116 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

116 - ருத்ராதித்யன்  தேனிசை கூறியவற்றை எல்லாம் மனதில் அசைபோட்டபடி ஆருத்ரா மகதன் இருக்குமிடம் சென்றாள். ருத்ர விக்னன் அபராஜிதனை கவனிக்கும் வேலையில் இருப்பதால் இப்போது மகதன் மட்டுமே வனதேவி ஆலயத்தில் காவல் இருக்கிறான். அவனை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற கடுமையான கட்டளை அங்கிருந்த அனைவருக்கும் இருந்தது. அதனால் அந்த வேலியை தாண்டி யாரும் அவனிடம் நெருங்கவில்லை. திருவிழா என்பதால் பல குழந்தைகளும் ஆங்காங்கே ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுமே மகதனை தூரத்தில் இருந்து கண்டுவிட்டு தங்களின் விளையாட்டில் மும்முரமாக இருந்தனர். இந்த திருவிழாவினால் அனைத்து சமஸ்தான கோட்டைகளில் இருந்தும் பல...

1 – ரெட்டைக் குன்றுக்கோட்டை

1 – ரெட்டைக் குன்றுக்கோட்டை

1 - ரெட்டைக் குன்றுக்கோட்டை “வணக்கம் மக்களே.. இன்னைக்கு நம்ம போகப்போறது எங்களோட ஜமீன் கோட்டை மாளிகைக்கு.. நான் சின்ன புள்ளையா இருந்தப்போ ஒரு தடவை இங்க வந்திருக்கேன் அதுக்கப்பறம் இப்போதான் மறுபடியும் அங்க போறேன்.. நீங்களும் என்கூட வந்து எங்க கோட்டை மாளிகைய பாருங்க என்ஜாய் பண்ணுங்க.. மறக்காம இந்த வீடியோவ லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க, என் சேனல சப்ஸ்க்ரைப் பண்ணுங்க..” என உற்சாகமான குரலில் ஒருவன் காரின் சன்ரூஃப் வழியாக நின்றபடி செல்லும் பாதையை காட்டி பேசினான். அது ஓர் அழகான மலைப்பாதை. இரண்டு பக்கமும் டீ எஸ்டேட்...

115 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

115 - ருத்ராதித்யன்  வெளியே வனயட்சி பேசிக்கொண்டிருந்த அனைத்தும் அபராஜிதனின் ஆன்மாவும் அருகிருந்து கேட்டுக் கொண்டுதானிருந்தது. வனயட்சி 90 சதவீதம் அவனின் அடிமையாக மாறியிருந்தார். மீதமிருக்கும் 10 சதவீதம் மட்டும் ஏனோ இன்னும் அவனால் சாதிக்க முடியவில்லை. அதற்கு அவனை எதுவோ மூர்க்கமாக தடுக்கிறது. விரைவாக இந்த நாடகத்தை முடித்துவிட்டு இந்த கோட்டையை முழுதாக ஆராய வேண்டும் என்ற வேகம் அவனுக்கு நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருந்தது. ருத்ரக் கோட்டையை முழுதாக அடைந்து அதனை வைத்து ஆதித்யக் கோட்டையை கைப்பற்ற நினைத்தவனுக்கு கை மேல் பலனாக ஆதித்ய கோட்டையின் உள்ளே இருக்கும் மத்திய ஆதுரசாலையில்...

114 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

114 - ருத்ராதித்யன் அவனது இரத்தம் அவரின் உடலில் நேராக மூலாதாரம் இருக்குமிடத்தை அடைந்து அவரது ஆத்மாவை கட்டியது. அவரது ஆத்மா அப்போது அடைந்த வேதனையும், துடிப்பும் அவரது மனம் உடல் கூறாக கிழியும் வலியைக் கொண்டதைப் போல காட்டியது. அதில் அவரது கண்ணீர் அபராஜிதனின் உச்சந்தலையில் விழுந்து அவனுடலில் புகுந்து அவனை அவரின் அன்பிற்கு கட்டுப்பட வைத்தது. “தாயே.. புதிதாக வந்தவன் மேலே தங்களுக்கு இத்தனை அன்பா? இருவரும் கண்களில் நீர் வழிய ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறீரே.. அப்படி என்ன இவன் மேலே தங்களுக்கு தனியாக அன்பு வந்தது?” என...

113 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

113 - ருத்ராதித்யன் “அடடே.. நானின்றி இங்கே பெரும் கூட்டமே கூடி நிற்கிறதே.. எனக்கெல்லாம் அழைப்பு இல்லையா இளைய இளவரசி ?” என வனயட்சியின் பேச்சில் வேறுபாடும், விகல்பமும் அப்பட்டமாக அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது. “வனயட்சியின் கண்களில் இருந்து யாரும் தப்ப தான் முடியுமா ? இல்லை உங்கள் கண்களில் படாத செயல்கள் தான் இங்கே நிகழ்ந்திடுமா என்ன? வேற்று ஆட்களுக்கு தான் அழைப்பு தேவை உங்களுக்கு அழைப்பு வேண்டுமா வனயட்சி?” என வனயாத்திரையும் அவரின் எதிரே தீரமும், கூர்மையும் கொண்ட கண்களுடன் முன்னே வந்து நின்று கேட்டாள். “இந்த வாய் மட்டும் குறைவதே...

112 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

112 - ருத்ராதித்யன்  வனயாத்திரை அந்த குடுவையை அடுக்கடுக்காக பெண்களின் கர்ப்பம் போல உருவாக்கி அதில் இருக்கும் சூடு முதல் இன்னபிற கரு வளர தேவையான விஷயங்கள் கிடைக்கும் படியாக அந்த அறையிலேயே ஓர் அடுக்கு தரையை ஏற்படுத்தியிருந்தாள். ஒரு நாழிகை கடந்தும் உள்ளே இருக்கும் முதல் துளி நீரின் பிரகாசம் குறையாமல் இருந்தால் கரு நிற்கவில்லை என்று அர்த்தம். அதில் உள்ள பிரகாசம் குறைந்து அடர் நீளத்தில் லேசான வெள்ளை வெளிச்சம் அதில் தெரிந்தால் கரு நின்றுவிட்டதாக அர்த்தம். இதை எல்லாம் கண்மயாவிடம் அங்கேயே நன்றாக கேட்டு கொண்டதால் அவர் கூறிய...

111 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

111 - ருத்ராதித்யன் அபராஜிதன் கொண்டு வந்த வசிய மருந்து வீணாக போனதில் கடும் கோபத்தோடு காற்றாக கானகத்தில் அலைந்துக் கொண்டிருந்தான். அவனது திட்டத்தை சிதைத்த தீரன் மீது அந்த சினமானது அதீதமாக இருந்தது.  ஆருத்ரா மீதிருந்த மோகத்தால் இந்த காரியத்தில் தனது புத்தி மழுங்கி போனத்தையும் இப்போது உணர்ந்திருந்தான். அவளை தெளிவாக திட்டம் போட்டு தனது வலையில் விழவைக்கவேண்டும். மீண்டும் அவளை தப்ப விடக்கூடாது என்பதில் உறுதி கொண்டு தனது குடிலுக்கு வந்து சேர்ந்தான்.  அதற்கான யோசனையுடன் அவன் ஆதுரசாலை செல்லும் பாதையில் பயணிக்கும் போது சிங்கத்துரியன் அவன் எதிரே வனயட்சியுடன் வந்து...

110 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

110 - ருத்ராதித்யன்  வனயாத்திரை அந்த ஆலோசனை அறையில் இருந்து வெளியே வந்ததும் நேராக ஆரதுசாலையின் பின்னால் இருக்கும் மருந்து கிடங்கிற்கு சென்று நின்றாள். அங்கே அவளுக்கு தேவையான மூலிகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு கணக்கும் கூறிவிட்டு, வனயட்சியின் தனிபட்ட மருத்துவ அறைக்கு சென்றாள். அங்கே வனயட்சி தான் செய்த மற்றும் செய்யும் அனைத்து ஆராய்ச்சி தரவுகளையும் பத்திரமாகக் குறித்து வைத்திருப்பார். அங்கே கல் தூணிற்க்கு பின்னால் ஓர் இரகசிய அறை உண்டு. அங்கே தான் இந்த குறிப்புகள் தங்கத் தகட்டில் குறித்து வைக்கப் பட்டிருக்கும். தனி தனி நீள் சதுர தகடாக...

109 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

109 - ருத்ராதித்யன்  தீரன் அவனது இடத்தில் இருந்து ஓடி வந்து அந்த வசிய மருந்தினை மண்ணிற்குள் புதைத்து ஆருத்ராவினை தடுத்து நின்றான். “என்ன ஆனது தீரா? ஏன் இப்படி முன்னால் வந்து நிற்கிறாய்?” என நரசிம்மன் அவனது கண்களை பார்த்தபடிக் கேட்டான். தீரனின் கண்கள் அபராஜிதன் அங்கே காற்றாய் கலந்து நிற்கும் இடத்தினை பார்த்தபடி, “ம்மாஆ..” எனக் கத்தினான். “பசிக்கிறதா? இங்கிருக்கும் புற்களை சாப்பிட விருப்பமில்லையா உனக்கு? வா உனக்கு என்ன வேண்டும் கூறு நான் கொண்டு வருகிறேன்..” என ஆருத்ரா அவனது பசியாற்றும் பொருட்டு அவனை அவனது இருப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றாள். ஆருத்ரா...

108 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

108 - ருத்ராதித்யன்  அங்கே வனயட்சியுடன் சென்ற கூட்டமானது காட்டிற்குள் சல்லடைப்போட்டு குகையை தேடிக் கொண்டிருந்தது. அபராஜிதன் மனதிற்குள் நேரத்தை கணக்கிட்டபடி அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டே வனயட்சியை கவனித்துக் கொண்டிருந்தான். “நள்ளிரவில் இவர்களை விடுத்து எப்படி செல்வது? இவர்களிடம் சிக்காமல் வசிய பூஜைக்கு சென்று வரவேண்டும்.. “ என மனதிற்குள் முணுமுணுத்தபடி அவன் தனியாக சென்றுக் கொண்டிருந்தான். “புதியவனே .. நீ எங்கே இந்த பக்கம் செல்கிறாய்? இந்த திசையில் ஒரு கல் தொலைவு வரை சென்று அங்கிருக்கும் பெரும் பாறைகள் எல்லாம் கணக்கெடுத்து வா..” என அவன் பின்னே வந்தவன் அவனுக்கு...

Page 1 of 57 1 2 57

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!