1 - காற்றிலாடும் காதல்கள்... இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்... ஆகாயத்தில் பறந்து விரிந்திருக்கும் சூனியத்திலிருந்து ஓர் வெளிச்சம் பூமியின் மேலே வந்து நின்றது. ஒளி வெள்ளமாக முதலில் தெரிந்தவை மெல்ல இரண்டு உருவங்களாகத் தெரிய, இரண்டு பெண்கள் சிரித்தபடிப் பூமியைப் பார்த்து நின்றனர். “ஏழிசை! நீ வணங்க வேண்டிய தெய்வம் அங்கே வீற்றிருக்கிறார். அவரது மனம் குளிர்ந்துவிட்டால் போதும். நான் கூறிய வார்த்தை ஞாபகம் இருக்கிறதா?” எழில் கொஞ்சும் அழகியவள் கேட்டாள். “நன்றாக நினைவிருக்கிறது காந்தா. நீ திரும்பி செல். நான் அத்தெய்வத்தின் அன்பை பெற்றபின் தான் நமது லோகத்திற்கு வருவேன்.” எனக் கூறிய ஏழிசை...
118 - ருத்ராதித்யன் இங்கே அரசகேசரி அபராஜிதனை நெருங்க முடியாமல் எந்த தகவலையும் பெற முடியாமல் தனது அறையில் உலாவிக் கொண்டிருந்தான். எந்த ஏவலும், அடிமை பிசாசுகளும் ஆதித்ய கோட்டையை நெருங்க முடியவில்லை என்பதே இதன் முக்கிய காரணம். “கோட்டையின் எட்டு மூலைகளிலும் காளி சிலையும், நான்கு வாயிலிலும் சிம்மயாளியுடன் கூடிய விநாயகர் சிலையை நிறுவி வைத்திருந்தனர். அத்துடன் இப்போது புதிதாக கட்டிய ஐந்து முக ஆஞ்சநேயர் சிலை ஒரு பக்கமும், ஐந்து முக விநாயகர் சிலை ஒரு பக்கமும் உயர்ந்து நின்று அந்த கோட்டையை எந்த தீய சக்திகளும் ஆண்டாத வண்ணம்...
4 - ரெட்டைக்குன்றுக் கோட்டை “இந்த ரிசார்ட் எப்போ கட்டின? என்கிட்ட சொல்லவே இல்ல? என்னோட ஷேர் எவ்ளோ இங்க?” என முன்பக்க இருக்கையில் அமர்ந்தபடிக் கேட்டான். “இது என்னோட தனிப்பட்ட ஷேர். உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. 5 நிமிஷம் லேட்.” என அவனை முறைத்துவிட்டு வேகமாக வண்டியைக் கிளப்பினான். “இன்னும் சாப்பிடவே இல்ல..” என சேகர் கூற, “கோட்டைல தான் சாப்பாடு” என அவனைப் பார்க்காமலே பதில் கூறிவிட்டு வாகனத்தை ஓட்டினான். ‘ரூம்ல இருந்த சாக்லேட் எடுத்துட்டு வந்திருக்கலாம்..’ என சாலை வளைந்து செல்லும்போது நினைத்தான். கவிநேசன் ஒரு பாக்கெட் மிட்டாயை அவனிடம் நீட்டினான்....
3 - ரெட்டைக்குன்றுக் கோட்டை “இன்னிக்கி சின்ன மொதலாளிங்க வர்றப்ப இப்படியா நடக்கணும்? என்ன பண்றது செல்லய்யா?” என அந்த கோட்டையின் மூத்த நிர்வாகிப்பாளர் குமரேசன் கேட்டார். “இப்போதிக்கு இதை பின்னாடி பக்கம் தூக்கி மறைச்சி வைக்கலாம் தாத்தா.. மொதலாளி நல்ல மனநிலைல இருக்கறப்ப இதப்பத்தி சொல்லுவோம். ஆனா அதுவரைக்கும் இது முழுசா இருக்குமான்னு தெரியலியே.. ஏற்கனவே அங்க போட்டு வச்ச ரெண்டு படமும் மொத்தமா சாம்பலாகிடிச்சி..” என அங்கே வேலை செய்யும் செல்லய்யா கூறினான். “சரி. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் கழிச்சி இங்க வராங்க, வந்ததும்...
117 - ருத்ராதித்யன் “சித்ராங்கி.. அம்புவி கோட்டையில் கடற்கோள் ஏற்பட்டபோது தனது தாயை இழந்து கைக்குழந்தையாக நின்றாள். அவளின் தந்தைக்கு மக்களை காக்கவே நேரம் சரியாக இருக்க, இவளை கவனிக்க முடியவில்லை. மக்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே கொண்டு வெகு குறுகிய காலத்தில் ஓர் உயரமான நிலத்தில் மக்கள் வாழவும் அவர்களின் தொழில் செழிக்கவும் பல அரிய முயற்சிகளை மேற்கொண்டு இன்று செழிப்பாகவும் வாழ வைத்து கொண்டிருக்கிறார். இவள் இரண்டு வயது குழந்தையாக ஜுரம் வந்து அனத்தி கொண்டிருந்த வேளையில் தான் மகாராஜாவும் மகாராணியும் அந்த கோட்டையை...
2 - ரெட்டைக் குன்றுக்கோட்டை கவிநேசன் அன்று இரவு தனது மடிக்கணினியில் தனது தொழில் சம்பந்தமான தரவுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான். அண்ணன் தம்பி இருவரும் ஒரே காரில் வந்திருந்தாலும் இங்கே வந்ததில் இருந்து ஒருவரின் முகத்தை மற்றவர் பார்க்க முயலவில்லை. இருவருக்கும் எப்போதும் சண்டையும், வாக்குவாதங்களும் தான் நடக்கும். கவிநேசன் எப்போதும் தனது நேரத்தை மிகவும் பயனுள்ளதாக தான் செலவழிப்பான். அவனுக்கு நேரத்தை விரயமாக்கினால் பிடிக்காது. ஒவ்வொரு மணித்துளியும் அவனுக்கு அத்தனை முக்கியம். மனதை ஆசுவாசப்படுத்த கூட தனது நேர அட்டவணையில் ஒரு நேரத்தை ஒதுக்கி ஆசுவாசம் கொள்வதையும் சிரத்தையோடு செய்வான் என்றால் பாருங்கள்...
116 - ருத்ராதித்யன் தேனிசை கூறியவற்றை எல்லாம் மனதில் அசைபோட்டபடி ஆருத்ரா மகதன் இருக்குமிடம் சென்றாள். ருத்ர விக்னன் அபராஜிதனை கவனிக்கும் வேலையில் இருப்பதால் இப்போது மகதன் மட்டுமே வனதேவி ஆலயத்தில் காவல் இருக்கிறான். அவனை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற கடுமையான கட்டளை அங்கிருந்த அனைவருக்கும் இருந்தது. அதனால் அந்த வேலியை தாண்டி யாரும் அவனிடம் நெருங்கவில்லை. திருவிழா என்பதால் பல குழந்தைகளும் ஆங்காங்கே ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுமே மகதனை தூரத்தில் இருந்து கண்டுவிட்டு தங்களின் விளையாட்டில் மும்முரமாக இருந்தனர். இந்த திருவிழாவினால் அனைத்து சமஸ்தான கோட்டைகளில் இருந்தும் பல...
1 - ரெட்டைக் குன்றுக்கோட்டை “வணக்கம் மக்களே.. இன்னைக்கு நம்ம போகப்போறது எங்களோட ஜமீன் கோட்டை மாளிகைக்கு.. நான் சின்ன புள்ளையா இருந்தப்போ ஒரு தடவை இங்க வந்திருக்கேன் அதுக்கப்பறம் இப்போதான் மறுபடியும் அங்க போறேன்.. நீங்களும் என்கூட வந்து எங்க கோட்டை மாளிகைய பாருங்க என்ஜாய் பண்ணுங்க.. மறக்காம இந்த வீடியோவ லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க, என் சேனல சப்ஸ்க்ரைப் பண்ணுங்க..” என உற்சாகமான குரலில் ஒருவன் காரின் சன்ரூஃப் வழியாக நின்றபடி செல்லும் பாதையை காட்டி பேசினான். அது ஓர் அழகான மலைப்பாதை. இரண்டு பக்கமும் டீ எஸ்டேட்...
115 - ருத்ராதித்யன் வெளியே வனயட்சி பேசிக்கொண்டிருந்த அனைத்தும் அபராஜிதனின் ஆன்மாவும் அருகிருந்து கேட்டுக் கொண்டுதானிருந்தது. வனயட்சி 90 சதவீதம் அவனின் அடிமையாக மாறியிருந்தார். மீதமிருக்கும் 10 சதவீதம் மட்டும் ஏனோ இன்னும் அவனால் சாதிக்க முடியவில்லை. அதற்கு அவனை எதுவோ மூர்க்கமாக தடுக்கிறது. விரைவாக இந்த நாடகத்தை முடித்துவிட்டு இந்த கோட்டையை முழுதாக ஆராய வேண்டும் என்ற வேகம் அவனுக்கு நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருந்தது. ருத்ரக் கோட்டையை முழுதாக அடைந்து அதனை வைத்து ஆதித்யக் கோட்டையை கைப்பற்ற நினைத்தவனுக்கு கை மேல் பலனாக ஆதித்ய கோட்டையின் உள்ளே இருக்கும் மத்திய ஆதுரசாலையில்...
114 - ருத்ராதித்யன் அவனது இரத்தம் அவரின் உடலில் நேராக மூலாதாரம் இருக்குமிடத்தை அடைந்து அவரது ஆத்மாவை கட்டியது. அவரது ஆத்மா அப்போது அடைந்த வேதனையும், துடிப்பும் அவரது மனம் உடல் கூறாக கிழியும் வலியைக் கொண்டதைப் போல காட்டியது. அதில் அவரது கண்ணீர் அபராஜிதனின் உச்சந்தலையில் விழுந்து அவனுடலில் புகுந்து அவனை அவரின் அன்பிற்கு கட்டுப்பட வைத்தது. “தாயே.. புதிதாக வந்தவன் மேலே தங்களுக்கு இத்தனை அன்பா? இருவரும் கண்களில் நீர் வழிய ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறீரே.. அப்படி என்ன இவன் மேலே தங்களுக்கு தனியாக அன்பு வந்தது?” என...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….