113 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

113 - ருத்ராதித்யன் “அடடே.. நானின்றி இங்கே பெரும் கூட்டமே கூடி நிற்கிறதே.. எனக்கெல்லாம் அழைப்பு இல்லையா இளைய இளவரசி ?” என வனயட்சியின் பேச்சில் வேறுபாடும், விகல்பமும் அப்பட்டமாக அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது. “வனயட்சியின் கண்களில் இருந்து யாரும் தப்ப தான் முடியுமா ? இல்லை உங்கள் கண்களில் படாத செயல்கள் தான் இங்கே நிகழ்ந்திடுமா என்ன? வேற்று ஆட்களுக்கு தான் அழைப்பு தேவை உங்களுக்கு அழைப்பு வேண்டுமா வனயட்சி?” என வனயாத்திரையும் அவரின் எதிரே தீரமும், கூர்மையும் கொண்ட கண்களுடன் முன்னே வந்து நின்று கேட்டாள். “இந்த வாய் மட்டும் குறைவதே...

112 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

112 - ருத்ராதித்யன்  வனயாத்திரை அந்த குடுவையை அடுக்கடுக்காக பெண்களின் கர்ப்பம் போல உருவாக்கி அதில் இருக்கும் சூடு முதல் இன்னபிற கரு வளர தேவையான விஷயங்கள் கிடைக்கும் படியாக அந்த அறையிலேயே ஓர் அடுக்கு தரையை ஏற்படுத்தியிருந்தாள். ஒரு நாழிகை கடந்தும் உள்ளே இருக்கும் முதல் துளி நீரின் பிரகாசம் குறையாமல் இருந்தால் கரு நிற்கவில்லை என்று அர்த்தம். அதில் உள்ள பிரகாசம் குறைந்து அடர் நீளத்தில் லேசான வெள்ளை வெளிச்சம் அதில் தெரிந்தால் கரு நின்றுவிட்டதாக அர்த்தம். இதை எல்லாம் கண்மயாவிடம் அங்கேயே நன்றாக கேட்டு கொண்டதால் அவர் கூறிய...

111 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

111 - ருத்ராதித்யன் அபராஜிதன் கொண்டு வந்த வசிய மருந்து வீணாக போனதில் கடும் கோபத்தோடு காற்றாக கானகத்தில் அலைந்துக் கொண்டிருந்தான். அவனது திட்டத்தை சிதைத்த தீரன் மீது அந்த சினமானது அதீதமாக இருந்தது.  ஆருத்ரா மீதிருந்த மோகத்தால் இந்த காரியத்தில் தனது புத்தி மழுங்கி போனத்தையும் இப்போது உணர்ந்திருந்தான். அவளை தெளிவாக திட்டம் போட்டு தனது வலையில் விழவைக்கவேண்டும். மீண்டும் அவளை தப்ப விடக்கூடாது என்பதில் உறுதி கொண்டு தனது குடிலுக்கு வந்து சேர்ந்தான்.  அதற்கான யோசனையுடன் அவன் ஆதுரசாலை செல்லும் பாதையில் பயணிக்கும் போது சிங்கத்துரியன் அவன் எதிரே வனயட்சியுடன் வந்து...

110 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

110 - ருத்ராதித்யன்  வனயாத்திரை அந்த ஆலோசனை அறையில் இருந்து வெளியே வந்ததும் நேராக ஆரதுசாலையின் பின்னால் இருக்கும் மருந்து கிடங்கிற்கு சென்று நின்றாள். அங்கே அவளுக்கு தேவையான மூலிகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு கணக்கும் கூறிவிட்டு, வனயட்சியின் தனிபட்ட மருத்துவ அறைக்கு சென்றாள். அங்கே வனயட்சி தான் செய்த மற்றும் செய்யும் அனைத்து ஆராய்ச்சி தரவுகளையும் பத்திரமாகக் குறித்து வைத்திருப்பார். அங்கே கல் தூணிற்க்கு பின்னால் ஓர் இரகசிய அறை உண்டு. அங்கே தான் இந்த குறிப்புகள் தங்கத் தகட்டில் குறித்து வைக்கப் பட்டிருக்கும். தனி தனி நீள் சதுர தகடாக...

109 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

109 - ருத்ராதித்யன்  தீரன் அவனது இடத்தில் இருந்து ஓடி வந்து அந்த வசிய மருந்தினை மண்ணிற்குள் புதைத்து ஆருத்ராவினை தடுத்து நின்றான். “என்ன ஆனது தீரா? ஏன் இப்படி முன்னால் வந்து நிற்கிறாய்?” என நரசிம்மன் அவனது கண்களை பார்த்தபடிக் கேட்டான். தீரனின் கண்கள் அபராஜிதன் அங்கே காற்றாய் கலந்து நிற்கும் இடத்தினை பார்த்தபடி, “ம்மாஆ..” எனக் கத்தினான். “பசிக்கிறதா? இங்கிருக்கும் புற்களை சாப்பிட விருப்பமில்லையா உனக்கு? வா உனக்கு என்ன வேண்டும் கூறு நான் கொண்டு வருகிறேன்..” என ஆருத்ரா அவனது பசியாற்றும் பொருட்டு அவனை அவனது இருப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றாள். ஆருத்ரா...

108 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

108 - ருத்ராதித்யன்  அங்கே வனயட்சியுடன் சென்ற கூட்டமானது காட்டிற்குள் சல்லடைப்போட்டு குகையை தேடிக் கொண்டிருந்தது. அபராஜிதன் மனதிற்குள் நேரத்தை கணக்கிட்டபடி அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டே வனயட்சியை கவனித்துக் கொண்டிருந்தான். “நள்ளிரவில் இவர்களை விடுத்து எப்படி செல்வது? இவர்களிடம் சிக்காமல் வசிய பூஜைக்கு சென்று வரவேண்டும்.. “ என மனதிற்குள் முணுமுணுத்தபடி அவன் தனியாக சென்றுக் கொண்டிருந்தான். “புதியவனே .. நீ எங்கே இந்த பக்கம் செல்கிறாய்? இந்த திசையில் ஒரு கல் தொலைவு வரை சென்று அங்கிருக்கும் பெரும் பாறைகள் எல்லாம் கணக்கெடுத்து வா..” என அவன் பின்னே வந்தவன் அவனுக்கு...

107 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

107 - ருத்ராதித்யன்  அவளை நோக்கி வேகமாக ஓடி வரும் தீரன் எனும் காளை நரசிம்மனின் சீழ்க்கை ஒலி கேட்டதும் அவன் பக்கமாக திரும்பி ஓடியது. அது ஓடுவதைக் கண்டால் சிறிய கருங்குன்று ஒன்று உருண்டு செல்வதைப் போல தான் தெரியும். சிவத்தீரியம் எனும் வகையில் சேர்ந்தது. இறைவனார் சிவபெருமானிடம் இருக்கும் நந்தீஸ்வரர், இந்த வகை காளை தான் என்றும் ஓர் கருத்துண்டு.  அடங்க மறுக்கும் திமிலும், பாறையையும் மோதியுடைக்கும் பலமான உடலும் கொண்டவை இவை. அதீத அன்பை காட்டும் அதே சமயம் கோபமும் அதிகமாகவே வெளிப்படுத்தும். ஆருத்ரா, அவனைக் கன்றாக இருந்தபோது...

106 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

106 - ருத்ராதித்யன் “வணக்கம் வனயட்சி அவர்களே.. நான் தங்களை காண வெகுதூரத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்களிடம் மருத்துவம் பயிலவேண்டும் என்பது எனது மிகப்பெரும் கனவு. அக்கனவை தாங்கள் நிறைவேற்றுவீர்களா?” எனக் கேட்டபடி அபராஜிதன் மாறுவேடத்தில் வந்து பேசிக் கொண்டிருந்தான். “யாரப்பா நீ? எங்கிருந்து வருகிறாய்?” வனயட்சி அவனை ஆராய்ச்சியாக பார்த்தபடி கேட்டார். “நான் இரண்டாம் அம்புவிக் கோட்டையில் இருந்து வருகிறேன் அம்மா. எனக்கு தாயில்லை. தந்தையும் கடலோடுபவர். சென்ற முறை வந்த கடற்கோள் அவரையும் சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டது. இப்போது நான் யாருமற்ற அநாதை. தங்களை பற்றி எங்கள் ஊரில் பெருமையாக பேசுவதை...

எபிலாக் – விடா ரதி

1.விடா ரதி…

எபிலாக் “என்னங்க… என்னங்க…” என அழைத்தபடி அறுபதை கடந்த ஒரு பெண்மணி அறையினுள் வந்தார். “எங்க போய் தொலஞ்சாரு இந்த மனுஷன்? ச்ச…. கீழ ரூமுலையே இருக்கலாம்னு சொன்னா கேட்டா தானே? இந்த லிஃப்ட் வேற…. ஷோ….. படில இறங்கணுமா…” எனத் தனக்குத் தானே புலம்பியபடி படிகளில் இறங்க ஆரம்பித்தார் ரதி. ஆம்… நமது ஸ்வர்ண ரதி தான்.. இப்போது 65 வயது கடந்து முதுமையின் அழகைத் தொட ஆரம்பித்திருந்தார். அப்போது பின்னிருந்து இரு வலியகரங்கள் அவரை நோகாமல் தூக்கிக் கொண்டு படிகளில் இறங்கியது. அவனைக் கண்டதும் ரதியின் வதனத்தில் பெருமையும், உவகையும் அத்தனையாக பொங்கியது. ரதி மற்றும்...

27 – விடா ரதி… 

1.விடா ரதி…

27 - விடா ரதி…  அடுத்து இரண்டு நாட்கள் அங்கிருந்துவிட்டு மீண்டும் பெங்களூர் சென்றனர். “நீயும் ஏன்டா கூடவே அலையற? நான் பத்திரமா இருந்துப்பேன் … நீ கடைய போய்  பாரு…..” அவளுடன் வந்தவன் அங்கேயே ஒரு வாரம் இருந்துக்கொண்டான், அவளது பிராஜக்ட் முடியும் தருவாயில் இருந்தது. “நீ சொன்ன சாப்ட்வேர் போட்டுட்டேன் டி…. இங்க இருந்தே எல்லாமே கவனிக்கறேன் இப்போ…. ஒன்னும் பிரச்சனை இல்ல… நீ உன் வேலைய பாரு.. நானும் என் வேலைய பாக்கறேன்…. உன் வேலை முடிஞ்சதும் அன்னிக்கி ஒரு ரிசார்ட் சொன்னியே அங்க நாலு நாள் இருக்கலாம்…. சரியா?”...

Page 1 of 57 1 2 57

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!