வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் -துர்காதேவி (துர்கா கார்த்திகேயன்)
2. படிப்பு -12ம் வகுப்பு
3. தொழில்/வேலை – இல்லத்தரசி
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
பள்ளி காலங்களில் இருந்து வாசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் நான் முழு நேர வாசகியாக மாறியது கடந்த 2017ம் ஆண்டு முடிவில் இருந்து தான்.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?
என் மனம் மிகவும் பலவீனம் அடையும் தருணம் என்னை அதிலிருந்து மீட்டெடுக்க வாசிப்பை நாடுவேன். அப்படி வாசிக்கும் பொழுது என் மனது இலகுவாகிவிடும்.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
எனது வாசிப்பு பெரும்பாலும் கைப்பேசி வழியே… ஆனால் எனக்கு மிக பிடித்த கதைகளை புத்தகங்கள் மூலமே வாசிப்பேன்.. புத்தகத்தின் மூலம் வாசிப்பது ஒருவித போதையை தரும்.
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
வருடத்திற்க்கு 2 அல்லது 3 தான் ஏன்னென்றால் என்னுடைய சேமிப்பிலிருந்து தான் புத்தம் வாங்க வேண்டும்…
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
அவற்றை பற்றி முமுமையாக தெரியவில்லை எனக்கு..
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
வாசிப்பினால் எனக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்றால் வாழ்க்கையில் இன்னும் பலவற்றை நான் கடந்து வர வேண்டும் என்பதே.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் நான் மாற்றி கொண்ட குணாதிசியம் என்றால் பொறுமை.. (இந்த பொறுமை என்கிட்ட சுத்தமா இருந்தாது இல்லை ஆனா நான் வாசிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் எனக்கு பொறுமையே வந்தது)
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
தலைப்பு மற்றும் முன்னுரை.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
எனக்கு மிகவும் பிடித்த வகை காதல், குடும்பம், வரலாறு
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
எனக்கு எழுத்தாளர்கள் என்பவர்கள் சிறந்த நண்பர்களாக தெரிகிறார்கள்.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
அப்படி ஒரு புத்தகத்தை இன்னும் நான் வாசிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்..
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்றைய எழுத்தாளர்கள் பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை… ஆனால் இன்றைய எழுத்தளார்கள் தங்களால் முடிந்தளவு ஒரு நல்ல படைப்பை கொடுக்க வேண்டும் என்று அயராது உழைக்கின்றனர்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
ஆம், எனது பார்வையில் வளர்ந்து வருகின்றதாக தான் நான் கருதுகிறேன்.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி”
இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
வழக்கு மொழி மற்றும் வட்டார மொழி இவை இரண்டையும் நான் வாசிக்கும் போது மனதுக்கு நெருக்கமாக உணர்கிறேன்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
வரலாற்று நாவல் வாசிப்பேன். நான் படித்ததில் பிடித்தது, பொன்னியின் செல்வன், வேள்பாரி.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
இன்றைய கால கட்டத்தில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கிறது.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
வித்தியாசமான கரு கொண்ட கதைகள் தான் பிடிக்கும். அறிவியல் சார்ந்த புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
கண்டிப்பாக, என் வேலைகள் முடிந்த மீதி நேரம் எல்லாம் வாசிப்பதற்கே செலவழிப்பேன். இத்தனை மணி நேரம் தான் வாசிக்க வேண்டும் என்று வரையறை வைத்து கொண்டது இல்லை. உறங்காமல் இரவு முழுக்க வாசித்த அனுபவமும் உண்டு எனக்கு.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
விமர்சனம் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவ்வளவாக விரிவாக விமர்சனம் கொடுத்தது இல்லை.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
தொட்டாச்சிணுங்கி
தாம்பத்தியம்
கண்ணாடித்திரை
உன் கையில் என்னை கொடுத்தேன்
நனைகின்றது நதியின் கரை
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள்என்ன?
நான் வாசித்ததில் மனதை மிகவும் தொட்ட விஷயம் என்னவென்றால் “தாம்பத்யம்” கதையில் நாயகியின் பிரசவத்திற்க்கு பின் வரும் மன அழுத்தத்திலிருந்து வெளிக்கொண்டு வர நாயகன் எடுக்கும் முயற்சிகள் தான்.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
இன்றையை எழுத்துலகில் பல வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் எழுதுவது மகிழ்வை தருகிறது. சிறத்த படைப்பு மற்றும் வாசகர்களை எளிதில் சென்றடைய கூடிய கதைகளாக எழுதினால் நலமே.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
அவர்களின் எழுத்து நடையாக கூட இருக்கலாம் அல்லது சில எதிர்மறை எழுத்துக்களாக கூட இருக்கலாம்.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அன்றைய எழுத்தாளர்கள் :
ரமணிசந்திரன்
கல்கி
ஜெய்சக்தி
சாண்டில்யன்
இன்றைய எழுத்தாளர்கள் :
கார்த்திசெளந்தர்
வெண்ணிலாராஜன்
காஞ்சனா தேவி
சசிகுமார் தங்கவேல்
மேகவாணி
நித்தியா மாரியப்பன்
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
வித்தியாசமான கதை கரு, காதல், நட்பு, நகைச்சுவை.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லை. ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் இருவரும் சமமாகவே எழுத்துலகில் ஆளுமை செய்கின்றனர்.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
எழுத்தாளர் திரு.கார்த்தி செளந்தர் அவர்களுடைய ஆட்டோகிராப் இருக்கு.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கதையின் முடிவு எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
இதுவரை நான் எந்த ஆடியோ கதைகளையும் கேட்டது இல்லை.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
கதையின் மையக்கருவை பொறுத்தே இருக்கிறது.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
எழுதுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல அதனால் கதையை எழுதும் எழுத்தாளர்கள் சிறந்த முறையிலும், அனைவரும் ஏற்று கொள்ளும் படியும் எழுத்துகளை வடிவமைத்தால் மிக நன்றாக இருக்கும். அதே சமயம் இந்த கால கட்டத்திற்க்கு ஏற்ப தங்கள் எழுத்து நடையை மாற்றியமைத்து எழுதினால் வாசகர்களாகிய எங்களை எளிதில் வந்தடையும்.
இயல்பானதொரு நேர்காணல் துர்கா கார்த்திகேயன் அவர்கள் கொடுத்து இருக்கிறார். ஒரு வாசகனாக அவரின் எண்ணம் மற்றும் கருத்துக்களை எளிமையாக கூறியது சிறப்பான விஷயம்.
உங்களுடன் அருமையான நேரத்தை நாங்களும் செலவழித்தோம். அருமையான பதில்களுக்கு நன்றிகள்.. மீண்டும் ஒரு வாசகருடன் உங்களை சந்திக்கிறேன்.
வாசிப்பை சுவாசிப்போம்..