நோ டென்சன் நோ பீபி
மூங்கில் தோட்டம் ….மூலிகை வாசம்….நிறைஞ்ச மௌனம்….நீ பாடும் கீதம்…..எனப் பாடியபடியே அவள் நடந்துக் கொண்டிருந்தாள்."கொஞ்சம் பாடறத நிறுத்துடி… எதாவது பேய் வந்துட போகுது", என அவளை அதட்டியப் படி பின்னே வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தாள் அவளின் தோழி மயிலினி."நான் பாடினா உனக்கு பொறாமையா இருக்கா மயிலு ….", என வம்பிலுக்கும் எண்ணத்தில் பேச்சை ஆரம்பித்தாள் ருத்ரஶ்ரீ."வேணா ஶ்ரீ. வாய மூடிட்டு நட… அந்த மரத்துகிட்ட போனதும் நீ தான் வண்டிய ...