29 – ருத்ராதித்யன்
29 - ருத்ராதித்யன் அர்ஜுனும் யாத்ராவும் கடத்தப்பட்ட விஷயம் தெரிந்தததும் நந்தனும், சர்வேஸ்வரனும் முதலில் அமைதியாக தான் இருந்தனர். சிறிது நேரத்தில் கதிர் வந்து, "சார்… நம்ம அர்ஜுன் சார கடத்திட்டு போனது அந்த அனிமல் கில்லர் தான்… ஆனா யார் சொல்லி செஞ்சான்னு தெர்ல… வண்டியும் டெல்லி தாண்டி எங்க போச்சின்னு தெர்ல", எனக் கூறியதும் மற்ற இருவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அவர்கள் கடத்தப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் ஆகிறது. இன்னும் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. சர்வேஸ்வரனுக்கு அர்ஜுன் கடத்தப்பட்ட நான்கு மணிநேரங்கள் கழித்து அவர் கொண்டு வந்த சூட்கேஸை காசியில்...