24 – ருத்ராதித்யன்
24 - ருத்ராதித்யன் அடிபட்டிருந்த கொம்பன் இப்போது பரிபூரணமாக குணமாகி இருந்தது. பைரவ் அதை விட்டு கணநேரமும் விலகாமல் பின்னாலேயே சுற்றிக்கொண்டும், கொம்பன் படுத்திருக்கும் போது அதன் மேல் ஏறி படுத்தும், தொடர்ந்து குறும்பு செய்துக் கொண்டே இருந்தது. "பைரவா…. என்னை தொந்தரவு செய்யாதே…. சொல்வதை கேட்டு அதன்படி செய்யப் பழகு", என கொம்பன் பைரவைக் கண்டித்தது. பைரவ் முடியாது என தலையாட்டிவிட்டு மீண்டும் அங்கே படுத்திருந்த பூனைகளிடமும், பறவைகளிடமும் விளையாட சென்றது. பஞ்சவர்ணக் கிளிகள் இரண்டும், ...