்ல சேறு நீரடியில் தங்குவது போல... - உனது நினைவும் தெளிவாகிறது.... இப்போதும் சொல்கிறேன்.... - நீ எனக்காய் ஒன்றுமே ...

நங்கை

பாண்டியன் முத்தாய் உனது வரிகள்….ஜடாவர்மன் உனை அறியாமல் இருந்தானோ?முத்தை களவாடியது நீ … - அதை அறியாதுசேரனுடன் போர் புரிந்தானோ…வீரபாண்டியனாய் நீ வந்தால்….. - உனைதிருடும் நங்கையென நான் வரவாே?? - ஆலோன் மகரி

Page 1 of 2 1 2

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!