120 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

120 - ருத்ராதித்யன்  சித்ராங்கி ஆருத்ரா அப்படி கூறியதும் அவளின் அருகே வந்து அவளது கண்களை ஆழமாகப் பார்த்தாள். “நீ என்ன செய்வதாக இருக்கிறாய் ஆருத்ரா?” எனக் கண்டிப்புடன் கேட்டாள். “நான் செய்ய வேண்டியதை செய்ய போகிறேன். எனது தோழியாக நீ எனக்கு சில உதவிகள் செய்ய வேண்டும்… செய்வாய் தானே?” “நீ செய்யப் போகும் செயலை வைத்து தான் அதை நான் கூற முடியும்…” என சித்ராங்கி உரைத்தாள். “சற்று நேரத்திற்கு முன்னே நீ கேட்டது கொடுக்கப்படும் என்று நாங்கள் கொடுத்த வாக்கை நினைத்துக் கொள் இளவரசி… அதே போன்ற ஒரு வாக்கு தான் இதுவும்..”...

4 – காற்றிலாடும் காதல்கள்

1 – காற்றிலாடும் காதல்கள்…

4 - காற்றிலாடும் காதல்கள்  தென்னை மரத்தோப்பின் நடுவே கச்சிதமாக வீற்றிருக்கும் அந்தப் பழங்காலத்து மச்சு வீட்டின் மாடியில் இருந்த ஒற்றை அறையை, பேத்திகென நவீன காலத்திற்கு ஏற்ப வசதியாகப் புதுவிதமாக வடிவமைத்திருந்தார் வெள்ளைச்சாமி. பேத்தியின் வேதனை அறிந்தவர் அவளின் மன அமைதிக்காகவே மகனிடம் சண்டையிட்டுப் பேத்தியை இங்கே வரவழைத்து இருந்தார். இங்கிருந்தால் அவளின் மனம் மாறும் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்தது. இந்த ஊர்மக்களும், விண்ணுலக தேவர்களின் வருகை நிறைந்த மண்ணும் அவளுக்கு நன்மைப் பயக்கும் என்ற எண்ணம் தான். “அம்மாடி மிருணா.. எந்திரி டா.. இங்க வந்து பாரு..” என அவளை...

3 – காற்றிலாடும் காதல்கள்

1 – காற்றிலாடும் காதல்கள்…

3 - காற்றிலாடும் காதல்கள்  வெள்ளைச்சாமி வீட்டிற்குக் கீதனோடு வந்து சேர்ந்தான் இந்திரன். அவர்களை ஒரு பெண்ணை அழைத்து வரும்படி கூறியனுப்பினர் இரு தாத்தாக்களும். “யாரு தாத்தா வராங்க?” இந்திரன் கேட்டான். “என் மவன் பொண்ணு டா. பேரு மிருணாளினி. பத்திரமா கூட்டிட்டு வாங்க டா. பட்டணத்துல வளந்த புள்ள பாத்து நடந்துக்கங்க.”என வெள்ளைச்சாமி பெருமையுடன் கூறினார். “ஏன் தாத்தா உன் மவன் தான் பட்டணத்துக்கு எப்பவோ குடி போயிட்டாங்களே நீ ஏன் இன்னும் தென்னந்தோப்புல தனியா பூதமாட்டம் காவல் காக்கற?” இந்திரன் கேட்டான். கீதன் சிரிப்புடன் அவனையும் வெள்ளச்சாமி தாத்தாவையும் பார்த்துக் கொண்டே அனைவருக்கும் இளநீர்...

119 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

119 - ருத்ராதித்யன் “நாம் அதை தனியாக நமது அறையில் பேசிக்கொள்ளலாம்.. இப்போது ருத்ர விக்னன் அவளுடன் சென்று இருக்கிறானே.. என்ன செய்வது?” என நரசிம்மன் சுற்றிலும் கண்களை சுழற்றியபடி கேட்டான். “அவளும் விக்னனும் ஓர் புரிதலில் தான் தனியாக சென்று இருக்கிறார்கள். தாம் இருவரும் பேசி கொண்டிருங்கள் நான் தாயாரை பார்த்து விட்டு வருகிறேன்..” எனக் கூறிவிட்டு சிங்கத்துரியன் அங்கிருந்து சென்றான். “இங்கு நடப்பது எல்லாம் என் மனதை அதிகம் வலிக்க செய்கிறது இளவரசி..” என நரசிம்மன் அவளின் தோள் அணைத்து நடந்தபடிக் கூறினான். “உங்கள் அனைவருக்கும் விஷயம் இது தான் என முழுதாக...

2 – காற்றிலாடும் காதல்கள்

1 – காற்றிலாடும் காதல்கள்…

2 - காற்றிலாடும் காதல்கள் “வணக்கங்க ஐயா... பெரியம்மா நகை எல்லாம் கொண்டு வர சொன்னாங்க.. இன்னிக்கி கொண்டு போகட்டுங்களா?” எதிரே வந்த நகை ஆசாரி விஸ்வநாதனிடம் கேட்டார். “இன்னிக்கி பாடமை ஆசாரி... மறந்துட்டியலோ? நாலாம் நாலு கொண்டு வாங்க.. இன்னிக்கி நெறைய புது வகையா வந்திருக்காமே.. அது எல்லாம் போட்டோ புஸ்தகமா கொண்டு வாங்க.. புள்ளைக்கு புடிச்சது சொன்னா செஞ்சிருவோம்.. வரட்டா..” எனக் கூறியபடிக் கிளம்பிவிட்டார். “சரிங்கய்யா...“ எனக்கூறி ஆசாரி ஒதுங்கி வழிவிட்டு நின்றார். விஸ்வநாதன் தனது மாந்தோப்பு இருக்கும் இடத்திற்கு செல்லும் வழியில் மலைக்கோவில் செல்லும் தனது பேரனைக் கண்டார். அவனின் செயல்கள்...

1 – காற்றிலாடும் காதல்கள்…

1 – காற்றிலாடும் காதல்கள்…

1 - காற்றிலாடும் காதல்கள்...  இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்... ஆகாயத்தில் பறந்து விரிந்திருக்கும் சூனியத்திலிருந்து ஓர் வெளிச்சம் பூமியின் மேலே வந்து நின்றது. ஒளி வெள்ளமாக முதலில் தெரிந்தவை மெல்ல இரண்டு உருவங்களாகத் தெரிய, இரண்டு பெண்கள் சிரித்தபடிப் பூமியைப் பார்த்து நின்றனர். “ஏழிசை! நீ வணங்க வேண்டிய தெய்வம் அங்கே வீற்றிருக்கிறார். அவரது மனம் குளிர்ந்துவிட்டால் போதும். நான் கூறிய வார்த்தை ஞாபகம் இருக்கிறதா?” எழில் கொஞ்சும் அழகியவள் கேட்டாள். “நன்றாக நினைவிருக்கிறது காந்தா. நீ திரும்பி செல். நான் அத்தெய்வத்தின் அன்பை பெற்றபின் தான் நமது லோகத்திற்கு வருவேன்.” எனக் கூறிய ஏழிசை...

118 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

118 - ருத்ராதித்யன்  இங்கே அரசகேசரி அபராஜிதனை நெருங்க முடியாமல் எந்த தகவலையும் பெற முடியாமல் தனது அறையில் உலாவிக் கொண்டிருந்தான். எந்த ஏவலும், அடிமை பிசாசுகளும் ஆதித்ய கோட்டையை நெருங்க முடியவில்லை என்பதே இதன் முக்கிய காரணம். “கோட்டையின் எட்டு மூலைகளிலும் காளி சிலையும், நான்கு வாயிலிலும் சிம்மயாளியுடன் கூடிய விநாயகர் சிலையை நிறுவி வைத்திருந்தனர். அத்துடன் இப்போது புதிதாக கட்டிய ஐந்து முக ஆஞ்சநேயர் சிலை ஒரு பக்கமும், ஐந்து முக விநாயகர் சிலை ஒரு பக்கமும் உயர்ந்து நின்று அந்த கோட்டையை எந்த தீய சக்திகளும் ஆண்டாத வண்ணம்...

4 – ரெட்டைக்குன்றுக் கோட்டை

1 – ரெட்டைக் குன்றுக்கோட்டை

4 - ரெட்டைக்குன்றுக் கோட்டை “இந்த ரிசார்ட் எப்போ கட்டின? என்கிட்ட சொல்லவே இல்ல? என்னோட ஷேர் எவ்ளோ இங்க?” என முன்பக்க இருக்கையில் அமர்ந்தபடிக் கேட்டான். “இது என்னோட தனிப்பட்ட ஷேர். உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. 5 நிமிஷம் லேட்.” என அவனை முறைத்துவிட்டு வேகமாக வண்டியைக் கிளப்பினான். “இன்னும் சாப்பிடவே இல்ல..” என சேகர் கூற, “கோட்டைல தான் சாப்பாடு” என அவனைப் பார்க்காமலே பதில் கூறிவிட்டு வாகனத்தை ஓட்டினான். ‘ரூம்ல இருந்த சாக்லேட் எடுத்துட்டு வந்திருக்கலாம்..’ என சாலை வளைந்து செல்லும்போது நினைத்தான். கவிநேசன் ஒரு பாக்கெட் மிட்டாயை அவனிடம் நீட்டினான்....

3 – ரெட்டைக்குன்றுக் கோட்டை

1 – ரெட்டைக் குன்றுக்கோட்டை

3 - ரெட்டைக்குன்றுக் கோட்டை “இன்னிக்கி சின்ன மொதலாளிங்க வர்றப்ப இப்படியா நடக்கணும்? என்ன பண்றது செல்லய்யா?” என அந்த கோட்டையின் மூத்த நிர்வாகிப்பாளர் குமரேசன் கேட்டார்.  “இப்போதிக்கு இதை பின்னாடி பக்கம் தூக்கி மறைச்சி வைக்கலாம் தாத்தா.. மொதலாளி நல்ல மனநிலைல இருக்கறப்ப இதப்பத்தி சொல்லுவோம். ஆனா அதுவரைக்கும் இது முழுசா இருக்குமான்னு தெரியலியே.. ஏற்கனவே அங்க போட்டு வச்ச ரெண்டு படமும் மொத்தமா சாம்பலாகிடிச்சி..” என அங்கே வேலை செய்யும் செல்லய்யா கூறினான்.  “சரி. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் கழிச்சி இங்க வராங்க, வந்ததும்...

117 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

117 - ருத்ராதித்யன்  “சித்ராங்கி.. அம்புவி கோட்டையில் கடற்கோள் ஏற்பட்டபோது தனது தாயை இழந்து கைக்குழந்தையாக நின்றாள். அவளின் தந்தைக்கு மக்களை காக்கவே நேரம் சரியாக இருக்க, இவளை கவனிக்க முடியவில்லை. மக்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே கொண்டு வெகு குறுகிய காலத்தில் ஓர் உயரமான நிலத்தில் மக்கள் வாழவும் அவர்களின் தொழில் செழிக்கவும் பல அரிய முயற்சிகளை மேற்கொண்டு இன்று செழிப்பாகவும் வாழ வைத்து கொண்டிருக்கிறார். இவள் இரண்டு வயது குழந்தையாக ஜுரம் வந்து அனத்தி கொண்டிருந்த வேளையில் தான் மகாராஜாவும் மகாராணியும் அந்த கோட்டையை...

Page 1 of 58 1 2 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!