Facebook Feeds

Instagram Feeds

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

39 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

39 - ருத்ராதித்யன் நுவலியும், ரணதேவ் தாத்தாவும் ஒருவழியாக காட்டின் நடுவில் இருந்த வனதேவி கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். ரணதேவ்வை கோவிலுக்கு பின்னே இருந்த ஊற்றில் குளிக்கச் சொல்லிவிட்டு, நுவலி பூஜைக்கு தேவையான பொருட்களை பிரித்து வைத்தாள். ரணதேவ்வுக்கு ஒரு வெள்ளை வேஷ்டியும், மேல் துண்டும் கொடுத்து கட்டிவரக் கூறினாள். "இதெல்லாம் தான் முதுகுல கட்டிட்டு வந்தியா நுவலி? சொல்லியிருந்தா நானும் கொஞ்சம் நேரம் சுமந்துட்டு வந்திருப்பேனே மா?", ரணதேவ் அவள் எடுத்துவைத்திருந்த பொருட்களை பார்த்தபடி கூறினார். "உங்க சுமையே ரொம்ப பெரிசு பெரியய்யா… நான் உங்கள அஜகரன்கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்ததே கொஞ்சம் ஆச்சரியமா...

38 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

38 - ருத்ராதித்யன் காசியின் நான்கடி வீதிகளில் நுழைந்து ரன்வீர் மானசரோவர் படித்துறைக்கு அருகில் வந்தான். அந்த குறுகலான சந்தில் இரண்டு சக்கர வாகனங்களின் நெரிசல் தான் பெரும் தலைவலியாக இருந்தது. இதிலும் வண்டியில் மூட்டைகளை கட்டிக்கொண்டு மக்கள் சென்று கொண்டிருந்தனர்.‌நடப்பவர்களுக்கே எதிரெதிர் ஆட்கள் வந்தால் ஒருவர் நின்றால் தான் மற்றவர் செல்லமுடியும். இதிலும் வண்டியை ஓட்டுபவர்கள் திறமைசாலிகள் தான் அதுவும் காலை கீழே ஊன்றாமல். மானசரோவர் படித்துறையில் இறங்கி கங்கையின் பிரவாகத்தை கண்களில் நிறைத்துக்கொண்டான் ரன்வீர்‌. முதல் நாள் பெய்த மழையினால் கங்கை பெரும் வேகத்துடன் ஓடிக்கொண்டிருந்தாள். செந்நிறமாக காட்சியளிக்கும் கங்கைநதியின் நடுவே ஒரு...

37 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

37 - ருத்ராதித்யன்  கண்மயா மயங்கி விழுந்ததும் அவளுக்கு அடுத்த அறையில் வேலை செய்துக்கொண்டிருந்தார்கள் வந்து அவளை தூக்கி மற்றொரு படுக்கையில் படுக்கவைத்து மயக்கத்தை தெளிவித்தனர். "கண்மயா…. கண்மயா…""நகருங்க… ஜீனியஸ்…‌ஹே ஜீனியஸ்…..", என முகத்தில் தண்ணீர் அடித்து ஒருவன் அவள் கன்னத்தை தட்டினான்."என்னாச்சி மாயாக்கு?", எனக் கேட்டபடி ரிஷித் அங்கே வந்தான். "ஓவர் ஸ்ட்ரெஸ்ல மயங்கிட்டாங்க சார்….", மற்றொருவர் பதிலளித்தார். "சரி ….‌ நீங்க எல்லாம் கிளம்புங்க…. அவங்க ரெண்டு பேருக்கும் உடம்புல நடக்குற மாற்றம் ஒரு நேனோ செகண்ட் கூட விடாம எனக்கு ரிப்போர்ட் வரணும். அத பாருங்க…. ", எனக் கூடிநின்ற கூட்டத்தை கலைத்தான். "யாழன்…....

Sweet Vada

Sweet Vada (Vadevu) It’s our first sweet.. This is a traditional sweet. Nutrient and taste will be amazing in this.Let’s Start making it now... Required Ingredients :  Urad dal – 1 kg (skin removed) Coconut – 2 cups Cumin – 50g Sugar (a) Candy stone - required quantity (1kg dal: 1/2kg sugar)(This can also be done with only urad dal and sugar...) Recipe:  Soak urad dal in...

36 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

36 - ருத்ராதித்யன் காசி நகர்….. பழங்காலந்தொட்டு இன்றுவரையிலும் அறிவியலிலும், ஆன்மீகத்திலும் உச்சந்தொட்டுக் கொண்டிருக்கும் ஊர். இயற்கையுடன் இணைந்து, ஆன்மீகத்தில் உச்சம் காண பலரும் சென்று சேரும் இடம் காசி தான். கர்மாவின் நேர்மறை எதிர்மறை பயன்களை அனுபவித்து கடந்தால் மட்டுமே அந்த மண்ணை தொட முடியும் என்பது ஓர் அதீத நம்பிக்கை. காசி விஸ்வநாதனை தரிசித்து அப்படியே வெளியே வந்தால் தாய் அண்ணபூரணியை அருகிலேயே நடந்து தரிசித்துக்கொள்ளலாம். வடமாநிலங்களில் கர்ப்பகிரத்திற்குள்ளே சென்று இறைவடிவை தொட்டு வணங்கலாம். ஏனோ அந்த முறை தென்மாநிலங்களில் மட்டும் இல்லை. காசி விஸ்வநாதர் தொட்டு தழுவி தரிசித்துவிட்டு வெளியே வந்தால்...

35 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

35 - ருத்ராதித்யன் சிரஞ்சீவ் நெடுமாறன் இதழியுடன் அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் பின்னாலேயே தாஸ் தேனுவையும், தீரனையும் வண்டியில் கொண்டு வந்து இறக்கினர்.தீரன் இறங்கியதும் பைரவன் அவனிடம் தாவி ஓடினான். வீரனும் பைரவனைக் கண்டு ஓடிவந்து நாவால் நக்கி தன் அன்பை பரிமாறிக்கொண்டான். பைரவன் உருவத்தில் மிகவும் சிறிதாய் இருக்க, தீரன் அவனை தன் முதுகின் மேல் ஏற்றிக் கொண்டு, தன் தாயிடம் சென்று காட்டினான். தேனுவும் நாவால் பைரவனை அணைத்து அன்பை பகிர்ந்துகொண்டாள்."என்ன அதிசயம் பாத்தியா ஆதி? இதுவரை அந்த நாய் குட்டிய தீரன் பார்த்ததே இல்ல...

34 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

34 - ருத்ராதித்யன் இங்கே அஜகரனைத் தேடி நுவலியும், ரணதேவ்வும் காட்டிற்குள் புகுந்தனர். அஜகரன் ரணதேவ் அந்த காட்டின் எல்லைக்குள் காலடி எடுத்து வைத்ததும் சீறியபடி வேகமாக அவரைத் தேடி வந்தது. காற்றின் வேகத்தில் வந்து நின்ற அஜகரனைக் கண்டு ரணதேவ் திகைத்து நின்றார். அதன் கோப சீற்றம் கண்டு நுவலி ரணதேவை மறைத்தபடி முன்னே வந்து நின்றாள். "அஜகரா…. உன்னோட உதவி வேணும்….", நுவலி அஜகரனின் கண்களைப் பார்த்துக் கூறினாள். முடியாது என்பது போல அது உடலை அசைத்து வேறு பக்கம் திரும்பிவிட்டு, மீண்டும் ரணதேவை வன்மத்துடன் பார்த்தது. "வனதேவி கோவிலுக்கு வா…. அங்க பேசிக்கலாம். இவர் என்னோட...

33 – ருத்ராதித்யன் ‌

1 – ருத்ராதித்யன்

33 - ருத்ராதித்யன் ‌ ஆருத்ரா அதிர்வுடன் ரணதேவ்வை பார்க்க, அவரும் அதிர்ந்து ஆச்சியைப் பார்த்தார். "என்ன விக்ரமா எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?", ஆச்சி ஆயாசமாக அங்கிருந்த மலைவேம்பு மர வேரில் அமர்ந்தபடிக் கேட்டார். "பத்து நாள்ல எப்படி கல்யாணம் பண்றதுங்க ஆச்சி? மாப்ள பையன பாக்கணும்… ‌தவிர‌…‌", என இழுத்தார். "தவிர என்ன‌..‌ ஒரே பேத்தி உன் குடும்ப அந்தஸ்து காட்ட பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அதானே நீ நினைக்கிற?", என பைரவனை கையில் ஏந்தி கொஞ்சியபடி கூறினார்‌. "ஆமாங்க ஆச்சி….""அப்ப பையன பாத்துட்டன்னு சொல்லு‌… யார் பையன்?", என ஆச்சி கேட்டதும் மீண்டும்...

32 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

32 - ருத்ராதித்யன் அர்ஜுனும் யாத்ராவும் அந்த விலங்குகள் அடைக்கப்படும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். "எங்க கூட்டிட்டு போறானுங்க பேபி?", அர்ஜுன் சுற்றிலும் பார்த்தபடி யாத்ராவிற்கு மட்டும் கேட்கும்படி பேசினான். "நம்மல வச்சி ரிசர்ச் பண்ணுவான்னு நெனைக்கறேன் செழியன்", அந்த இடத்தை மனதினுள் பதிவு செய்துகொண்டபடியே அவனுக்கு சத்தமாக பதில் கொடுத்தாள். "பேசாம போ", என ஒருவன் அவளை பின்னிருந்து தள்ளினான்‌. அர்ஜுனும் யாத்ராவும் அவனை முறைக்க அவன் பயந்து இரண்டடி பின்னால் தள்ளி நின்றான். "இல்லண்ணே…. நீங்க பேசினா அவங்க என்னை கொன்னுடுவாங்க", என தழைத்த குரலில் அவன் கூறவும் யாத்ரா சத்தமாக சிரித்தாள். "விடு...

31 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

31 - ருத்ராதித்யன் வனயட்சி ஆச்சியின் மடியில் படுத்த ஆருத்ரா ஒரு மணிநேர ஆழ்ந்த உறக்கத்திற்கு பின் எழுந்தாள். அத்தனை நேரமும் ஆச்சியும் அவள் தலை கோதியபடி அமர்ந்து இருந்தார் மெல்லிய புன்னகையை முகத்தில் தவழவிட்டபடி. ரண தேவ் அவள் உறங்குவது கண்டு கண்ணில் துளிர்க்கும் நீருடன் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு மீண்டும் ஏரன் வீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டார். அவரின் கண்ணில் நீரை கண்டதும் ஏரன் கையை பிடித்தார். “அவ நிம்மதியா தூங்கி பல வருஷம் ஆச்சி ஏரா.. அவங்க அப்பா அம்மா சாகறத கண்ல பாத்தவ அதுக்கு அப்பறம் தூங்கவே முடியாம அலறி...

Page 1 of 45 1 2 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!