113 – ருத்ராதித்யன்
113 - ருத்ராதித்யன் “அடடே.. நானின்றி இங்கே பெரும் கூட்டமே கூடி நிற்கிறதே.. எனக்கெல்லாம் அழைப்பு இல்லையா இளைய இளவரசி ?” என வனயட்சியின் பேச்சில் வேறுபாடும், விகல்பமும் அப்பட்டமாக அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது. “வனயட்சியின் கண்களில் இருந்து யாரும் தப்ப தான் முடியுமா ? இல்லை உங்கள் கண்களில் படாத செயல்கள் தான் இங்கே நிகழ்ந்திடுமா என்ன? வேற்று ஆட்களுக்கு தான் அழைப்பு தேவை உங்களுக்கு அழைப்பு வேண்டுமா வனயட்சி?” என வனயாத்திரையும் அவரின் எதிரே தீரமும், கூர்மையும் கொண்ட கண்களுடன் முன்னே வந்து நின்று கேட்டாள். “இந்த வாய் மட்டும் குறைவதே...



