42 – ருத்ராதித்யன்
42 - ருத்ராதித்யன் மேகமலை வந்து இரண்டு நாட்கள் கழித்து அர்ஜுன் கண் விழித்தான். அருகில் கண்மயா அமர்ந்து அவர்கள் உடலில் இணைத்து இருந்த கருவிகளின் திரையில் இருந்த விவரங்களை சேகரித்து கொண்டிருந்தாள். யாழன் யாத்ராவிற்கு ஆச்சி கொடுத்த மூலிகை சாரினை மெல்ல மெல்லத் தொண்டையில் இறக்கி கொண்டிருந்தான். "மிஸ்டர்… அவ தலைய பிடிச்சு வாயில் ஊத்து …. பாதி கீழ போகுது", என அர்ஜுன் குரல் கேட்டதும் திடுக்கிட்டு இருவரும் திரும்பினர். "சார்…. நல்ல இருக்கீங்களா? உங்களுக்கு எதாவது மாறுதல் தெரியுதா? வலி இருக்கா?", என கண்மயா படபடவென கேட்டாள். "ரிலாக்ஸ் கண்மயா …. ஐ...