13 – வலுசாறு இடையினில்
13 - வலுசாறு இடையினில் வர்மன் பெயர் கூறி அடுத்து நங்கையின் பெயர் கூறியதும் தோழிகள் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். “யாரு பெரியம்மா உங்க சொந்தமா ?”, என பூசாரி அர்ச்சனை தட்டை கொடுத்தபடி கேட்டார். “ஆமா பூசாரி .. நம்ம வர்மனுக்கு பாத்து இருக்க பொண்ணு தான் இது”, என ஆச்சி கூறியதும் வினிதா திரு திருவென விழிக்க நங்கை ஆச்சியை முறைத்துக்கொண்டு இருந்தாள். “அப்படியா .. ரொம்ப சந்தோஷம்.. பொண்ணு ரொம்ப அழகா ...