Tag: காதல்

கருவிழி

கண்வழி கண்ட காட்சியாக அவ(ள்)ன் - என் மனதில்.....ஆனால்...ஏனோ அது.... - என்உள்ளிருந்த நினைவொன்று ....மீண்டும் நிகழ்வதாக உணர்கிறேன்....அவ(ள்)ன் கருவிழி காணும்போதெல்லாம்....- ஆலோன் மகரி

1 – ருத்ராதித்யன்

15 – ருத்ராதித்யன்

15 - ருத்ராதித்யன் ஆதித்யன் யாத்ராவை முறைத்தபடி நின்றிருக்க, ஜான் ஓடி வந்து மூச்செடுத்துக்கொண்டான்.."எதுக்கு இப்ப இப்படி ஓடி வர்ற ஜான்?", என யாத்ராவை முறைத்தபடி கேட்டான் ஆதி."பூவழகி தான் ஓடி வர சொன்னா பாஸ்…. அதான் ஐஞ்சு கி.மீ ஓடி வந்தேன்", என மூச்சு வாங்கியபடி சொல்பவனைக் கண்டு முறைத்தான்."ஏன்டா அவ சொன்னா உனக்கு அறிவில்ல.. உன்  பைக் வீட்ல இருந்து எடுத்துட்டு போனல்ல.. அது எங்க?""பைக் பூவழகி சொன்ன ...

1 – ருத்ராதித்யன்

14 – ருத்ராதித்யன்

14 - ருத்ராதித்யன் மிதிலன் நின்றிருந்த மரக்கிளையில் இருந்து தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த பாம்பு அவன் தலைக்கு பக்கவாட்டில் வந்து ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்பியது.மிதிலன் முதலில் திகிலடைந்து திரும்பும் முன் பறவைகள் கீச்கீச்கீச் என பதற்றமாக சத்தமிடவும், அந்த பாம்பு அவனுக்கு பின்னிருந்த பாறையில் விழுந்து வேகமாக ஊர்ந்துச் சென்றது.சட்டென ஓடும் பாம்பையும், கத்தும் பறவைகளின் ஒலியையும்  கண்டு அருகில் வேறு மிருகம் வருகிறதா எனப் பார்த்தான்.எதிரே ஏதோ அசைந்து சென்றதை ...

1 – ருத்ராதித்யன்

13 – ருத்ராதித்யன்

13 - ருத்ராதித்யன் "ஒரு நிமிஷம் நிறுத்து டா.. . நீயும் நானும் பேசற கேப்புல இரண்டு பேரு ஓடிட்டாங்க பாரு", என நந்து யாத்ரா, ஆதியை பற்றிக் கூறினான்."நீயே போய் பாரு.. எனக்கு உள்ள ஒரு வேலை இருக்கு வரேன்", என அர்ஜுன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிரஞ்சீவை அழைத்தான்."மாப்ள…. சிவி….. டேய் சிவி …. மாப்ள….", என அழைத்தபடி சென்றவன் எதிரில் தாய் கயல் வந்து நின்றார்.ஒரு ...

மகரியின் கிறுக்கல்கள் புத்தகம் – 1

மகரியின் கிறுக்கல்கள் புத்தகம் – 1

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. "மகரியின் கிறுக்கல்கள் பாகம் -1" புத்தகம் வெளிவந்துள்ளது.  சில நேரங்களில் தோன்றிய சில கிறுக்கல்கள் எல்லாம் இப்போது புத்தக வடிவு பெற்று உங்கள் கைகளில் தவழ காத்திருக்கின்றன.  நோஷன் பிரஸ் தளத்தில் இப்புத்தகத்தை வாங்கி கொள்ளலாம். திரி கீழே :  https://notionpress.com/read/magariyin-kirukkalgal

அன்பு கொண்டாயா ?

மாட்டிக்கொண்ட மனமும்.... மீளாதிருக்கும் நினைவும்.... வெட்டிப் பேச்சு பொழுதும்....என்பதாய் சென்ற நாட்களில் தான்....நீ எனக்காய் ஒன்றும் செய்யவில்லை...இந்த விசறு பிடித்த மனது அனைத்துமே நீயென காட்டுகிறது.... தெளிய வைத்து பைத்தியமாக்கும் அன்பு... ஒன்றுமே நீ எனக்காய் செய்யவில்லை தான்....ஆனாலும் அன்பை வெறுப்பாக மாற்றவும் முடியவில்லை....களங்கிய சகதி குளத்தில்.... மெல்ல மெல்ல சேறு நீரடியில் தங்குவது போல... - உனது நினைவும் தெளிவாகிறது.... இப்போதும் சொல்கிறேன்.... - நீ எனக்காய் ஒன்றுமே ...

நேசம்

நீயும் விடவில்லை ....நானும் பற்றிக் கொள்ளவில்லை .... நமக்குள் புகைந்தபடி இருக்கிறது .... நமது நேசம் ...... !!!  - ஆலோன் மகரி 

திரும்பி விடாதே

நீண்ட நெடிய காலம் தான் ... உன்னை நினையாமல் கழித்தேன் ... நீளும் நாட்களும் நினையாமலே கடந்துச் செல்ல விட்டுவிடு ... எனை கை விட்டது போல ... என் மனதை நொறுக்கியது போல ... என் நினைவுகளையும் தொலைத்து போ ... காற்றிலே மிதக்கும் நிகழ்வுகளை ... மறந்தும் சுவாசித்திடாதே ... பாவம் .. நான் தான் .. அது என்னைக் காட்டிவிட்டால் ... - மீண்டும் நான் நொறுங்கிப் போகக் கூடும் ... !!!  - ஆலோன் மகரி 

நொடி

மனதில் ஆயிரம் சஞ்சலங்கள் இருந்தாலும் .. உன் முகம் பார்த்த நொடி .. - என்னில் உறுதி விஸ்வரூபம் எடுப்பதேனோ ??? - ஆலோன் மகரி 

சுவாசம்

மனதில் பல சஞ்சலங்கள் .. உனக்காக பல முயற்சிகள் .. நிறை தழும்பா மனிதனாய் நான் .. அலையுறும் ஜன்மமானேன் .. இன்றும் .. உன் கைப்பற்றி உன்னை எனதாய் மாற்றும் காலத்திற்காக .. இன்னும் அலையுறுவேன் .. பெண்ணே .. காலம் தாழ்த்தாது அரவணைத்து விடு .. எனது கடைசி சுவாசம் உனதாய்  இருக்க ... !  - ஆலோன் மகரி 

Page 1 of 8 1 2 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!