61 - ருத்ராதித்யன் வல்லகியை தூக்கிய யானையின் மேல அர்ஜுன் தந்தத்தை பிடித்து ஏற முயற்சிக்க, வல்லகி யானையின் தலையைக் குறிப்பார்த்துக் குதித்தாள். பிறைசூடன் அவளுக்கு யானையைக் கட்டுப்படுத்தும் வித்தையை அதித் ஒவிஸ்கரின் கட்டளையின் பேரில் சொல்லிக் கொடுத்து இருந்தார். இரண்டு நாட்களில் அதில் அவளும் நன்கு தேறி வந்ததால், அடுத்தடுத்து பல மிருகங்களின் சூச்சும புள்ளிகளைக் காட்டி, எப்படி எங்கே அடித்தால் அந்த மிருகம் எதிர்வினையாற்றும் என்பதையும் சொல்லிக் கொடுக்க ஆட்களை ஏற்பாடு செய்து, அவளை பழக்கினார். அந்த பயிற்சியின் விளைவால், அவள் யானையின் தலையில் அமர்ந்து காதுகளின் அடியில் கட்டை விரலால் அழுத்தி,...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ ஒரு புது கதையுடன் வந்துள்ளேன். இது தற்காலத்தில் அதிகமாக பேசப்படக்கூடிய "truama" சார்ந்த கதைக்கரு. இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் நம்மையோ, நம்மை சுற்றி உள்ளவர்களையோ காட்டலாம்.. மனம் சார்ந்த காயங்களுக்கான மருந்தை தரும் அத்தியாவசியத்தை உணர்த்த முயன்று இருக்கிறேன். எப்பொழுதும் போல இதிலும் தங்கள் அனைவரின் ஆசியும், ஆதரவும் நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இனி கதைக்குள் பயணிக்கலாம் .. 1 - வேரோடும் நிழல்கள் தினமும் சரியாக காலையில் தன் பணி கிளம்பும் சூரியனை, அவன் கதிர்கள் நிலம் தொடும் முன்...
60 - ருத்ராதித்யன் “என்னை வெல்ல முடியும் என்று நினைக்கிறாயா தேவி? இத்தனை பிறவிகள் கடந்து என் லட்சியத்தை அடையும் வழியுடன் கூடிய சக்தி வாய்ந்த மெய்ப்பொருளையும் கண்டுப்பிடித்து வந்திருக்கிறேன்…. உன்னால் என்னை தடுக்க முடியுமா?”, ரிஷித் கண்களில் எரியும் வன்மத்துடன் பேசினான். “இத்தனை பிறவிகள் கடந்தும் நீ திருந்தவில்லை என்பது வருத்தம் கொள்ளும் விசயம் தான் அபராஜிதா…. ஆனால் இன்று காலம் இந்த பக்கம் இருக்கிறது. நீ முழுபலத்துடன் மோது… உன்னை எதிர்க்க உன்னில் பாதி பலம் போதும்…..”“ஹாஹாஹா…. என்னில் பாதியா? சிங்கமாதேவி….. உனக்கு நான் முழு பலத்தையும் கொடுக்கிறேன்…. அதை...
59 - ருத்ராதித்யன் வல்லகி சின்ன சிரிப்புடன் மண்ணில் அழுந்த கால் பதித்து, தன் குச்சியை முதுகில் மடக்கி மாட்டிக் கொண்டாள். “நாச்சியார்….. “, ஆதி அழைக்கவும் அவள் காட்டினையும், தீவினையும் ஒருமுறைப் பார்த்து மனதிற்குள் நமஸ்கரித்து விட்டு, முன்னே நடந்தாள். “அர்ஜுன்… நீங்க நாச்சியா பின்னாடி போங்க…. நான் கடைசியா வரேன்.. நமக்கு நடுவுல தான் இவங்க வரணும்….”, வல்லகி கீழிருந்த மண்ணை எடுத்து நுகர்ந்தபடிக் கூறினாள். “நான் கடைசியில் வரேன் வல்லகி….”, ஆதி. “இல்ல ஆதி… நீங்க முன்ன போனா தான் நம்மளால காட்டுக்குள்ள போகமுடியும்.. நீங்களும், அர்ஜுனும் தான் இந்த தீவோட சாவி….”,...
58 - ருத்ராதித்யன் ஆருத்ரா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் அனைவரும் ஒரு மணிநேரத்தில் தேனி சென்று, அங்கிருந்து இரண்டு ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி நோக்கி பறந்தனர். முன்பு நானிலன் தனியாக வந்து கடற்கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த திசையில் இவர்களும் பயணித்தனர். அன்று தனியாளாக வந்து கடலில் சென்று பார்க்க எண்ணிய இடத்தை இன்று ஒரு குழுவாக சேர்ந்து, தங்களின் நோக்கம் அறிந்து சென்று கொண்டிருந்தான். ஆதி ஆருத்ரா கூறியபடி, கன்னியாகுமரியில் இறங்கியதும், சொகுசு படகின் உரிமையாளர் எண்ணிற்கு அழைத்து பேசினான். ஊருக்கு ஒதுக்குபுறமான கடற்கரை ஓரத்தில் நிழல் தரும் இடத்தில் அனைவரையும் அழைத்து வந்து நிறுத்தி,...
57 - ருத்ராதித்யன் “ரிஷி……”, என ராஜ் கர்ணா அவனை கண்டதும் சென்று கட்டிக்கொண்டான். “உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் ராஜ்..”, என ரிஷித்தும் அவனை தழுவிக்கொண்டான். “அங்க என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணாங்க தெரியுமா…..? நாம அவங்கள்ள ஒருத்தர கூட சும்மா விடவே கூடாது ரிஷி…. அதுவும் அந்த புலிய பார்ட் பார்ட்டா கழட்டி எடுக்கணும்….”, என கண்களில் பழி வெறி மின்ன கூறினான்.“நீ சொல்லவே வேணாம் ராஜ்… அவங்களுக்கான ஸ்கெட்ச் நான் போட்டுட்டேன்… அதோட முதல் படியா உன்னை கொண்டு வந்துட்டேன். அடுத்து என் மாயா டார்லிங் அண்ட் அந்த...
56 - ருத்ராதித்யன் “ இன்னிக்கி நைட் யார் எல்லாம் கெளம்பணும் நுவலி?”, வல்லகி யோசனையுடன் உள்நுழைந்தவளை கேட்டாள். “நீங்க, நான், நாச்சியார் அக்கா, கண்மயா அக்கா, நானிலன் அண்ணா, ஆதி சார், அர்ஜுன் அண்ணா….”, என கூறிவிட்டு ஆருத்ரா அருகில் சென்றவள் அவள் கையை பிடித்துக் கொண்டு, “ நீங்க இன்னிக்கி ஜாக்கிரதையா இருக்கணும் ம்மா…”, என கவலையுடன் கூறினாள். “ஹே என்ன நுவலி நான் இல்லாம நீங்க எல்லாம் கிளம்பினா எப்படி?”, யாத்ரா கேட்டாள். “நீங்க தேவி குகைக்கு போய் நாங்க வர வரைக்கும் தியானம் பண்ணனும் யாத்ரா க்கா…”“அப்போ நாங்க?”, என...
55 - ருத்ராதித்யன் “என்னால தான் ஒவ்வொரு தடவையும் சிங்கன் வெளிய வரது தடைபடுதுல்ல நானிலா?”, ஆச்சி வருத்தத்துடன் கூறினார். “அமரபுசங்கன் உங்கள கவனமா பாத்துக்கணும்ன்னு நெனைக்கராரு பாட்டி…. அதனால தான்…”, நானிலன் அவர் வருத்தம் கண்டு அவரின் கைப்பிடித்து கூறினான். “அவன் சொன்னா சரி…. அவனோட இந்த நிலமைக்கும் நான் தானே காரணம்……”, என மீண்டும் வருத்தம் கொண்டார். “அடடே… என்னா பாட்டி நீங்க? எனக்கு நல்லா சமைச்சி குடுத்து என்னை தெளிவாக்குவீங்கன்னு நினைச்சி நான் வந்தா நீங்க இப்படி அழுறீங்க….. “, வல்லகி அவரை மெல்ல கைப்பிடித்து தூக்கி நிறுத்தினாள். “வா ராசாத்தி… உன்னால...
54 - ருத்ராதித்யன் மகதன் ஓடி வருவது கண்டு தர்மதீரன் நாச்சியார், வல்லகியின் முன் வந்து மறைத்துக் கொண்டு நின்றான். மகதனின் உருமலில் பாலாவிற்கு மயக்கம் வருவது போல இருந்தது. வல்லகியின் கையை இறுக்கி பிடித்தபடி பின்னால் சென்றாள். மகதன் அர்ஜுனை பிடிக்க அவனை மட்டுமே குறியாக பார்த்துக்கொண்டு நின்றது. அர்ஜுன் மகதனை வெறுப்பேற்றிய படி ஆதியின் அருகில் சென்று நின்றான். ஆதியின் முன்னால் மகதனும், பின்னால் அர்ஜுனும் இப்போது நின்று இருந்தனர். “டேய்…. நீ அவன வெறுப்பேத்தறேன்னு சொல்லி என் சோலிய முடிக்க பாக்கறியா டா?”, ஆதி மகதன் கண்களில் இருக்கும் கோபத்தைப் பார்த்துக்...
53- ருத்ராதித்யன் அதிபன் அலைபேசிக்கு விதுரன் கட்டப்பட்டுக்கிடக்கும் புகைப்படம் வந்தது. அதைக் கண்டவனுக்கு கோபம் கண்மண் தெரியாமல் எழுந்தது. அந்த ரிஷித்தை தன் கைகளாலேயே கொல்லும் அளவிற்கு ஆத்திரமும் வந்தது. ஆனால் அவன் பலம் கண்டு கையை கட்டிக்கொண்டு தன் மனதை சமன்படுத்த முயன்று கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ருதஜித்திற்கு அழைத்தான். “நான் போறதுக்குள்ள அந்த சக்தி வந்து அந்த பையனை கூட்டிட்டு போய்ட்டான். நீங்க விதுரன கடத்தறதால எந்த பிரயோஜனமும் இல்ல…”, அடக்கப்பட்ட கோபத்துடன் பேசினான். “அவனால உனக்கு எந்த பயனும் இல்லாம இருக்கலாம் அதிபன். எங்களுக்கு இருக்கு….. நாங்க சொல்றத நீ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….