- 2022 Aalonmagari. All Rights Reserved.
விடியல் வரும் காத்திரு.....இதே வார்த்தை தான் பல முறை பல செவிகளையடைகிறது....முதல்முறை.....யாரோ என் அருகிருந்தவருக்கு கூறினார்....அடுத்தமுறை ....எனக்கு பிடித்தவருக்கு கூறினார்.....பலமுறைகள் கடந்தும்....என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூறினார்....நேற்று....எனக்கும் கூறினார்.....அன்றெனது...
சற்று நேரம் முன்பு தான்....உன் மார்சாயும் ஏக்கம் கொண்டு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்....கடந்து போன காலத்தை நினைத்து....அப்படி நடந்திருந்தால் ....இன்று நீயும் நானும்....ஒன்றாய் அமர்ந்து பேசியிருக்கலாம்.....ஓர் மழை...
போதுமென்றளவு தனிமையில் கழித்துவிட்டேன்....இவ்வாழ்வில்....பெற்றவரும் சில காலம் தான்....உடன்பிறந்தவரும் சில காலம் தான்....ஒன்றாயிருக்கும் போதே தனிமை தேடுகிறது...தனித்திருத்தல் பல நேரங்களில் ஏகாந்தம் தான்......ஏகாந்தம்....இச்சொல்லின் மெய்ப்பொருள் விளங்கினேன்....பெற்றவரோ.... உற்றவரோ....உடன்பிறந்த இரத்தமோ....இதில்...
உழைப்பின் மீதிருக்கும் காதல் - இப்போதுஉழைப்பை காதலிப்பவர்கள் மீதும் வருகிறது...இறுக்கியணைத்து தோளில் தூக்கி வைக்க வேண்டும்....ஒவ்வொரு குடும்பத்தின் முதுகெலும்பாய் மறைந்திருப்பவர்களை எல்லாம்....தோள் கொடுத்து கொண்டாடவேண்டும்.... உழைப்பின் மீதான...
மனதினில் ஏற்படும் வெறுமையை ஒழிக்க....புகை பிடிக்க இஷ்டமில்லை....புண்பட்ட மனதை புகை விட்டு உடலையும் வதைக்க விரும்பவில்லை...மது நாட நாட்டமில்லை...என் வலியை பல்மடங்காய் மாற்றி வலிக்க வைத்துவிடும்...மாதுவான நானே...
கருவுறாத முட்டை .....உதரத்தில் நில்லாது....உதிரமாய் வழிகிறது...மற்றொரு மாதமும் கழிந்தது....அவள்(ன்) ஆசையும் உதிர்ந்தது.....வலி பொறுத்தும்.....மனம் பொறுக்காததால்.....மற்றிரண்டு துவாரத்தில்....(கண்)நீர் வழிகிறது.....-ஆலோன் மகரி
வீண் தான்....இதுநாள் வரையிலும்.....காட்டிய ஆசையும்....உணர்ந்த நேசமும்.....மூழ்கிப்போன இதயமும்....கொடுத்த அரவணைப்பும்....கிட்டாத காதலும்.....இடிந்த குடும்பமும்....உடைந்த புத்தியும்.....நொறுங்கிய அனைத்தும்.....வீண் தான்.....இவளின் இந்நாள் வரையிலான உயிர்த்திருத்தலில்.....உள்ளாவியின் குரல் கேட்டு...... அக்கண்ணில்படா விரல் பிடித்து.....நொறுங்கிய மொத்தத்தையும்....மீண்டும்....முதலில்...
விநாடி நேர பார்வை தான்.... - மனம்இணைவதும்...உடைவதும்...முன்னதில் தோன்றிய நம்பிக்கை ...பின்னதில் நொறுங்கியிருக்கலாம்...இடைவிடாது ஏமாந்த மனது...சட்டென விழித்திருக்கலாம்...ஆவதும் ....அழிவதும்....அன்பினால் மட்டுமே.... - ஆலோன் மகரி
உள்ளம் இறுக்கி...கண்கள் சுருக்கி....எண்ணங்கள் ஒதுக்கி....சுவாசம் அடைபட....தொண்டுகிழ வயது தேவையில்லை....அன்பில்லா நாட்களை வாழ்தலே போதும்...இப்புவியில்.....அன்பை யாசிக்கும் யாவரும் கடக்கும் நொடிகள் இவை....முன்னே சென்றவர் வலி புரிந்தேன்... - என்பின்னே...
செயற்கையான இயற்கை வேண்டாம்....நூதனமான தடங்கள் வேண்டாம்.....அறை அடைக்கும் காகிதங்கள் வேண்டாம்...பழைய நான் வேண்டவே வேண்டாம்.....புதிய நான் முற்றிலும் வேண்டாம்....நிஜமான "நான்" யார்?நிஜத்தை உணரும் நுட்பமின்றிய வாழ்விது....இறுதியில் அந்தகாரம்...
© 2022 By - Aalonmagari.