வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம எழுத்தாளர் பயணத்துல நாம சந்திக்க போறது ..
அவங்கள சாதாரணமா எல்லாம் பாக்க முடியாது அவங்கள பாக்க நாம கொஞ்சம் பறக்கணும் .. ஏன் னா அவங்க மேகத்துல மிதந்துட்டு இருக்காங்க ..
வாங்க பேசிக்கிட்டே நாமளும் மேகத்து கிட்ட போகலாம் ..
இவங்கள ரொம்ப சமீப காலமா தான் எனக்கு பழக்கம் .. குழந்தை னு தான் சொல்லணும் .. இவங்க கதைகளும் நமக்கு மிட்டாய இனிக்க வைக்கும் .. கதைல இவங்க சொல்ற மிட்டாய் எல்லாம் நம்ம வாழ்க்கைல ஒரு நாள் வாங்கி சாப்டனும்னு நான் சபதம் எடுத்து இருக்கேன் .. யாருன்னு கெஸ் பன்னிட்டீங்களா ?
வாங்க அவங்களோட பேசியே தெரிஞ்சிக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1.புனைபெயர் – மேகவாணி
2. இயற்பெயர் – பெனாசீர்
3. படிப்பு – பிஎஸ்சி கணினி அறிவியல், Montessori
4. தொழில் – ஆசிரியர், தற்போது முழு நேர எழுத்தாளர்.
5 . பிடித்த வழக்கங்கள் – பாடல் கேட்பது, எழுதுவது, வாசிப்பது.
6. கனவு –
அது நிறைய இருக்கே. வாழ்க்கையில ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் அந்த கனவு மாறுபட்டுகிட்டே இருக்கும்.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
எழுத்துக்கு எல்லா பவரும் இருக்கு. நம்ம குழந்தை மாதிரி. சில நேரம் சிரிக்க வைக்கும், அழுக வைக்கும், ரசிக்க வைக்கும், கோபப்பட வைக்கும், உணர வைக்கும்… இப்படி பல உணர்வை நமக்குள்ள தட்டி எழுப்புறது நால தான் எழுத்துன்னு பேர் வந்து இருக்குமோ🤔😜
8 . உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
ரமணி சந்திரன் மேமின் பெரிய ரசிகை நான். ஸ்கூல் படிக்கும் போதே பழைய புத்தக கடையில நாவல் வாங்கி படிக்கிற ஃபீல் தனி ஃபீல் தான்.
9 . உங்களை எழுத தூண்டியது எது?
என் காதல் கதை தான்… 😍 என்னோட லவ் ஸ்டோரியை டைரியில எழுதணும்ன்னு நினைச்சேன். அப்பறம் தான் அதை ஏன் கதையா எழுத கூடாதுன்னு எண்ணி இப்போ வரை காதலோடு பயணம் செஞ்சுட்டு இருக்கேன்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
2019 செப்டம்பர் இல் இருந்து தான் pratilipi யில் ஆரம்பித்தேன்.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
நிச்சயமா… கதை போக்கு ரொம்பவே அழுத்தமா இருக்குன்னு நினைக்கும் போது அடுத்த சீன்லயே விழுந்து விழுந்து சிரிச்சேன்னு நிறைய பேர் சொல்லிருக்காங்க. அத கேட்கும் போது நம்மளால சிரிச்சாங்கன்றதே ரொம்ப ஹேப்பியா இருக்கும்.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
கண்டிப்பா. ஒரு நெகடிவ் எண்டிங் கதை படிச்சால் ஒரு வித இறுக்கம் நம்மளை அறியாம நமக்குள்ள வந்துடும். இதே ஒரு ஜாலி கதை படிச்சா நம்மளும் ஜாலியா இருக்குற மாதிரி இருக்கும். நம்ம மன நிலையையே மொத்தமா மாத்துற பவர் எழுத்துக்கு நிச்சயம் உண்டு.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
மின்னூல் இப்போ பல எழுத்தாளர்களுக்கு ரொம்பவே உதவிகரமா இருக்கு. எழுதி முடிச்ச கதையை எங்க பதிப்பிக்க, யார்கிட்ட குடுக்கன்னு குழப்பம் இல்லாம, எழுத்தாளர்களுக்கு ஒரு பக்கபலமாக இருக்கிறது மின்னூல்.
என்ன தான் கால மாற்றத்தில மின்னூல் என்ற ஒன்று வந்துட்டாலும், புத்தகத்தில் படிக்கிற ஃபீல் தனி தான்.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ?
( அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
இரண்டு புத்தகங்கள்.
செவ்வானம் நாணுமோ பாவையாலே
உன் ரசிகன் நானல்லவா
தொடர்பு கொள்ள : +919080515206
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
சொந்தமா ஒரு கதை எழுதி அதோட ஆசிரியரே அந்த புத்தகத்தை ஆடியோவா மாத்துறதுக்கு இருக்குற ரெஸ்பான்ஸ விட, அதை திருடி போடுறவங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு… 🙊
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
வெற்றி என்பது ஒவ்வொருத்தர் பார்வைக்கும் மாறும். என்ன பொறுத்த வரை எழுதுற ஒவ்வொரு கதையும் ஒரு வித வெற்றி தான். ஒரு கதை கருவை தெரிந்தெடுத்து, அதை கடைசி வரை முடிச்சு, அதை முழுமையாக்குறது ரொம்பவே சவாலான விஷயம் தான். அந்த ஒரு கதையை எழுதுறதுக்குள்ள எத்தனையோ தடை ஏற்படும். எழுத சூழ்நிலை இல்லாம போகும், தொடர்ந்து பதிவு கொடுக்க முடியாமல் போகும், உடல்நிலை சரியில்லாமல் போகும், அதுனால சில வாசகர்களை கூட இழக்க நேரும். ஆனாலும் அதை எழுத்தாளர் நினச்ச மாதிரி முடிச்சு நிறைவை குடுத்து, எல்லாரையும் படிக்க வைக்கிறதே பெரிய வெற்றி தான்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
இப்போ வரை இல்லை
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
நான் எழுதுன ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான அங்கீகாரத்தை வாசகர்களிடம் இருந்து பரிசாக கொடுத்தது. இதான்னு பிரிச்சு சொல்ல முடியல.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
காதல், குடும்ப கதைன்னா இதுவரை நான் படிச்சு இருக்காத ஃபீல்ல கதாபாத்திரங்களை, கருவை கொடுக்க நினைப்பேன். ஒரு கதைக் கருவை இப்படி தான் கொண்டு போகனும் ன்னு நினச்சுட்டா அதுக்கு ஏத்த கதாபாத்திரங்கள் தானாவே வந்துடுவாங்க.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
தொடைந்ததடி ஜீவனும் உன்னில் சிறுகதைக்கு கிண்டில் இல் மூன்றாவது பரிசு கிடைத்தது..
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
என் எழுத்தை விமர்சித்தா கண்டிப்பா தவறை களைய முயல்வேன். என்னோட அடுத்த கதைகள்ல அந்த விமர்சனத்தை மனசுல வச்சு எழுதுவேன். என்ன விமர்சித்தா கடந்து போய்டுவேன். (தனியா புலம்பட்டும்😂)
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ?
(கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
மன நிலைக்கு ஏத்த மாதிரி இது மாறுமே. நாவல் எழுத எனக்கு பிடிக்கும். ஏன்னா படிக்கும் போதும் க்ரிஸ்ப்பியா மனசுல ஒட்டிக்கும். என்ன ஆப்லைன்ல எழுத முடியல. சோ ஆன்லைன்ல முடிஞ்ச அளவு தொடர்கதையாக நாவலை எழுதுறேன்.
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அப்போதைக்கு பேசப்படவில்லை என்றாலும் காலத்துக்கும் மனதில் நிற்க கூடியது மாறுபட்ட கதைக்கருவே.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
சமூகம் சார்ந்த கதைக் கரு என்றாலும் காதலின் சாயல் வந்து விடும்.
25 .அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
ரசனை ஒவ்வொருவருக்கும் வேறு படும். குறிப்பிட்டு இதை தான் என்று இல்லை.
26 .ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
என்னைப் பொறுத்தவரை கதையின் அத்தியாயம் என்றால் அந்த அத்தியாயம் எங்கு twist உடன் அல்லது எதிர்பார்ப்புடன் தொக்கி நிற்கிறதோ அங்கேயே தொடரும் போட்டு விடுவேன். மற்றபடி அது 1000 வார்த்தையில் முடிந்தாலும் சரி 3000 வார்த்தைகள் வந்தாலும் சரி. எப்போ திருப்தி ஏற்படுத்தோ அப்போ முடிப்பேன்.
27 . எழுதுபவர்கள் பெரும்பாலும் பயன் அடைவதில்லை.
அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
பயன் என்பது கூட அனைவருக்கும் மாறுபடும். எழுத்தாளர்களுக்கு முக்கிய பயனே விமர்சனம் தான். நம் கதைக்கென ஒரு விமர்சனம் வந்தாலும் அது பல கோடி ஈட்டியதற்கு நிகராக மகிழ்ச்சியை கொடுக்கும்.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே😂… இப்போதைக்கு கதை எழுதுவேன் அவ்ளோ தான்.
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
மாற்றங்கள் தானே மனிதர்களே…!
பேசிய வார்த்தைகளை விட, தேவையான நேரத்தில் பேசாத வார்த்தைகளே அதிக வலியைக் கொடுக்கும். (சொந்த வரிகள் தான்)
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்)
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய :
https://tamil.pratilipi.com/user/a0u5078k29?utm_source=android&utm_campaign=myprofile_share
எண்ணிலடங்கா கதைகள், கவிதைகள், கட்டுரைகளை இந்திய மொழிகளில் இலவசமாக படியுங்கள்.
Amazon kindle :
இது அவங்களோட பிளாக் .. அதுலையும் நாம வித விதமா காதல் அ அனுபவிக்கலாம் ..