Tag: adventure

1 – ருத்ராதித்யன்

17 – ருத்ராதித்யன்

17 - ருத்ராதித்யன் ஆருத்ரா சத்தம் கேட்டு பால்கனியில் வந்து எட்டிப் பார்த்தாள்..பறவைகள் எல்லாம் மீண்டும் கூட்டில் அடங்கியது. புதிதாக பிறந்த பைரவ் மட்டும் தட்டுத்தடுமாறி நடந்துக் கொண்டிருப்பது கண்டு கீழே சென்றாள். அவள் பால்கனியில் இருந்து கீழிறங்கி செல்ல,  புதிதாக ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தனர். அந்த படிகட்டுகளின் வழியே கீழிறங்கி வந்தவள் சத்தம் செய்யாமல் நடந்து வந்தாள். அவள் கீழே வந்ததும் பஞ்சவர்ணக்கிளிகள் இரண்டும் பறந்து வந்தது. "ஏய்….இன்னும் தூங்கலியா நீங்க? ", என ...

1 – ருத்ராதித்யன்

16 – ருத்ராதித்யன்

16 - ருத்ராதித்யன் "குட் ஈவினிங் சார்….. ", என கண்மயா கூறிவிட்டு சக்ஸராவை இடித்தாள்.சகஸ்ரா பேசமுடியாமல் வாயும் தலையும் மட்டும் அசைத்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள்.சகஸ்ராவைக் கூர்ந்துப் பார்த்தபடி, "இன்னும் உனக்கு இந்த வியாதி சரியாகலியா சகஸ்ரா? நான் குடுத்த டேப்லட் சாப்டல போலவே?", என கண்கள் விரித்து மென்னகைப் புரிந்தபடிக் கேட்டான்.ஒருவாறு தன் இதயத்தை இயல்பாக துடிக்க வைத்து, "நான் ஏற்கனவே எடுக்கற மெடிசன் நல்ல ரிசல்ட் குடுக்கறதால ...

1 – ருத்ராதித்யன்

15 – ருத்ராதித்யன்

15 - ருத்ராதித்யன் ஆதித்யன் யாத்ராவை முறைத்தபடி நின்றிருக்க, ஜான் ஓடி வந்து மூச்செடுத்துக்கொண்டான்.."எதுக்கு இப்ப இப்படி ஓடி வர்ற ஜான்?", என யாத்ராவை முறைத்தபடி கேட்டான் ஆதி."பூவழகி தான் ஓடி வர சொன்னா பாஸ்…. அதான் ஐஞ்சு கி.மீ ஓடி வந்தேன்", என மூச்சு வாங்கியபடி சொல்பவனைக் கண்டு முறைத்தான்."ஏன்டா அவ சொன்னா உனக்கு அறிவில்ல.. உன்  பைக் வீட்ல இருந்து எடுத்துட்டு போனல்ல.. அது எங்க?""பைக் பூவழகி சொன்ன ...

1 – ருத்ராதித்யன்

14 – ருத்ராதித்யன்

14 - ருத்ராதித்யன் மிதிலன் நின்றிருந்த மரக்கிளையில் இருந்து தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த பாம்பு அவன் தலைக்கு பக்கவாட்டில் வந்து ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்பியது.மிதிலன் முதலில் திகிலடைந்து திரும்பும் முன் பறவைகள் கீச்கீச்கீச் என பதற்றமாக சத்தமிடவும், அந்த பாம்பு அவனுக்கு பின்னிருந்த பாறையில் விழுந்து வேகமாக ஊர்ந்துச் சென்றது.சட்டென ஓடும் பாம்பையும், கத்தும் பறவைகளின் ஒலியையும்  கண்டு அருகில் வேறு மிருகம் வருகிறதா எனப் பார்த்தான்.எதிரே ஏதோ அசைந்து சென்றதை ...

1 – ருத்ராதித்யன்

9 – ருத்ராதித்யன்

9 - ருத்ராதித்யன் பைரவக்காட்டில் அருவம் தன் முன்னால் உள்ள சுயம்பு லிங்கத்திடம் தன் துயரத்தை கண்ணீர் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.அருவமாயிற்றே….. அதன் கண்ணீர் யாருக்கும் தெரியாது அல்லவா?ஆனால் எல்லாம் அறிந்த ஈசனுக்கு தெரியாமல் இல்லையே…. அவனே அதன் துயரத்தை துடைக்க வேண்டும்.வெளியே உறுமல் சத்தம் கேட்டும் அருவம் இன்னும் திரும்பவில்லை.கார்மேகன் உள்ளே வந்து அருவத்தை மோப்பம் பிடித்து அதன் அருகில் நின்றது.அருவத்தின் கண்ணீர் கண்களுக்கு புலப்படாவிட்டாலும், அதன் மனவேதனையை நன்றாக ...

காற்றின் நுண்ணுறவு

3 – காற்றின் நுண்ணுறவு

3 - காற்றின் நுண்ணுறவு வீட்டிற்கு வந்த பாலவதனியும் வல்லகியும் பொருட்களை எடுத்துக்கொண்டு லிப்டிற்காக காத்திருந்தனர். அந்த சமயம் வல்லகிக்கு கண்முன்னே சில நிழல்கள் நடமாடுவதுப் போலத் தோன்றியது. கைகளில் இருந்த பைகளை இறுக்கியபடி வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டிருந்தாள். அவளின் சுவாச மாறுபாட்டை கவனித்த பாலா, அவள் கைகளை பிடித்து உலுக்கினாள். "வகி…. வகி…. என்னாச்சி…? ஏன் இப்படி மூச்சு வாங்குது? ", என பதற்றமாகப் பேசினாள். "பாலா… பாலா…. இங்க ….இங்க…. யாரோ ரொம்ப அழுதிருக்காங்க…. ...

காற்றின் நுண்ணுறவு

2 – காற்றின் நுண்ணுறவு

2 - காற்றின் நுண்ணுறவு உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது. பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் குறியீடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். "கிங்காங் ஆன் கினியா… ஐ ரிபீட் கிங்காங் ஆன் கினியா….. வேர் டூ லேண்ட்?", பைலட்."காப்பீட்…. யூவர் மார்க் இஸ் latitude 0.700, longitude 0.954… ", எனக் கட்டளை வந்தது. ஹெலிகாப்டர் அந்த குறியீட்டைக் காண அது ...

காற்றின் நுண்ணுறவு

1 – காற்றின் நுண்ணுறவு

1 - காற்றின் நுண்ணுறவு பார் எங்கிலும் பரந்து விரிந்து, மேலும் நம் உயிரின் இருப்பை நொடிக்கு நொடி உறுதிப் படுத்துவது சுவாசம். அதுவே காற்று … எத்தனை செயற்கையான விஷயங்கள் அறிய கண்டுபிடிப்பாக போற்றப்பட்டு அன்றாட வாழ்வில் பிணைந்திருந்தாலும், 'சுவாசம்' அது இல்லாமல் ஜீவித்திருக்கும் நிலையை நாம் இழந்திருப்போம். காற்று …… அது எங்கிருந்து வருகிறது? அது எப்படி உருவாகிறது? அதில் என்ன என்ன உள்ளன? அதனால் என்ன பயன்? இப்படியான பல கேள்விகளில் இப்பொழுது வரையிலும் நாம் பதில் காணாமல் ...

காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  "காற்றின் நுண்ணுறவு" கதை நமது தளத்தில் விரைவில் வரப்போகிறது ..  அந்த கதையில் இருந்து சில துளிகள் இதோ ..  உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது.  பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் குறியீடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.  "கிங்காங் ஆன் கினியா… ஐ ரிபீட் கிங்காங் ஆன் கினியா….. ...

இயல்புகள்

சித்ர விசித்திரம்

அந்த அர்த்தஜாம நேரத்தில் காத்திருப்பது என்பது நம்மில் பலருக்கு நடுக்கத்தை கொடுக்கும். ஆனால் அச்சமயத்தில் நிற்பவளுக்கு அதிகாலை நேர நடைபயிற்சியில் சுற்றிமுற்றி வேடிக்கை பார்ப்பதைப் போல இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அத்தனை சாதாரணமாக, நடைப்பயின்றபடி சுற்றிலும் பார்வையைச் செலுத்திக் கொண்டு, கையிலிருக்கும் டார்ச் லைட்டை ஆன் ஆப் செய்து விளையாடிக் கொண்டிருந்தாள் இதயா. ஊரின் எல்லையில் அய்யனார் ஒரு பக்கம் கண்களை உருட்டி மிரட்டிக் கொண்டிருக்க, சிறிது தூரத்தில் ...

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!