Tag: சமூகம்

நாளைய தலைமுறை….

விடியல் வரும் காத்திரு.....இதே வார்த்தை தான் பல முறை பல செவிகளையடைகிறது....‌முதல்முறை.....யாரோ என் அருகிருந்தவருக்கு கூறினார்....அடுத்தமுறை ....எனக்கு பிடித்தவருக்கு கூறினார்.....பலமுறைகள் கடந்தும்....என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூறினார்....நேற்று....எனக்கும் கூறினார்.....அன்றெனது காதில் விழுந்த முதல்முறையை நினைக்கையில்....செயலன்றி ஏதும் மாறாது....ஏதுவான சிந்தனையன்றி நாமும் மாறுவதில்லை....நிச்சயமாக நாளை அடுத்த தலைமுறைக்கும் இதே வார்த்தைகள் சென்றடையத்தான் போகிறது....அதற்குமுன்.....இன்று நம் விடியலைப் பற்றி நாம் ஆழச் சிந்திப்போம்.....பிடித்தமோ பிடித்தமல்லதோ....நல்லதோ நன்றல்லதோ....ஒன்றுமோ ஒன்றாதோ.....நடக்குமோ நடக்காதோ.....யாவையும் மீண்டுமொருமறை சிந்தித்து செயல்படலாம்.....கடந்துவிடபோகும் வார்த்தையில் ...

யார் மனிதன்?

யார் மனிதன் ?ஊர் காப்பாற்றி வளர்ந்தவன் -  தன்னைகுடும்பத்தில்  புதைத்துக் கொண்டான்….இயற்கையுடன் சந்தோஷித்து….அழுக்கேறிய வேட்டியும்….தோளில் கிடந்த துண்டுமாக….வாழ்ந்திருந்தவரையும்….உழைத்து களைத்து களத்துமேட்டில் - தன்கட்டையை சாய்த்தாலும் சொர்க்கமென துயில் கொண்டான்….பகிர்ந்துண்ட எச்சல் பண்டத்தில் பெற்ற ஆரோக்கியம்.…நண்பனின் இடைப்பிடித்துக் கற்ற நீச்சல்…..தந்தையின் அதட்டலில் கொண்ட கோபம்….தாயின் அணைப்பில் கண்ட தவிப்பு…அக்காவின் மேல் அக்கறையில் எடுத்த குடும்ப பாரம்….தங்கையின் கண்ணீரில் எழுந்த ரௌத்திரம்….அண்ணனின் அரவணைப்பில் அணை கொண்ட நெஞ்சம்….தம்பியின் தோள்களில் திணவெடுத்த வீரம்…..அத்தைமகளின் வீம்பு… மாமன்மகளின் ...

1 – வலுசாறு இடையினில் 

5 – வலுசாறு இடையினில்

5 - வலுசாறு இடையினில் நங்கையிடம் சவால் விட்டுவிட்டு தோப்பிற்குச் சென்றவன், கண்ணில் பட்டத்தை எல்லாம் எடுத்து வீசினான். வேக வேகமாக கோடாலி எடுத்து மரத்தை வெட்டத் தொடங்கினான் .‘பொட்ட கழுதை என்ன பேச்சு பேசிறா, ஏதோ பாக்க சுமாரா இருக்கா, கட்டினா நமக்கு தோதா இருக்கும்ன்னு நினைச்சி பேசினா என்னை ஆம்பள இல்லைன்னு சொல்றா .. அவள சும்மா விட கூடாது ..’ இப்படியாக தனக்கு தானே பேசிக்கொண்டு அரை ...

22 – மீள்நுழை நெஞ்சே

22 - மீள்நுழை நெஞ்சே மாலை வரை நடந்தபடியே ஊர் சுற்றிய வில்சனும் துவாரகாவும், மெட்ரோ நிலையத்திற்குச் சென்றனர்."என்ன சொல்லு வில்ஸ்… உங்க ஊரு கழுவி வச்ச மாதிரி நல்லா சுத்தமா தான் இருக்கு… இந்த மெட்ரோ ஸ்டேஷன் பாக்கவே சூப்பரா இருக்கு…", என ஸ்டேஷனை சுற்றிலும் கண்களை ஓட்டியபடிக் கூறினாள். வில்சன் இருவருக்கும் டிக்கெட் எடுப்பதை அவளும் அறிந்துக் கொள்ளக் கூறி அருகில் நிற்கவைத்து விவரம் கூறினான்‌. "உங்க ஊர்ல மெட்ரோ இல்லையா?", வில்சன் ...

20 – மீள்நுழை நெஞ்சே

20 - மீள்நுழை நெஞ்சே   அடுத்த நாள் காலையில் அவளது அறையின் அழைப்பு மணி அலறிக்கொண்டிருந்தது‌. வெகு நேரமாக போன் எடுக்காததால் இனியாவும், ரிச்சர்ட் வில்சனும் அவளது அறைக்கு வந்திருந்தனர். அரைமணி நேரமாக அடிக்கும் அழைப்புமணியின் ஓசையின் இடையே கலைந்த தூக்கத்தில், கேசம் கூட ஒதுக்காமல் கொட்டாவி விட்டபடி வந்து அறைக்கதவைத் திறந்தாள் துவாரகா. "என்ன காய்ஸ்… இவ்வளோ சீக்கிரம் வந்து இருக்கீங்க?", எனத் தூக்கத்திலேயே உளறினாள். "ஓஹ் ...

பி(இ)றந்த நாள் 

பி(இ)றந்த நாள் 

“டேய் இந்த தடவ நான்சொல்ற மாதிரி கொஞ்சம் ட்ரை பண்ணி பாக்கலாம் டா.. அவனை ஒரு வழி பண்ணிடணும் “, ஆகாஷ் ஆர்வமாக  பேசிக்கொண்டு இருந்தான். “ஆமா டா .. இந்த வருஷத்த அவன் மறக்கவே கூடாது .. அப்படி பண்ணனும் எல்லாத்தையும் .. டேய் வினித் கேக் ஆர்டர் பண்ணிட்ட தானே “, கணேஷ் கேட்டான். “அதுலாம் பண்ணிட்டேன் டா .. இந்த ஃப்ளேவர் அவனுக்கு கண்டிப்பா  பிடிக்கும் ...

நேர்த்தியின் பயணம் 

நேர்த்தியின் பயணம் 

சாலையில் கடந்து செல்லும் வாகனங்களைப் பயத்தோடும், அலட்சியத்தோடும் இரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.  "என்ன பண்ணணும்னு சொல்றீங்க இப்ப?", அவள் தொலைபேசியில் தொல்லை செய்பவரால் எரிச்சல் பட்டுக் கேட்டாள்.  மறுபக்கம் ஏதோ பதில் வர, " முடியாது ஐயப்பன்… அந்த ஆளால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கட்டும். இனிமேலும் அவன நான் சும்மா விடமாட்டேன்", எனக் காட்டமாகப் பேசிவிட்டு அலைபேசியை அணைத்துப் பைக்குள் திணித்தாள்.  பயந்தபடி நோக்கிய விழிகள் அவளிடம் ...

சீமாறு

சீமாறு

உணர்வுகளற்ற பார்வையுடன் அவளது விடியல் வழக்கம் போலவே தொடங்கியது. வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து நம்பிக்கையற்ற  வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாள்.  அவள் கணவனை இழந்தும் இழக்காத நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறாள்.  இழந்து விட்டால் அந்த வலி சில நாட்களில் தனது பாதையை காட்டி விடும். இழக்கவில்லை என்றால் வாழ்க்கை அதன் போக்கில் ஓட ஆரம்பித்துவிடும். ஆனால் இவளுக்கோ இழந்தும் இழக்காத நிலை. அவன் இருக்கிறானா இல்லையா ...

கூட்டாஞ்சோறு 

கூட்டாஞ்சோறு 

அன்று காலை முதலே அவளுக்கு வீட்டின் நினைவு அதிகமாக எழுந்தது. தனிமையில் அதிகம் சுழல்வது போலவே இருக்க, தனது நண்பர்களை அழைக்கலாம் என்று நினைத்தாள் வதனா.  “இன்னும் கொஞ்சம் வேலை தான் இருக்கு.. முடிச்சிட்டு வெளிய போலாம்னு சொல்லலாம்.. கண்டிப்பா ஏதாவது ஒரு பக்கி வரும் ..”, எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்து முடித்தாள்.  அவள் வதனா .. ஊரை விட்டு வந்து வெளியூரில் தங்கி ...

இயல்புகள்

இயற்கை

அதிகாலைச் சூரியன் சாரலத்தின் வழியே தூங்கும் பூக்குவியலின் மேல் பட்டது .வெளிச்சத்தின் தாக்கத்தால் தூக்கம் கலையவும் சிணுங்கியபடியே அழைத்தாள் தன் தாயை. "ம்மா…… ம்மா….. வெயில் போ சொல்லு….", என தூக்கத்தில் உளறினாள். "என் தங்ககட்டிக்கு இன்னும் தூக்கம் தெளியலியா ?", எனக் கூறியபடியே தாயவள் சாரலத்தை நன்றாக திறந்து விட்டாள். காலைக் காற்றும், ஒளியும் அறை முழுக்க பரப்ப திரைச்சீலைகளை விளக்கிக் கட்டினாள். "ம்மா….. வெயில் போ சொல்லு…. ...

Page 1 of 2 1 2

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!