Tag: kavithai

யார் மனிதன்?

யார் மனிதன் ?ஊர் காப்பாற்றி வளர்ந்தவன் -  தன்னைகுடும்பத்தில்  புதைத்துக் கொண்டான்….இயற்கையுடன் சந்தோஷித்து….அழுக்கேறிய வேட்டியும்….தோளில் கிடந்த துண்டுமாக….வாழ்ந்திருந்தவரையும்….உழைத்து களைத்து களத்துமேட்டில் - தன்கட்டையை சாய்த்தாலும் சொர்க்கமென துயில் கொண்டான்….பகிர்ந்துண்ட எச்சல் பண்டத்தில் பெற்ற ஆரோக்கியம்.…நண்பனின் இடைப்பிடித்துக் கற்ற நீச்சல்…..தந்தையின் அதட்டலில் கொண்ட கோபம்….தாயின் அணைப்பில் கண்ட தவிப்பு…அக்காவின் மேல் அக்கறையில் எடுத்த குடும்ப பாரம்….தங்கையின் கண்ணீரில் எழுந்த ரௌத்திரம்….அண்ணனின் அரவணைப்பில் அணை கொண்ட நெஞ்சம்….தம்பியின் தோள்களில் திணவெடுத்த வீரம்…..அத்தைமகளின் வீம்பு… மாமன்மகளின் ...

பெண்ணின் புனிதம்

பெண்ணின் புனிதம் அவளின் மனதில்....உடலை வருத்துவதால் அவள் களங்கப்படவில்லை..... - அவளின்உள்ளத்தால் கலங்காது இருக்கும்வரை.....ஆண்ணென்ற ஆணவம் கொண்டு காணாதுஉன்னவளின் கருவறையாய் வாழ்ந்து பார்...கற்பானது கறை படாது இருக்கும்....கற்பழிப்பும் கானல் நீராய் கரையும்.... - ஆலோன் மகரி

தர்மா

கண்களில் காந்தமா என யோசிக்கும்பொழுது..கருந்துளை வைத்து எனை மொத்தமாக இழுத்துவிட்டாய்….முறுக்கிய மீசையிலும் ….மடித்து கட்டிய வேஷ்டியிலும்….தர்மா… இது தர்மமா?பச்சை வயலில் உன் கரம் காண - நீஎன் மனதில் விதையாகி போனாய்….ஆழமரமாக வளர்ந்து விட்டாய் ….உன் நினைவின் பாரம் தாங்காது …..உன் மார் சாய வந்தேன்…..நெற்கட்டென உன் தோளில் தூக்கி செல்லடா…. - ஆலோன் மகரி

Page 3 of 3 1 2 3

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!