வாய்ப்பு
எனை விட்டு பிரிய ஏன் இத்தனை ஆவல்?இன்னும் சிறிது நாள்...என் அன்பை பொழிய ....வாய்ப்பு கொடு ... - மீண்டும்ஒரு முறை... - ஆலோன் மகரி
எனை விட்டு பிரிய ஏன் இத்தனை ஆவல்?இன்னும் சிறிது நாள்...என் அன்பை பொழிய ....வாய்ப்பு கொடு ... - மீண்டும்ஒரு முறை... - ஆலோன் மகரி
பிரபஞ்சத்தின் இசையுடன்……உன் இதய துடிப்பின் இசையும்…அற்றை திங்கள் பேரொளியில்….உன் முகம் கண்டு என் உள்ளம் குதிக்க…துள்ளும் உள்ளத்தின் கடிவாளம் உனது விழிகளில்…..கட்டி இழுத்து …. எட்டி நிறுத்தி….எனை அலையென அலைக்கழிக்கிறாய்….மீண்டுமோர் பார்வை பார்த்தால்(ள்)....பேரலையாக உனையும் அள்ளி அணைத்துச் செல்லேனோ…. ♥♥♥?!!! - ஆலோன் மகரி
சிதறிய சிற்பங்கள்....தேர்ந்தெடுக்கும் சிற்பிகள்...பவள சிரிப்பில்....சிதறும் முத்துக்களாய்...உன் மின்னல் சிரிப்பு....சிதறிய நெஞ்சத்தை...கோர்த்தெடுக்க வாராயோ..... - ஆலோன் மகரி
காமத்தில் இழுத்தனைக்கும் பொழுதிலும்....காதலை உணர்த்த...... - உன்னால்மட்டுமே முடிகிறது.... - ஆதலால்உனை பிரியா வரம் வேண்டி.....இயற்கையிடம் பிச்சை கேட்கிறேன்... ♥♥♥ - ஆலோன் மகரி
கணநேர சங்கமத்தில் ஆயிரமாயிரம் பரிமாற்றங்கள்.......கோடி வார்த்தைகள் கோர்த்தாலும்....பரிமாற்றத்தை முழுதாய் கோர்க்க முடியாது வார்த்தைகளில்...... - ஆலோன் மகரி
காரணமேதும் தேவையில்லை.....உன்னை....உன் அன்பை .....ஒரு நாள் ....ஒரே நாள்.....கண்படும் தூரத்தில்... உன் குரலிசை கேட்கும் தொலைவில்.....தொலையாமல் தொலையவே ஆசை.....பூமியில் இருக்கும் ஆழ்துளை அத்தனை ஆபத்தானதா ?இல்லை....உன் கன்னத்தில் விழும் ஆழ்தூளையில் .... - என்மொத்தமும் விழுந்து மேலெழ முடியாது இன்பமாய் இம்சைபடுகிறேன்... உன் ஓர் இதழ் சுழிப்பில்....😘😘😘😘😘😘
பலதையும் கொட்ட நினைக்கிறேன்.... உள்ளத்தின் பாரம் தீர அல்ல.... வார்த்தையே வேண்டாம்.... சாய ஓர் தோள் போதும்...ஏதோ நினைத்த மனதின் வெளிப்பாடாகஎன்னுதட்டில் ஏளனச்சிரிப்பு...... கிறுக்கி..... இதையும் தாங்குவாள் (மன) திடம் கொண்டு.... - ஆலோன் மகரி
எண்ணிலடங்கா பிரச்சினைகள் வரிசைக் கட்டி நின்றாலும்…..ஒரு ரூபாயும் பெறாத பிரச்சினைக்குத்தான் ஊர் ஒன்று கூடும்…….காற்றை விலைப்பேசும் வல்லூறுக்கூட்டம்……. - ஆலோன் மகரி
பகுதிகள் பல பற்றி அறியும் ஆவல்….அதில் வாழும் உயிர்களும் பலவகையே….அவற்றின் உண்ணல், உறங்கல்,.....மனிதரும் அதுபோல் தான்…..பூமி உருண்டையில் தொற்றி நிற்கிறோம்…இயற்கை அல்லா செயற்கையை நாடி செல்கையில்…..பூமியும் ஓர் வலியோ , கூச்சமோ உணர்ந்து…உதறினால் காக்குமோ - நம்செயற்கையின் கை……. - ஆலோன் மகரி
இரசனை தான் பல இராசயன மாற்றங்களை இயக்க வைக்கிறது ....மனதிலும்...உடலிலும் ...இயற்கையிலும்....இறுதியில் தமிழிலும்....மூச்சுமுட்ட முட்ட காதலனவனின் இதழணைத்த கிறக்கத்தில் நான்...... - ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….