Click to rate this post!
[Total: 1 Average: 5]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
காணாத கண்களும் தான்… – உன்
குரல் கேட்டு உயிர்க்கிறது….
வேண்டாத வார்த்தைகளை தான் – நீ
கொட்டிய பின்னும் எண்ணுகிறது….
உன்மீது கொண்ட காதல் மடியாது..
ஆனால்…
வீசிய வார்த்தையில் உதிர்ந்து போனது…
பரவாயில்லை….
நான் மடியமாட்டேன்…
மீண்டும்….. – உன்
குரலுக்கு திரும்பவும் மாட்டேன்…
சுகமாய் வாழ்ந்திரு… – என்
சுகத்தினை உறிஞ்சிடாத தூரத்தில்…
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….