Tag: magariyin kirukkalgal

விழித்திடு மனமே…

ஏதோவொன்று முடியும் போது மற்றொன்றின் தொடக்கம் இயல்பே....இயல்பின் குணங்கள் அறிய விழைகிறேன்....இத்தனை நாள் நம்பிய நிஜங்கள் பொய்யென உணரும் தருணம்‌.... அவ்வியல்பு எத்தகையது?ஏதோவொன்றை அறிய நேரும் தேடலில் முடிந்தவைகள் தொடரப்படுகிறது....எதிர்காலத்தின் புதைகுழிகள் இறந்தகாலத்தில் அறியப்படலாம்...நிகழ்வில் நடப்பவை அனைத்தும் முற்றிலும் வேறொன்றே.... நீ நினைப்பதும் அல்ல...நான் நினைப்பதும் அல்ல....ஓர் கனவின் முடிச்சுகள் அவிழும் தருணம்....இறந்தகாலத்தின் துரோகமாக....எதிர்காலத்தின் முக்கிய திருப்பமாகவும் இருக்கலாம்......விழித்திடு மனமே.... இயல்பை உணர்ந்திடு....- ஆலோன் மகரி

வஞ்சப்புகழ்ச்சி

வழக்கமாக அவள் அமரும் இடத்தில் நான் முந்திக்கொண்டு அமர்ந்து விட்டேன்....முறைத்தாள்.... - பின்மெல்லிய கீற்றாக மென்னகை ஒளிர்ந்தது...அவள் என்னை நகர கூறும் முன்....பக்கவாட்டு இடத்தை காட்டிவிட்டு 'டீ'யில் மூழ்க தொடங்கிவிட்டேன்....ஐநூறு ஊருக்கு அரசாங்கம் செய்யும் இடமோ அது? - எனக் கேட்டு வக்கணைத்தாள்.....எனது பதில் என்னவாக இருக்கும்??வஞ்சப்புகழ்ச்சி என்றான பின் கஞ்சத்தனம் எதற்கு? பிரபஞ்சமே என்னுடையது தான் என்றுவிட்டேன்....சரி தானே நான் கூறியது...?!இப்பிரபஞ்சம் என்னுடையது அல்லவா ?! - ஆலோன் ...

பிரதிபலிப்பு

உன் எண்ணங்களின் பிரதிபலிப்பு.... உன் ஆசைகளின் பிரதிபலிப்பு.... உனது பிரதிபலிப்பு.... நள்ளிரவில் உலகம் உறங்கும் சமயத்தில்.... உன் எழுத்து என்பது..... நீ தான்..... நீ மட்டும் தான்..... - ஆலோன் மகரி

அன்பு கொண்டாயா ?

மாட்டிக்கொண்ட மனமும்.... மீளாதிருக்கும் நினைவும்.... வெட்டிப் பேச்சு பொழுதும்....என்பதாய் சென்ற நாட்களில் தான்....நீ எனக்காய் ஒன்றும் செய்யவில்லை...இந்த விசறு பிடித்த மனது அனைத்துமே நீயென காட்டுகிறது.... தெளிய வைத்து பைத்தியமாக்கும் அன்பு... ஒன்றுமே நீ எனக்காய் செய்யவில்லை தான்....ஆனாலும் அன்பை வெறுப்பாக மாற்றவும் முடியவில்லை....களங்கிய சகதி குளத்தில்.... மெல்ல மெல்ல சேறு நீரடியில் தங்குவது போல... - உனது நினைவும் தெளிவாகிறது.... இப்போதும் சொல்கிறேன்.... - நீ எனக்காய் ஒன்றுமே ...

நினைவுகள்

மலரும் நினைவுகளால் மகிழ்ச்சி !மகிழ்ச்சி அது உன் நினைவு மலர்ந்ததால் ...!மலர்ந்த நினைவில் என்னை மறந்தேன் !மறந்த என்னை தட்டினால்(ள்)  மனைவிமனைவியைப் பார்த்ததும் விழித்தேன் !விழித்ததும் தெளிந்தேன் நினைவை !நினைவில் இருந்தால் காதலி !காதலில் இருக்கிறாள் மனைவி என்மேல் ..... !!!!! - ஆலோன் மகரி

யார் மனிதன்?

யார் மனிதன் ?ஊர் காப்பாற்றி வளர்ந்தவன் -  தன்னைகுடும்பத்தில்  புதைத்துக் கொண்டான்….இயற்கையுடன் சந்தோஷித்து….அழுக்கேறிய வேட்டியும்….தோளில் கிடந்த துண்டுமாக….வாழ்ந்திருந்தவரையும்….உழைத்து களைத்து களத்துமேட்டில் - தன்கட்டையை சாய்த்தாலும் சொர்க்கமென துயில் கொண்டான்….பகிர்ந்துண்ட எச்சல் பண்டத்தில் பெற்ற ஆரோக்கியம்.…நண்பனின் இடைப்பிடித்துக் கற்ற நீச்சல்…..தந்தையின் அதட்டலில் கொண்ட கோபம்….தாயின் அணைப்பில் கண்ட தவிப்பு…அக்காவின் மேல் அக்கறையில் எடுத்த குடும்ப பாரம்….தங்கையின் கண்ணீரில் எழுந்த ரௌத்திரம்….அண்ணனின் அரவணைப்பில் அணை கொண்ட நெஞ்சம்….தம்பியின் தோள்களில் திணவெடுத்த வீரம்…..அத்தைமகளின் வீம்பு… மாமன்மகளின் ...

Page 2 of 2 1 2

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!