Tag: சுயம்

கலந்துணர்வோம்

கலந்துணர்வோம் கரையுடைத்து உனையணைத்து ....உனக்குள் பயணித்து.....நமக்குள் இருக்கும் புதையல்களையெல்லாம்....கண்டுணர்ந்தபடி....நம்மிடையே உருவாகும்...கரையைத் தூர தூர துறத்திக்கொண்டு....உனக்குள் நானும்....எனக்குள் நீயுமாக....கலர்ந்துணர்ந்து வாழ்வோம் வா.......- ஆலோன் மகரி 

மீள்நுழை நெஞ்சே புத்தகம்

மீள்நுழை நெஞ்சே புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. "மீள்நுழை நெஞ்சே" நாவல் இப்போது புத்தகமாக நோஷன் பிரஸ் மூலமாக வெளி வந்துள்ளது. துவாரகாவின் சுய மீட்டல் பயணத்தை தொட்டு உணர்ந்து படிக்க முடியும். இந்த புத்தகத்தை வாங்க கீழே உள்ள திரியில் உள்செல்லவும் .. https://notionpress.com/read/meelnuzhai-nenje

உருமாறியதோ ???

மனதினில் ஏற்படும் வெறுமையை ஒழிக்க....புகை பிடிக்க இஷ்டமில்லை....புண்பட்ட மனதை புகை விட்டு உடலையும் வதைக்க விரும்பவில்லை...மது நாட நாட்டமில்லை...என் வலியை பல்மடங்காய் மாற்றி வலிக்க வைத்துவிடும்...மாதுவான நானே மாதுவை தேட முடியாது....ஹாஹாஹாஹா....மாதனை தேட இஷ்டமில்லை...மனிதனின் மேல் நம்பிக்கையில்லை....இவ்வாழ்வின் மீது பிடிப்பும்‌ இல்லை....ஆனாலும் ஏதோ ஒன்று....என்னை உயிர்வாழ வைக்கிறது....உயிர் மட்டுமே இயங்குகிறது...உணர்வில்லை....உணர்ச்சிகள் இல்லை....வெறுமை...சூன்யம் நிறைந்த வெறுமை.....வாழ்வை அரித்துக் கொண்டிருக்கிறது....வெள்ளமாய் ஊறும் ஊற்றானது கைகளை எட்டும் நேரம்...சட்டென நீரின் பாதை வழிமாறி ஓடியது ...

வீண் தான்…..

வீண் தான்....இதுநாள் வரையிலும்.....காட்டிய ஆசையும்....உணர்ந்த நேசமும்.....மூழ்கிப்போன இதயமும்....கொடுத்த அரவணைப்பும்....கிட்டாத காதலும்.....இடிந்த குடும்பமும்....உடைந்த புத்தியும்.....நொறுங்கிய அனைத்தும்.....வீண் தான்.....இவளின் இந்நாள் வரையிலான உயிர்த்திருத்தலில்.....உள்ளாவியின் குரல் கேட்டு...... அக்கண்ணில்படா விரல் பிடித்து.....நொறுங்கிய மொத்தத்தையும்....மீண்டும்....முதலில் இருந்து....அக்குரல் மொழியும் வழியே....இவளை இவளே தெளிவுப்படுத்தி....திடம் கொடுத்தபடி.....அஞ்சிய மனதை அதட்டி.....உடைந்த பாகங்கள் எல்லாம் சேர்த்து....இம்மனித கூட்டின் ஆவி பிரியும் வரையிலும்....இப்பிரபஞ்சம் சலித்துபோகும் வரையும்....எழுந்து நின்றுகொண்டே இல்லையென்றால்....மொத்தமும் வீண் தான்....அவளின்  இப்பிறவி..... - ஆலோன் மகரி

43 – மீள்நுழை நெஞ்சே

43 - மீள்நுழை நெஞ்சே திடீரென துவாரகா வந்து நிற்பாள் என அப்பத்தா கிழவி நினைக்கவே இல்லை. அவள் இல்லாமலே இந்த திருமணத்தை நடத்திவிட்டு, அவள் மேல் இன்னும் பழிகளை வாரி இரைக்கக் காத்திருந்தார். ஆனால் துவாரகா இப்போது வந்துவிட்டாள். அதை அவர் மூளை உணரவே சிறிது நேரம் எடுத்தது.மனோஜ் அந்த கிழவியை உசுப்பவும் வாய் திறந்தது."எங்கடி போய் ஊர் மேய்ஞ்ச இத்தன நாளா? இன்னிக்கு இங்க எதுக்கு வந்த‍? இருக்கற கொஞ்ச ...

42 – மீள்நுழை நெஞ்சே

42 - மீள்நுழை நெஞ்சே ப்ராஜெக்ட் டெஸ்டிங் சில தடைகள் கொண்டிருந்தாலும், அவையெல்லாம் உடனுக்குடனே சரி செய்யப்பட்டு இயக்கத்தில் வந்தது.ஒரு வாரம் என்பது பத்து நாட்கள் ஆனது. அதுவரை அவள் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்கிக்கொண்டாள். பெரிதாக எந்த தொந்தரவும் இல்லாமல் முதல் முறையாக மொத்த ப்ராஜெக்டும் அவள் மேற்பார்வையில் நடந்து முடிந்திருந்தது. கடைசி கட்டத்தில் அவள் வந்து கையில் எடுத்திருந்தாலும் அவளின் உழைப்பு அதில் சற்று அசாத்தியம் தான்.அவளின் வலிகள் ...

41 – மீள்நுழை நெஞ்சே

41 - மீள்நுழை நெஞ்சே "திவா….. திவா…..", எனத் தொண்டைக்குழியில் இருந்து ஈனஸ்வரத்தில் குரல் வெளி வந்தது."ஹே.. துவா… இப்ப எப்படி இருக்கு உடம்பு? பரவால்லயா?", என அக்கறையுடன் கேட்டான்."ம்ம்… படுத்து தூங்காம ஏன் இப்படி தூங்கற… முதுகு வலிக்கும்…. படு கொஞ்ச நேரம்", எனப் பேசியபடி மெல்ல எழுந்தாள்."எங்க போற?", அவள் கட்டிலை விட்டு இறங்குவது கண்டுக் கேட்டான்."பாத்ரூம் போறேன்…. ", நிற்க தடுமாறியபடிக் கூறினாள்."இரு துவா வரேன்", என ...

40 – மீள்நுழை நெஞ்சே

40 - மீள்நுழை நெஞ்சே துவாரகா இப்படியான ஒரு கேள்வியை அவனிடம் எதிர்பார்க்கவே இல்லை. அவளால் இன்னும் அந்த அதிர்வில் இருந்து வெளியே வரமுடியவில்லை."துவாரகா…. துவாரகா….", என்று அவன் தோள் தொட்டு அழைத்ததும் வெடுக்கென அங்கிருந்து எழுந்து நின்றாள்."சாரி முகில் .. என்னால முடியாது…. இந்த நினைப்ப இத்தோட விட்ருங்க… உங்களுக்கு உங்கம்மா நிறைய பொண்ணுங்க பாத்துட்டு இருக்காங்க அதுல பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க", எனக் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.இவள் ...

39 – மீள்நுழை நெஞ்சே

39 - மீள்நுழை நெஞ்சே "சரி என்ன சொல்றா உன் தங்கச்சி?""அதே தான் ஆண்ட்டி…‌""என்னடா ஆண்ட்டின்னு சொல்ற? மினி பேபின்னு தானே கூப்பிடுவ.. அப்படியே கூப்பிடு", என்றார்."இல்ல.. அங்கிள்…..", என்று இழுத்தான்."அவரு இங்க இல்ல… குன்னூர் போயிட்டாரு… நீ எப்பவும் போல பேசு யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க….", என்றார்‌ துவாரகாவை முறைத்தபடி."மினி ம்மா…. பயங்கரமா பேசறீங்க போங்க‌.. பாவம் திவாகர் பயந்துட்டாரு…. ", என மித்ரா சிரித்தபடிக் கூறினாள்."நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு ...

37 – மீள்நுழை நெஞ்சே

37 - மீள்நுழை நெஞ்சே அன்று காலை துவாரகா மித்ராவுடன் நடைப்பயிற்சி செய்துக் கொண்டிருந்தாள்."மித்ரா…. எட்டு போட்டா நல்லா வித்தியாசம் தெரியும்… அது ட்ரை பண்ணுங்களேன்….", என ஓரிடத்தில் அமர்ந்தபடிக் கூறினாள்."எட்டு போட்டா வீட்டுக்குள்ள மட்டும் தான் போட முடியும். இப்படி வெளிய வந்து இளநீர் குடிக்க முடியாது துவா…. அதுக்கு தான் வெளியே வர்றதே….", எனக் கண்ணடித்துச் சிரித்துக்கொண்டே இளநீரை நீட்டினாள்."அது உண்மை தான். நானும் ஒத்துக்கறேன்….", என இளநீரை ...

Page 1 of 8 1 2 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!