Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
என் மனதோடு சில வரிகள் ..
மனதின் பல மொழிகளோடு ..
பல மௌனங்களின் பதில்கள் ..
மௌனமான கேள்விகள் ..
ஏதும் அறியா கன்னியாக நான் !
பலதும் கற்ற பேதையாக வாழ்கிறேன் ..
முகமறியா நட்பும் ..
முகமறிந்த மோதலும் ..
காதலில் தோல்வியும் ..
மர்மத்தின் மையத்தில் குடி கொண்டு விட்டேன் ..
விடையறியா கேள்விகள் ..
கேள்விகள் இல்லா விடைகள் ..
எனக்கும் உனக்கும் இடையே ..
தடுமாறும் மனிதர்கள் !!
சொல்வது தத்துவமல்ல ..
சொல்லாதிருந்தால் தவறும் அல்ல ..
ஆயினும்,
சிறு சிறு மௌனங்கள் ..
சில பல கேள்விகள் ..
ஞான மார்க்கத்தை தேடவில்லை ..
அங்குள்ள அன்பு மார்க்கத்தை உணர்கிறேன் ..
உணர்ந்த அன்பானது ..
பரமாத்மாவின் தாயன்பு ..
அதை என்றும் தக்கவைத்துக்கொள்ள .. – என்
தனி மார்க்கத்தை உருவாக்குகிறேன் ..
அவ்வழி நான் நடக்க ..
என் வழி யார் நடப்பார் ???!!!
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….