51 - ருத்ராதித்யன் அருணாச்சலப் பிரதேசம்…..பனி மலையும், பச்சை கம்பளி போன்ற மலையும் எதிரெதிர் நிமிர்ந்து நின்றது. குளிரும், வெயிலும் ஒரே நேரத்தில் வர, இதமான வெப்பம் அங்கே பரவி இருந்தது. ரிஷித் அங்கே தனது இன்னொரு தேடல் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான். ராஜ் கர்ணா இல்லாமல் இரண்டு கைகளும் உடைந்தது போல தான் இருந்தது. அவனிடம் அவனுக்கு ஒன்று வேண்டுமென்று கூறிவிட்டால் போதும் அது எப்படியேனும் அவன் கரங்களுக்கு வந்து விடும். சட்ட விரோதமான பல மருந்துகளை கண்டுபிடித்து, அதை நிழலுலகில் விற்று வந்த பணத்தை வைத்து தான் அவன் இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி...
50 - ருத்ராதித்யன் நானிலன் சக்தி அவனிடம் பேசியபடியே தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். தாயின் உடல்நிலை திடீரென மோசமானதும் என்ன செய்வதென அவனுக்கு புரியவில்லை… பாதிக்கும் மேலாக உடல் தேறி வந்திருந்தார். அன்று தந்தையுடன் மெல்ல நடந்து வருகிறேன் என அருகில் இருக்கும் பூங்காவிற்கு எப்பொழுதும் போல தனது ஊன்று கோலை எடுத்துக் கொண்டு மெல்ல நடந்து சென்றார். “ஹலோ….. இஸ் திஸ் மிஸ்டர் சக்தி ?”, என அலைப்பேசியில் பேச ஆரம்பித்தான். “ஆமா நானிலன்…. நான் சக்தி தான் …. உங்க மேனேஜேர் உங்ககிட்ட விஷயத்த சொல்லி இருப்பாரு…. நீங்க நாளைக்கு...
49 - ருத்ராதித்யன் சக்தி திருச்சி நோக்கி தனது பயணத்தை துவக்கியதும், அவனை தொடர்ந்து ஒரு கார் சென்றது. நானிலன் பற்றிய குறிப்பு ரிஷித்திற்கும் அந்த சுவடிகள் மூலம் தெரிய வந்தது. அவனை அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொல்லி அதிபனிடம் கூறினான். “நான் எதுக்கு உங்களுக்காக வேலை செய்யணும் மிஸ்டர் ரிஷித்?”“நீ உயிரோட இருக்கறதுக்கு அதிபன்… உன்னோட ஆதாயம் என்னனு கணக்கு போட்டு தானே ராஜ் கர்ணாகிட்ட ஆருத்ரா பத்தி சொல்ல வந்த…. இப்போ உன்னோட பெரிய லாபம் உன் உயிர் இந்த உடம்புல எந்த சேதாரமும் இல்லாம இருக்கறது தான்….”, என...
Chicken 87 Hey friends! Today, we're cooking up a storm with a mouthwatering spicy chicken gravy that's packed with flavor and nutrients! Here's what you'll need: Required Ingredients: - 1 kg chicken- 4 teaspoons cumin- 4 teaspoons pepper- 4 teaspoons anise- 1 kg big onion- 10 large chillies- 1 teaspoon mustard- 2 bunches curry leaves Let's get started! Preparation of Masala: Roast those spices (cumin, aniseed, and pepper) in...
48 - ருத்ராதித்யன் “அது என்ன முந்தீர்வு ஆத்ம காலம்?”, சந்தேகமாக கேட்டான். “நீ இவ்வுடலில் வாழும் காலம் முடிந்து, உன் ஆத்மாவிற்கு தீர்ப்பு வழங்கும் காலத்திற்கு இடையில் இருக்கும் காலம்…. அது உனக்கு புரியாது….. உன் கடந்த காலத்தை அறிய முற்படு, உனக்கு நேரம் மிகவும் குறைவாகவே இருக்கிறது….. “, எனக் கூறிவிட்டு அந்த வாகனத்திலேயே கால் நீட்டி படுத்துக் கொண்டார். அவன் அவரை ஒருமாதிரி பார்த்துவிட்டு அந்த சுவடிகளை படிக்க, ஆட்களை வரச்சொல்லி கட்டளையிட்டான். அவன் அவனது ஆராய்ச்சி நிலையம் சென்று வேலையை முடித்துக் கொண்டு திரும்புகையில் பழந்தமிழ் கற்ற இருவர்...
47 - ருத்ராதித்யன் நானிலன் தன்னை ஆருத்ரா வரச் சொல்லி இருப்பது கேட்டே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சில தினங்கள் முன்பு தான் இந்த நிறுவனத்தில் அவன் சேர்ந்திருந்தான். ஆருத்ராவின் நிறுவனங்களில் இவன் பணிபுரியும் இந்த மென்பொருள் நிறுவனமும் ஒன்று. ஆரம்ப நிலையில் இருக்கும் இதில் கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்குமென்று கணக்கிட்டு தான் இதற்கு நேர்காணல் விண்ணப்பம் அனுப்பி இருந்தான். அவனது தேவைக்கு ஏற்ப சம்பளமும் கொடுக்கப்பட்டது. தாயின் மருத்துவ செலவிற்கு வீட்டை விற்ககூடாது என்று தந்தையிடம் கூறியதால், அப்போதைய தேவைக்கு மட்டும் கடன் வாங்கி மருத்துவம் பார்த்தனர். “அப்பா…. எனக்கு வேலை...
46 - ருத்ராதித்யன் டெல்லியில் நரேன் ரன்வீரை சஸ்பென்ட் செய்தவுடன், வேறு டீம் ஆட்களை இந்த வழக்கிற்கு நியமித்து முன்னெடுத்து செல்ல கட்டளையிட்டான். முன்பிருந்த டீமில் பாதி பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அதனால் அனைவரும் அவரவர் ஊர் நோக்கி பயணத்தை தொடங்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். பரிதி, அர்ஜுனும் யாத்ராவும் காப்பாற்றப்பட்டனர் என்று அறிந்ததும் நரேனை காண அவன் வீட்டிற்கு வருவதாக கூறி இருந்தாள். செந்தில் தேனி வீட்டில் இருந்தபடி அவர்கள் இருவருக்கும் அவ்வப்போது தகவல்களை கொடுத்துக் கொண்டு இருந்தார். அவருக்கும் அர்ஜுன் யாத்ராவை காண ஆவலாக இருந்தது, ஆனால் இப்போது இருக்கும் இந்த சிக்கலான...
45 - ருத்ராதித்யன் அந்த அழைப்பை ஆதி எடுத்தான். அந்த பக்கம் ரிஷித் தான். "ஹலோ…..""ராஜ் எனக்கு பத்திரமா வேணும்… அவனுக்கு ஏதாவது ஆச்சி … நீங்க யாரும் நினைச்சி பாக்காத சாவ பாப்பீங்க…", எடுத்தவுடன் உருமினான். "மொதல் ஃபோன் அட்டென்ட் பண்ணா யாரு பேசறதுன்னு கேக்கணும் ரிஷி….. அப்பறம் உன் மிரட்டல் எல்லாம் ஒப்பிக்கலாம்…..", ஆதி சிரித்தபடி பேசினான். "நீ அர்ஜுன் இல்ல…. அவன் அண்ணன் ஆதித்ய கரிகாலன் …. உன் மச்சானுங்கள்ல ஒருத்தன் என் இடத்துக்கே வந்து என் சோதனை எலிங்களை தூக்கிட்டு போயிட்டான். மதுரை சேரலாதன் பையன் கஜேந்திர நெடுமாறன். அவனுக்கு...
44 - ருத்ராதித்யன் மகதன் அந்த நீர்வீழ்ச்சியில் நீர் அருந்திவிட்டு நீருக்குள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. சில நாட்களாக கூண்டிற்குள் அடைபட்டு கிடந்து, பல சித்திரைவதைகளை அனுபவித்து இருந்ததால், நேற்று இந்த செயற்கை குகை பகுதிக்கு வந்ததில் இருந்து நீரிலேயே விளையாடி மன அழுத்தத்தை போக்கி கொண்டு இருக்கிறது. அதிரன் தனக்கு தெரியாமல் தன் டேம் புராஜக்ட் யார் செய்கிறார்கள் என்று கண்டுபிடித்து விட்டு, ராஜ் கர்ணாவிடம் சென்றான். "ஹலோ ராஜ் சார்…. உங்களுக்கு பிரச்சினை குடுத்தது யாருன்னு தெரிஞ்சிருச்சி…. ஆருத்ரா….. சாம்ராஜ் குரூப் ஓட எம்.டி…. ""யார் அது?", ராஜ் கர்ணா அசிரத்தையாக...
43 - ருத்ராதித்யன் "இது எப்ப ஆதியண்ணா? எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல…. அதனால தான் உடனே கல்யாணம் வைக்கறாங்களா? ஆனாலும் இங்க நடக்கறதுக்கும் உன் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஒண்ணுமே புரியல…. நீ எப்போ இருந்து இவங்கள லவ் பண்ற? என்கிட்ட ஏன் சொல்லவே இல்ல? நான் லவ் பண்றேன்னு மொத உன்கிட்ட தானே சொன்னேன்… நீ மட்டும் என்கிட்ட சொல்லவே இல்ல…. போ உனக்கு என்மேல பாசமே இல்ல…. யாத்ரா அண்ணிகிட்ட மட்டும் சொல்லி இருக்க என்கிட்ட சொல்லல…. எல்லாரும் என்னை அவோய்ட் பண்றீங்க…",...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….