Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
வெட்டவெளியில் தான் திசை தெரியாது நிற்கிறேன் ….
இருட்டென்பது தனியே பிரித்து காண அவசியமில்லாத நாட்கள் …
வடகயிறு கொண்டு மனதை எதுவோ இறுக்குகிறது …
மூச்சு நிற்கும் நொடியில் சற்று ஆசுவாசமெடுக்க வைக்கிறது …
அனுமதி கேளாமல் மீண்டும் மீண்டும் இதுவே நிகழ்வுகளாக தொடர்கிறது ….
பெருங்குரலெடுத்து கத்த நினைக்கிறேன் …
அடிகுரல் கூட வெளி வர மறுக்கிறது …
இந்நிலை தொடர்வதன் காரணம் அறியேன் ….
எதுவோ …
எதுவாகவோ ….
மனமோ … நானோ ….
பரிணாமம் கொள்ள போகிறது ….
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….