91 - ருத்ராதித்யன் அப்போது ஓர் மானை வேட்டையாடியுண்டு, இரத்தம் சொட்டும் முகத்துடன் நரசிம்மன் பின்னே வந்து நின்றான் மகதன். நரசிம்மன் அவனைக் கண்டதும் தாவி விழுந்து மகதன் முகம் முழுதும் முத்தம் கொடுத்து தன் மனம் சுமந்திருந்த வலியினை மகதன் மேல் படுத்தபடி இறக்கிக் கொண்டிருந்தான். மகதன் அவனது அதீத இதயத்துடிப்பை உணர்ந்து அவனுக்கு உடலைக் கொடுத்து, தலையை அவன் கைகளுக்கு வாகாக வைத்துப் படுத்துக் கொண்டான். சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து நரசிம்மன் மகதன் மேல் இருந்து எழுந்து நின்றான். “ஏனடா இப்படி செய்தாய்? உன் காலடி அந்த குழியின் முன் இருப்பது கண்டு...
8 - விடா ரதி… அடுத்த நாள் காலை 5 மணிக்கு அலாரம் அடிக்கவும் எழுந்த ரகு, மனைவியைப் பார்த்தான். அவள் அவனின் மார்பில் கிடந்த மாலைப் போலவே பற்றிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். “ஹம்ம்…. சும்மா சொல்லக்கூடாது…. நல்ல அழகி தான். ஆனா ஒன்னும் உருப்படியா செஞ்சிக்கறது இல்ல… அதனால தான் அப்போ என் கண்ணுக்கு சரியா படலியோ என்னவோ? இன்னிக்கி இவள வேறமாதிரி காட்டணும்….” எனத் தனக்குள் பேசிக்கொண்டு அவளை எழுப்பினான். “ஸ்வர்…. ஸ்வர்….. எந்திரி டி… உன் ப்ரெண்ட் கல்யாணத்துக்கு போகணும்ல…..” மெல்லக் காதருகில் கூறினான். “ம்ம்…. இன்னும் கொஞ்ச நேரம்...
90 - ருத்ராதித்யன் நரசிம்மனும், மகதனும் சதுப்புநில மலை நோக்கி கடல் வழியாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டனர். அந்த மலையைச் சுற்றி சதுப்பு நிலமாக, சேரும், சகதியான புதைக்குழிகளும் நிறைந்திருக்கும். ஆதித்ய நாட்டின் தென்-மேற்கு மூலையில் அது அமைந்திருந்தது. இரண்டாம் அம்புவிக் கோட்டைக்கும், மேற்காட்டு கோட்டைக்கும் நடுவே அந்த சதுப்பு நிலமலை அமைந்திருந்தது. அந்த பகுதிகளில் நிலம் ஊர்ந்து செல்லும் பூச்சிகளும், ஒரு காலத்தில் வானை முட்டும் உயரம் கொண்ட அடர்ந்த முடிகள் கொண்ட மந்த யானைகளும் அங்கே வாழ்ந்ததாக கூறுவார்கள். காலப்போக்கில் அவைகள் கடற்கோளாலும், நிலநடுக்கங்களாலும் அவை அதே மண்ணில் புதைந்து...
7 - விடா ரதி… “ராக்கி…. முதல் வண்டிய நிறுத்துங்க…..”“முடியாது….”“நான் சுந்தரி வீட்ல இன்னிக்கி தங்கறேன்னு சொல்லிட்டேன்... நீங்க இப்படி என்னை கூட்டிட்டு போறது நல்லா இல்ல… என்னை அங்கேயே கொண்டு போய் இறக்கி விடுங்க….”“மாட்டேன்… எனக்கு கல்யாணம் ஆகி இன்னும் ஒருவாரம் கூட முழுசா முடியல... அதுக்குள்ள நீ தனியா சந்தோசமா இருக்கலாம்னு நெனைக்கறியா?”“யோவ்…. ““யோவ் ஆ?” ராக்கி அதிர்ந்து திரும்பிப் பார்த்துவிட்டு, “உன்ன இதுக்காகவே விடமாட்டேன்… வீட்டுக்கு வா உன்ன பேசிக்கறேன்…” எனக் கூறிவிட்டு வீட்டின் முன்னே காரை நிறுத்தி, அவளைத் தூக்கி கொண்டு உள்ளே சென்றான். “இறக்கி விடுங்க மொத...
89 - ருத்ராதித்யன் அமரபுசங்கன் தனது உடலை கையாள முயன்றுக் கொண்டிருந்தான். வன யாத்திரை சிங்கத்துரியனின் கட்டளையின் பேரில் அவனது உடல் அசைவுகளையும் இதயதுடிப்பையும், நாடிகளின் துடிப்பையும் கண்காணித்து குறித்துக் கொண்டிருந்தாள். ஆருத்ரா வனயட்சியிடம் சில விஷயங்களை அறியவும், புரிந்து கொள்ளவும் வேண்டிய கேள்விகளை மனதில் அணிவகுத்தபடி தனது அறையில் இருக்கும் உப்பரிகையில் அமர்ந்து ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள். ருத்ரக்கோட்டை அரசரும் அரசியும் தான் மிகவும் மனம் கனத்து தங்களது அறையில் அமர்ந்து இருந்தனர். அமரபுசங்கனின் இந்நிலைப் பற்றி பேரரசரும், மகாராணியாரும் வந்து கேட்டாள் என்னவென்று பதில் உரைப்பது? இந்த திரவம் அவனது அன்னை...
6 - விடா ரதி… “ரதி….” என அவன் தவிப்புடன் பேச ஆரம்பிக்கவும், “இதுல உங்க தப்புன்னு நான் எதுவும் சொல்ல முடியாது ராக்கி… நான் தான் உங்ககிட்ட பேசவே இல்லயே…… நான் பேசி நீங்க மறுத்திருந்தா உங்கள மறக்க முடியலன்னாலும், என்னோட தவிப்பாவது கொறஞ்சி இருக்கும்…. ஆனா நான் எதுக்குமே வாய்ப்பு ஏற்படுத்திக்கல….”ரகு அவள் கூறுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அருகில் வந்து, “இப்போ நீங்க என் புருஷன் … ஆனா என்னால தான் அந்த உரிமைய முழுசா எடுத்துக்க முடியாம கொஞ்சம் நெருடல் இருக்கு….““ஏன்?”“என்னை நீங்க அப்போ...
88 - ருத்ராதித்யன் மூன்று உருவங்களையும் அவன் நீரில் விட்ட ஈட்டி தொடும்படியான தூரத்தில் நடு புள்ளியில் வந்து நின்று படக்கினை வட்டமாக செலுத்தினான். அப்படி செலுத்தும் போது தான் அவனுக்கு இன்னொரு விஷயம் கண்களில் பட்டது. முதலில் ஒரு உருவம் பின்னே செல்ல அதற்கு இரு நொடிகள் வித்தியாசத்தில் மற்ற இரண்டு உருவங்களும் பின்னால் சென்றன. நீரில் அவை பின் செல்வது நடுவில் இருந்து பார்த்தவனுக்கு இன்னல் தீர்க்கும் மார்க்கமும் புரிந்தது. நீரில் பின்னால் அடித்து செல்லப்பட்ட முதல் உருவத்தினை குறித்துக் கொண்டு அதை நோக்கி படகை செலுத்தினான். நிஜமான மகதன்...
5 - விடா ரதி… அவளது வாழ்வில் மறக்க முடியாத நாள், முதன்முதலில் அவனைக் கண்டு மெய்மறந்து நின்றது அன்று தான். ஆலீவ் பச்சை மேல்சட்டையும், கருப்புநிறத்தில் கால்சராயும் அணிந்திருந்தான். அவளோ வெள்ளையில் மஞ்சள் எம்ப்ராய்டரி செய்தப் பூக்கள் கொண்ட சல்வார் அணிந்திருந்தாள். அது அவளுக்கு கல்லூரி முதல் வருடத்தின் கடைசி மாதங்கள்…. அந்த வயதிற்குரிய குறும்பும், சேட்டையும் என அவளது குணம் கலகலப்பானதாக இருந்தது. அவளைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவளது வேடிக்கைப் பேச்சில் அவ்வப்போது சிரிப்பு சத்தமும் வெடித்துக் கொண்டே இருக்கும். அதிக அலங்காரமின்றி எப்போதும் கல்லூரிக்குச் செல்வது போல...
87 - ருத்ராதித்யன் “தாங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் ஐயா? இது எங்களின் தவறு தான். ஒரு மனிதனின் சொல்லை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று ஓர் உயிரை இழந்தபின் தான் புரிகிறது. இவனைப் பற்றி அப்போதே இங்கே ஆள் அனுப்பி விசாரித்து இருந்தால் இப்படியொரு நிலை அவளுக்கு வந்திருக்காது. என் ஐயன் ஊர் தலைவர் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக வேறெந்த கேள்விகளும் இன்றி பெண்ணை மனம்முடித்து கொடுத்தார்..” எனக் கூறியவள் அக்காளின் நினைவிலும், தந்தையின் நினைவிலும் கண்ணீர் சிந்தினாள். “இல்லையம்மா.. இந்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் அருகிருப்பவரின் நலனில் அக்கறை எடுக்கவேண்டியது கடமை....
4 - விடா ரதி… அடுத்தநாள் காலை சுந்தரியின் நிச்சயத்திற்கு புடவைக் கட்டிக்கொண்டிருந்தபோது ரகு அறைக்குள் வந்தான். இடையில் மடிப்புகளைச் சரிசெய்தபடி கண்ணாடி முன் நின்றுக்கொண்டிருந்தாள். ரகு அவளைப் பார்த்தபடி அருகில் வந்து அவளை தன் முன் நிறுத்தி கீழே சில மடிப்புகளைச் சரிசெய்துவிட்டு, அமர்ந்த வாக்கிலே அவளைத் தலைநிமிர்ந்துப் பார்த்தான். “உனக்கு புடவைன்னா ரொம்ப பிடிக்குமா ரதி?”“புடவை கட்டப்பிடிக்கும்…...““எனக்கும் தான் உனக்கு கட்டிவிடணும்-ன்னு ஆசை இருக்கு... ஆனா உனக்கு நல்லாவே கட்ட தெரியும் போலவே?” கவலையுடன் கேட்டான். “ஹலோ மிஸ்டர்…... உங்களுக்கு மனசுல டீனேஜ் பையன்னு நினைப்பா? ரெண்டுபேரும் ஏர்லி 30’sல இருக்கோம்… ஞாபகம்...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….