வினை
வினையெல்லாம் வினைதானா?நீங்காத கறையாக....குறையாத மணமாக.....விதைத்தவை அனைத்தும்....நம் கண் முன்னே முளைத்திடுமா?முளைத்ததெல்லாம் நீ வினையாற்றி வளர்த்தாயா?எவ்வினையும் உன்வினைதான்...ஆனால்...நிகழ்பவையனைத்தும் உன் வினையால் மட்டுமே அல்ல.....ஆற்றும் வினைதான்...ஆற்றல் மிக்கதாக ஆற்றிவிடு....எதிர்வினையோ...உள் வினையோ.....நேர்மறையோ...எதிர்மறையோ....ஆற்றும் வினையின் ஆரம்ப புள்ளியில்....அதற்கான எதிர்வினையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிடு.... - ஆலோன் மகரி