• About us
  • Contact us
Saturday, July 12, 2025
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

44 – ருத்ராதித்யன்

May 24, 2024
Reading Time: 1 min read
0
1 – ருத்ராதித்யன்

44 – ருத்ராதித்யன் 

 

மகதன் அந்த நீர்வீழ்ச்சியில் நீர் அருந்திவிட்டு நீருக்குள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. சில நாட்களாக கூண்டிற்குள் அடைபட்டு கிடந்து, பல சித்திரைவதைகளை அனுபவித்து இருந்ததால், நேற்று இந்த செயற்கை குகை பகுதிக்கு வந்ததில் இருந்து நீரிலேயே விளையாடி மன அழுத்தத்தை போக்கி கொண்டு இருக்கிறது. 

அதிரன் தனக்கு தெரியாமல் தன் டேம் புராஜக்ட் யார் செய்கிறார்கள் என்று கண்டுபிடித்து விட்டு, ராஜ் கர்ணாவிடம் சென்றான். 

“ஹலோ ராஜ் சார்…. உங்களுக்கு பிரச்சினை குடுத்தது யாருன்னு தெரிஞ்சிருச்சி…. ஆருத்ரா….. சாம்ராஜ் குரூப் ஓட எம்.டி…. “

“யார் அது?”, ராஜ் கர்ணா அசிரத்தையாக கேட்டான். 

“யாரு? என்ன பேரு சொன்ன? “, என கேட்டபடி ரிஷித் அங்கே வந்தான். 

“ஆருத்ரா சார்….”

“முழு பேரு என்ன?”

“ஆருத்ரா சிங்கமாதேவி…. ரணதேவ் விக்ரமர் பேத்தி…….”, என கூறியதும் ரிஷித் உதடுகளில் புன்னகை பூத்தது. 

“உனக்கு ஏற்கனவே அவங்கள தெரியுமா ரிஷி?”, ராஜ் கர்ணா கேட்டான். 

“நேத்து தான் தெரிஞ்சது… “,என கூறிவிட்டு சத்தமாக நகைத்தான். 

“ராஜ்….. எனக்கு அவளும் வேணும்… அந்த புலி, அத கொன்னாவது அதோட கண்ணு ரெண்டும் எனக்கு வேணும்…. ஆருத்ரா முழுசா வேணும்… அவ இல்லாம இந்த தடவ எப்படி அவன் வெளிய வருவான்னு நான் பாக்கறேன்…”, என கூறிவிட்டு பேய் சிரிப்பு சிரித்தான் ரிஷித். 

“சார்… அவங்களுக்கு கல்யாண ஏற்பாடு நடக்கறதா சொன்னாங்க…. “, அதிரன் அடக்கப்பட்ட குரலில் கூறினான். 

“யாரு மாப்பிள்ளை?”, ரிஷித் அதீத திமிருடன் கேட்டான். 

“ஆதித்த கரிகாலன்…. மேகமலை தலைவர் பையன்… “

“ஓ…. எப்ப கல்யாணம்?”

“அமாவாசை முடிஞ்சி மூணாவது நாள்….”

“ஓஹோ…… ஹஹாஹா…… கெழவி…. நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா?”, என

தனக்கு தானே பேசியபடி ராஜ் கர்ணாவிடம் சில விசயங்களை காதோடு கூறிவிட்டு அருணாச்சல பிரதேசம் புறப்பட்டு சென்றான். 

மேகமலையை சுற்றிலும் ஆதி காவலுக்கு ஆட்கள் நிறுத்தி இருப்பதை கண்டுவிட்டு, ராஜ் அதிரனிடம் தேனியில் இருக்கும் அவனுக்கு விசுவாசமான ஆட்களை மேகமலை செல்ல சொன்னான். 

பகலில் ஊருக்குள் வருபவர்களை அப்பட்டமாக நிறுத்தி விசாரிக்க முடியாமல் போனது இவர்களுக்கு வசதியாக இருந்தது. இரண்டு நாட்களாக காட்டிற்குள் செல்லாமல் ஊருக்குள் மற்றும் ஆட்களை சேர்த்து விட்டு, சுற்றிலும் இருக்கும் பாதுகாப்பு வியூகத்தை அறிந்து, அதன்படி ராஜ் மற்றும் அதிரன் ஆயுஷ் உடன் இன்று காட்டிற்குள் நுழைந்தனர். 

மகதன் உடலில் கொஞ்சம் மனித இரத்தம் கலந்ததாலோ என்னவோ, மனிதர்களின் வாசனையை தூரத்திலேயே உணராமல், நீரில் விளையாடி களைத்து மேலே ஏறி வந்தது. 

தன் ஆட்கள் மற்றும் நண்பனை கொன்று காயப்படுத்திய புலியின் மீது கடுங்கோபத்தில் இருந்த ஆயுஷ், பணத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு மகதனை கொல்ல விஷம் தடவிய ஆயுதம் மற்றும் துப்பாக்கியுடன் இவர்களுடன் கிளம்பி வந்து இருந்தான். மகதனை கொள்ளும் வெறி அவன் கண்களில் அசாத்திய ஜொலிப்பை கொடுத்திருந்தன. 

மகதன் தலைக்கு குறி வைத்து விசையை அழுத்தினான் ஆயுஷ். அதிரனும், ராஜ் கர்ணாவும் ஆயுஷ் கூறியபடி ஆட்களின் பின்னால் மரத்தின் மறைவில் நின்று கொண்டு கவனித்தனர். 

சரியாக மகதன் நெற்றியை அந்த உயிர்க்கொல்லி தோட்டா தொடும் முன் யாத்ரா அதை சிறிய பாறை கொண்டு தடுத்து விட்டு, மகதனை மறைத்துக் கொண்டு நின்றாள். 

அவள் நீரில் இருந்து வெளி வந்த வேகமும், தோட்டாவை தடுத்த விதமும் கண்டு ஆயுஷ் சில நொடிகள் பேச்சற்று நின்றான். 

“ராஜ் கர்ணா…..”, என யாத்ரா காடு அதிர அழைத்தாள். 

அவன் அவள் கண்களின் முன் தென்பட்டதும், “ரிஷித் கிட்ட போய் சொல்லு, அவன் இத்தன நாள் செஞ்சதுக்கும், இனிமே செய்ய போறதுக்கும் சேர்த்து அணுவணுவா அனுபவிக்க போறான்….. பூலோக சட்டம் மட்டுமில்ல மேலோக சட்டமும் அவனை காப்பாத்த முடியாது…. இப்போவே வந்த வழியே திரும்பி போயிடுங்க… தோல் இணுக்கு கூட யாருக்கும் கிடைக்காது…”, எனக் கூறிவிட்டு, மகதனை உள்ளே செல்லுபடி சைகை செய்துவிட்டு அவர்களை நோக்கி அடி எடுத்து வைத்தாள். 

உள்ளம் கொண்ட கோபமும், உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் அவளை வேறொரு உயிரினமாக உணர வைத்தது. அவள் உடலில் இருக்கும் கோடுகள் அவள் கோபத்தின் அளவையொத்து மின்னத் தொடங்கின. உடலில் கூடிய புது தெம்பும், மூலையில் உதிக்கும் அற்புத நுணுக்கங்களும், எதிரில் இருக்கும் ஒருவனையும் உயிர் பிரியாமல் வதைக்கும் ஆர்வத்தை அதிகரித்தன.  

சொன்னதை கேட்டு நடந்து விட்டால் அவன் ராஜ் கர்ணா அல்லவே…. நண்பனின் சொற்களை தவிர வேறு எதுவும் அவனுக்கு பெரிதல்ல, இரண்டு நாட்கள் முன்பு வரை நண்பனின் சோதனை எலியாக இருந்தவள் சொல் கேட்டு நடப்பானா? 

அவர்களுடன் வந்திருந்த முப்பது பேரில் மூன்று பேர் உயிர் பிழைத்து சென்றாலே அரிது தான்…. 

யாத்ரா ஒரே தாவலில் அந்த முப்பது பேரின் நடுவில் வந்து குதித்தாள். அவள் உடலில் கட்டி இருந்த கச்சை நீரின் ஈரம் பட்டு அவள் உடலோடு அப்பியருந்தது. முன்பே உரமேறிய உடல் இப்போது இன்னும் உயரம் கூடி, எழும்பும் தசையும் விரிந்து, நன்றாக கண்களுக்கு விருந்தாகி போனது. அவள் உடல் வளைவுகளை பார்த்த கண்கள் அனைத்தும் ஒன்றொன்றாக மண்ணில் கண் மூடி விழுவதை தாமதமாக தான் மற்றவர்கள் உணர்ந்தனர். 

எந்த இடைவெளியில் யாத்ரா கையை வீசி, காலால் உதைத்து மண்ணில் சாய்க்கிறாள் என்று காணவே முடியவில்லை. 

யாத்ராவை கண்ட நொடி முதல் அதிரன் அவளை தனது அலைபேசியில் படமாக பதிவு செய்து கொண்டிருந்தான். 

இரண்டே நிமிடங்களில் ராஜ் கர்ணா, அதிரன் தவிர உடன் வந்தவர்கள் அனைவரும் பரலோகம் அடைந்து இருந்தனர். 

சரியாக அந்த நேரம் அர்ஜுன் அவ்விடம் வந்து சேர்ந்தான். 

“ரது…. நல்ல வார்ம் அப் போல….”, என ராஜ் கர்ணாவை கண்களில் அழுத்தம் கூட்டி பார்த்தபடி கேட்டான். 

“உங்களுக்கும் தானே செழியன்…. இரத்தம் மேல இருக்கறது கூட தெரியாம வந்து நிக்கரீங்க…. வாங்க பால்ஸ் சூப்பரா இருக்கு…..”, என அழைத்து சென்று அவன் மேல் இருந்த இரத்த கரையை சுத்தம் செய்தாள். 

அதிரனும், ராஜ் கர்ணாவும் பயத்தை மறைத்துக் கொண்டு விறைப்பாக நின்று இருந்தனர். 

பத்து நிமிடங்கள் கழித்து அங்கே ஆதியும், ஆருத்ராவும் வந்து சேர்ந்தனர். 

அதிரனை கண்ட ஆருத்ரா மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தி விட்டு யாத்ரா அருகில் சென்று சால்வையை போர்த்தி விட்டாள். ஆதி தான் கொண்டு வந்த போர்வையை அர்ஜுன் இருக்கும் இடம் வீசினான். 

“என்ன மிஸ்டர் அதிரன்…. புது பார்ட்னர் கூட புது பிசினஸ் போல?”, என கேட்டபடி அதிரன் முன்னால் வந்து நின்றாள். 

அவன் வாய் திறக்காமல் அர்ஜுன் மற்றும் யாத்ராவை பார்த்துவிட்டு, ஆருத்ராவை முறைத்தான். 

 “இப்போ பேசலாம் அதிரன்….. இன்னொரு தடவை இவங்கூட பாத்தா தான் உயிர் இருக்காது….”, என கூறியபடி யாத்ரா வந்து ஆருத்ரா அருகில் நின்று கொண்டாள். 

‘என்னை மீறி தான் நீ இவளை தொட முடியும்.. ‘, எனச் சொல்லாமல் சொல்லி நின்றாள். 

அர்ஜுன் ஆதியின் பக்கம்  நின்று ராஜ் கர்ணாவை அளந்தபடி சுற்றி வந்து நின்றான். 

“கேட்டதுக்கு இன்னும் பதில் வரல…. பார்சல் செஞ்சிடலாமா அத்தான்…”, யாத்ரா அதிரனை பார்த்தபடி கேட்டாள். 

“என்ன ஆருத்ரா மேடம்…. உங்களுக்கு உயிர் மேல திடீர்ன்னு அக்கறை வந்துரிச்சா? யார் யாரோ எல்லாம் வந்து நிக்கறாங்க?”, உள்ளுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அதிரன் பேசினான். 

“இவங்க எல்லாம் யாரோ இல்ல அதிரன்…. இவர் ஆதித்ய கரிகாலன் என்னொட பியான்சி…. இவர் நாகார்ஜுன இளஞ்செழியன் என்னோட பியான்சியொட தம்பி…. இவ யாத்ரா…. அர்ஜுன் பியான்சி…. நாங்க எல்லாரும் ஒரே குடும்பம்…. என் குடும்பம் எனக்காக வந்து நிக்காம வேற யார் எனக்கு முன்ன வந்து நிப்பாங்க? உன் தம்பி உங்க கூட நிக்கமாட்டாரா?”, ஆருத்ரா யாத்ரா அருகில் வந்து நின்று கொண்டு பேசினாள். 

“ஆருத்ரா….”, என அதிரன் கை நீட்டியதும் யாத்ரா அவன் முன் வந்து நின்று முறைக்கவும், தன் கையை மடக்கி கொண்டு, ” என்னோட புராஜெக்ட் நீங்க எதுக்கு பண்றீங்க? என்னோட அனுமதி வாங்காம இவர் வீட்ல பிரச்னைய இழுத்து விட்டு இருக்கீங்க….”, என ராஜ் கர்ணாவை பார்த்து கூறினான். 

“அது ருதஜித் வீடு தானே அதிரன்…? தவிர அந்த டேம் மொதல் அந்த வீடு இருக்க இடத்தில தான் அல்லோட் ஆச்சி… கடைசி நிமிஷத்துல பக்கத்து  கிராமத்துக்கு மாத்தி அந்த ஊரை காலி பண்ண சொல்லிட்டாங்க…. ஒரு வீட்டுக்காக ஒரு ஊரே ஏன் இடம் மாறணும்? அதான் பிரச்சினை பண்ண வச்சேன்… அப்பறம் என்ன சொன்ன உன் அனுமதி வாங்கனுமா? உனக்கு ஒரு விசயம் தெரியுமா? உன்னோட இந்த புராஜெக்ட் பண்ற கடைசி மட்ட தொழிலாளி கூட என் ஆளு தான். அந்த எல்லா சின்ன கம்பனீஸ்ம் நான் ஷேர் வாங்கிட்டேன். மெஜாரிட்டி என்னோடது…. பேர் மட்டும் தான் உன்னோடது வேலை என்னோடது.. வந்த பணத்துல அண்ணனும் தம்பியும் என்ன என்ன எங்க எவ்ளோ செலவு செஞ்சி இருக்கீங்கன்னு பக்காவா என்கிட்ட இருக்கு…. இந்த புராஜெக்ட் மக்களுக்கு பெரிய நல்லது குடுக்கும். இதுல நீ விளையாட நான் அனுமதிக்க முடியாது…. இப்போ கூட என்னால உனக்கு விட்டு வச்சி இருக்க பேர மாத்த முடியும்…. அப்பறம் நீ மார்கெட்ல காணாம போயிடுவ…. ஒழுங்கா  மிச்சம் இருக்கற வேலைய தொந்தரவு பண்ணாம பாரு…. நீ கிளம்பு….”, என பேசிவிட்டு ஆதி அருகில் நின்று அவன் காதோடு ஏதோ கூறினாள். 

இருவரின் நெருக்கம் அவனை மேலும் கொதிக்க வைத்தது. அவளை எப்படியேனும் அடைந்து விட சில காரியங்களையும் இத்தனை நாட்களாக செய்து கொண்டிருந்தான். இன்று தன் கண் முன்னே இன்னொருவன் அருகில் நெருங்கி நிற்பதை அவனால் சகிக்க முடியாமல் அங்கிருந்து விருட்டென்று சென்றான். 

ராஜ் கர்ணா இப்போது தனியாக நின்றான்.  அவனை அர்ஜுன் அலேக்காக மகதன் இருந்த குகைக்கு தூக்கி சென்றான். அவனுக்கு பயத்தில் தொண்டை வறண்டு நாக்கு உலர்த்தவும் எச்சில் ஊறவில்லை. 

“என்ன ராஜ்… வசதி எல்லாம் எப்படி இருக்கு? நீ ரெடி பண்ண பஸ் அளவுக்கு இங்க வசதி இருக்காது தான், ஆனா மகதனுக்கு வசதியா எல்லாமே இங்க செஞ்சி இருக்கு.. அதாவது அவன் யாரையாவது வேட்டை ஆடி சாப்பிட்டு மிச்சம் மீதி விட்டு வச்சா கூட, அதை சாப்பிட அந்த பக்கம் நரி, இந்த பக்கம் முதலை இப்படி ஏற்பாடு செஞ்சி இருக்கோம். இது வேற அவனுக்கு பசி எடுக்கற நேரம்…. “, அர்ஜுன் அவன் அருகில் அமர்ந்து மகதனையும் தன் மடியில் அமரவைத்து விளையாடிக் கொண்டிருந்தான். 

ராஜ் கர்ணா ஆடாமல் அசையாமல் அமர்ந்து மகதனின் அசைவுகளை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தான். 

ஆதி மறுபக்கம் அமர்ந்துகொண்டு, “ராஜ்….. ரிஷித் என்ன பண்றான்?”, என கேட்டான். 

ராஜ் கர்ணா காதில் எதுவும் கேட்கவில்லை. பயத்தில் அவன் தொண்டையை மேலேற்றி இறக்குது நன்றாக தெரிந்தது. யாத்ரா அவனுக்கு தண்ணீர் கொண்டு வர ஊர் பக்கம் சென்றாள். 

பத்து நிமிடங்கள் கழித்து, கஜேந்திர நெடுமாறன் உடன் யாத்ரா கையில் ஒரு கேமராவுடன் வந்து நின்றாள். 

தண்ணீரை நெடுமாறன் அவனுக்கு கொடுத்துவிட்டு ஓரமாக வந்து நின்றான். அப்போது ராஜ் கர்ணா ஃபோனுக்கு அழைப்பு வந்தது. 

 

முந்தின அத்தியாயம் படிக்க .. 

அடுத்த அத்தியாயம் படிக்க .. 

 

முதல் அத்தியாயம் படிக்க .. 

Click to rate this post!
[Total: 1 Average: 5]
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 1,247

aalonmagari

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest
Inline Feedbacks
View all comments

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (351)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (9)
  • தொடர்கதை (133)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (211)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    467 shares
    Share 187 Tweet 117
  • 1 – அகரநதி

    467 shares
    Share 186 Tweet 116
  • 1 – அர்ஜுன நந்தன்

    443 shares
    Share 177 Tweet 111
  • 1 – வலுசாறு இடையினில் 

    398 shares
    Share 159 Tweet 99
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    388 shares
    Share 155 Tweet 97
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2024. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2024. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply