ஆவதும்…. அழிவதும்…
விநாடி நேர பார்வை தான்.... - மனம்இணைவதும்...உடைவதும்...முன்னதில் தோன்றிய நம்பிக்கை ...பின்னதில் நொறுங்கியிருக்கலாம்...இடைவிடாது ஏமாந்த மனது...சட்டென விழித்திருக்கலாம்...ஆவதும் ....அழிவதும்....அன்பினால் மட்டுமே.... - ஆலோன் மகரி
விநாடி நேர பார்வை தான்.... - மனம்இணைவதும்...உடைவதும்...முன்னதில் தோன்றிய நம்பிக்கை ...பின்னதில் நொறுங்கியிருக்கலாம்...இடைவிடாது ஏமாந்த மனது...சட்டென விழித்திருக்கலாம்...ஆவதும் ....அழிவதும்....அன்பினால் மட்டுமே.... - ஆலோன் மகரி
அமர்ந்தே இருக்கிறேன்.... ஒற்றைக்கால் திடத்தில்.... மூன்று கால்கள் சமாளித்திருக்கும் இருக்கையின் மேல்... ஓடத் தொடங்கும் முன் நின்ற ஓட்டம்.... கீற்றாக நினைத்த வெளிச்சம்.... கைப்பிடித்து அழைத்துச் சென்று சூன்யத்தில் தள்ளிவிட்டது.... சூன்யமென்றால் வெறிக்க வேண்டுமா? மாட்டேன்.... அனைவரும் செய்வதைச் செய்யமாட்டேன்.... சூன்யத்தைச் சுற்றி வர ஆசைப்பட்டேன்... சூன்யத்தில் தானே பிரபஞ்சம் உருவானது.... வெற்றிடத்தில் தானே அனைத்தும் மிதக்கிறது...?! வெற்றிடம்..... வெறுமையான இடம் அல்லவா? இதை வெற்றியின் இடம் என்றும் கூட ...
காதல் வேண்டாம் .. கல்யாணம் வேண்டாம் .. சடங்குகள் வேண்டாம் .. - அதில் வரும் சந்தோஷம் வேண்டாம் .. நான் வேண்டும் .. என்னை நான் மீட்டெடுக்க வேண்டும் .. யாரும் இல்லா வாழ்வில் .. - எனக்கு நான் போதும் .. - எனையன்றிஎன்னை அதிகமாக நேசிப்பவர் யார் ??? - ஆலோன் மகரி
நீயும் விடவில்லை ....நானும் பற்றிக் கொள்ளவில்லை .... நமக்குள் புகைந்தபடி இருக்கிறது .... நமது நேசம் ...... !!! - ஆலோன் மகரி
நீண்ட நெடிய காலம் தான் ... உன்னை நினையாமல் கழித்தேன் ... நீளும் நாட்களும் நினையாமலே கடந்துச் செல்ல விட்டுவிடு ... எனை கை விட்டது போல ... என் மனதை நொறுக்கியது போல ... என் நினைவுகளையும் தொலைத்து போ ... காற்றிலே மிதக்கும் நிகழ்வுகளை ... மறந்தும் சுவாசித்திடாதே ... பாவம் .. நான் தான் .. அது என்னைக் காட்டிவிட்டால் ... - மீண்டும் நான் நொறுங்கிப் போகக் கூடும் ... !!! - ஆலோன் மகரி
என்னுடன் நான் உரையாடும் வேளையில் .. கண்ணாடி பிம்பமாய் காண முயல்கிறேன் .. - ஏனோ திரை ஒன்று தடுத்து நிற்கிறது .. மனசாட்சி என்ற ஒன்று .. - நான் அதுவாகவோ ? அது நானாகவோ ?!எதுபோல் ஆனாலும் உண்மையை உரைத்திட வேண்டும் .. ஆரம்பத்தில் ஆடிய கபடி இன்றில்லை .. எனை நான் பார்க்க நினைக்கும் நொடி .. எத்திரையும் என் மனத்திரையை மறைப்பதில்லை .. வேறொரு திரை என்னை மறைப்பதை காண்கிறேன் .. என்ன அது ??? - ஆலோன் ...
பற்பல கற்பனையில் ஒன்றாய் .. இன்று அமைய ஆசை .. நினைக்காதது நடப்பதே நிதர்சனம் என்று உணர்த்திவிட்டாய் ..!!! - ஆலோன் மகரி
உன் கண்களில் பூக்கள் மட்டும் தெரிய .. - அதில் பயணிக்கும் எனக்கு அடியில் இருக்கும் முட்களே தெரிகிறது .. முட்களை நினைத்து மலரின் மணத்தை நுகராமல் செல்ல ..உன் முகம் வாடியாது .. உன் மனம் முகர்ந்த நான் .. - மலரின் நறுமணம் நுகரலாமோ ??? - ஆலோன் மகரி
மனதில் ஆயிரம் சஞ்சலங்கள் இருந்தாலும் .. உன் முகம் பார்த்த நொடி .. - என்னில் உறுதி விஸ்வரூபம் எடுப்பதேனோ ??? - ஆலோன் மகரி
மனிதனின் தனிமையை விட .. மனதின் தனிமை .. சில சமயங்களில் .. - மனிதனை நிலை குலையச் செய்கிறது ..!!! - ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….