Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
கடக்கின்ற நொடிகள்……..
நீளமாவதை உணர்கிறேன்…. – இன்னும்
கடக்க வேண்டிய நீளம் எவ்வளவோ ?!
இதுவரை காணா புது உணர்வு கொள்கிறேன்….
கொள்ளும் உணர்வினை கொல்லவா?
காரணமில்லா கோபங்கள்…..
அன்புகாட்டும் இதயத்தை எனையறியாமல் தாக்குகிறேன்……
விடை தெரியாது குழம்பி நிற்கிறேன்….
வேண்டும் என யாசிக்கவில்லை….
வேண்டாமென தூற்றவும் இல்லை….
ஏனோ என் மனநிலையில் மாற்றம்…
மாற்றத்தின் காரணமாய் குழப்பமா?
மாற்றமே குழப்பமா ???!!!
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….