Tag: மகரியின் கிறுக்கல்கள்

வாய்ப்பு

எனை விட்டு பிரிய ஏன் இத்தனை ஆவல்?இன்னும் சிறிது நாள்...என் அன்பை பொழிய ....வாய்ப்பு கொடு  ... - மீண்டும்ஒரு முறை... - ஆலோன் மகரி

பேரலை

பிரபஞ்சத்தின் இசையுடன்……உன் இதய துடிப்பின் இசையும்…அற்றை திங்கள் பேரொளியில்….உன் முகம் கண்டு என் உள்ளம் குதிக்க…துள்ளும் உள்ளத்தின் கடிவாளம் உனது விழிகளில்…..கட்டி இழுத்து …. எட்டி நிறுத்தி….எனை அலையென அலைக்கழிக்கிறாய்….மீண்டுமோர் பார்வை பார்த்தால்(ள்)....பேரலையாக உனையும் அள்ளி அணைத்துச் செல்லேனோ…. ♥♥♥?!!! - ஆலோன் மகரி

வாராயோ ?

சிதறிய சிற்பங்கள்....தேர்ந்தெடுக்கும் சிற்பிகள்...பவள சிரிப்பில்....சிதறும் முத்துக்களாய்...உன் மின்னல் சிரிப்பு....சிதறிய நெஞ்சத்தை...கோர்த்தெடுக்க வாராயோ..... - ஆலோன் மகரி

பிச்சை

காமத்தில் இழுத்தனைக்கும் பொழுதிலும்....காதலை உணர்த்த...... - உன்னால்மட்டுமே முடிகிறது.... - ஆதலால்உனை பிரியா வரம் வேண்டி.....இயற்கையிடம் பிச்சை கேட்கிறேன்... ♥♥♥ - ஆலோன் மகரி

சங்கமம்

கணநேர சங்கமத்தில் ஆயிரமாயிரம் பரிமாற்றங்கள்.......கோடி வார்த்தைகள் கோர்த்தாலும்....பரிமாற்றத்தை முழுதாய் கோர்க்க முடியாது வார்த்தைகளில்...... - ஆலோன் மகரி

கன்னக்குழி

காரணமேதும் தேவையில்லை.....உன்னை....உன் அன்பை .....ஒரு நாள் ....ஒரே நாள்.....கண்படும் தூரத்தில்... உன் குரலிசை கேட்கும் தொலைவில்.....தொலையாமல் தொலையவே ஆசை.....பூமியில் இருக்கும் ஆழ்துளை அத்தனை ஆபத்தானதா ?இல்லை....உன் கன்னத்தில் விழும் ஆழ்தூளையில் .... - என்மொத்தமும் விழுந்து மேலெழ முடியாது இன்பமாய்  இம்சைபடுகிறேன்... உன் ஓர் இதழ் சுழிப்பில்....😘😘😘😘😘😘

திடம்

பலதையும் கொட்ட நினைக்கிறேன்.... உள்ளத்தின் பாரம் தீர அல்ல.... வார்த்தையே வேண்டாம்.... சாய ஓர் தோள் போதும்...ஏதோ நினைத்த மனதின் வெளிப்பாடாகஎன்னுதட்டில் ஏளனச்சிரிப்பு...... கிறுக்கி..... இதையும் தாங்குவாள் (மன) திடம் கொண்டு.... - ஆலோன் மகரி

சமூகப் பிரச்சினை

எண்ணிலடங்கா பிரச்சினைகள் வரிசைக் கட்டி நின்றாலும்…..ஒரு ரூபாயும் பெறாத பிரச்சினைக்குத்தான் ஊர் ஒன்று கூடும்…….காற்றை விலைப்பேசும் வல்லூறுக்கூட்டம்……. - ஆலோன் மகரி

செயற்கையின் கை…

பகுதிகள் பல பற்றி அறியும் ஆவல்….அதில் வாழும் உயிர்களும் பலவகையே….அவற்றின் உண்ணல், உறங்கல்,.....மனிதரும் அதுபோல் தான்…..பூமி உருண்டையில் தொற்றி நிற்கிறோம்…இயற்கை அல்லா செயற்கையை நாடி செல்கையில்…..பூமியும் ஓர் வலியோ , கூச்சமோ உணர்ந்து…உதறினால் காக்குமோ - நம்செயற்கையின் கை……. - ஆலோன் மகரி

இரசனை

இரசனை தான் பல இராசயன மாற்றங்களை இயக்க வைக்கிறது ....மனதிலும்...உடலிலும் ...இயற்கையிலும்....இறுதியில் தமிழிலும்....மூச்சுமுட்ட முட்ட காதலனவனின் இதழணைத்த கிறக்கத்தில் நான்...... - ஆலோன் மகரி

Page 10 of 11 1 9 10 11

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!