24 – அர்ஜுன நந்தன்
24 - அர்ஜுன நந்தன் குழந்தையுடன் லிப்டில் ஏறிய அர்ஜுன் தன் அறைக்கு வந்தான். யாத்ராவின் மேல் விழுந்ததை நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டு வந்தான். செந்தில் வேகமாக அர்ஜுனை நெருங்கி அறைக்குள் அழைத்துச் சென்று விசாரித்தான். "என்னாச்சி அர்ஜுன்? யாத்ரா அங்க தானு இருக்கா? பாத்தியா? பேசினியா?", செந்தில். "ம்ம்ம். ..", எங்கோ கனவுலகில் சஞ்சரித்தபடி ம்ம் கொட்டினான் அர்ஜுன். "எதாவது சொன்னாளா?",செந்தில். "ம்ம்ம்…", மென்னகை புரிந்தபடி இருந்தான். "இவன் ஏன் இப்படி இருக்கான்? யார் பெத்த புள்ளையோ ...