Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
அனு நொடியும் பிரியாது வாழ்கிறேன் உன்னுடன்…… !
நித்தமும் நிமித்தமாய் மாற்றி உன்னுடன் உறவாட…!
நிஜத்தில் நிறைவாக….
நினைவில் வாழ்கிறேன்….
கனவானாலும் என் காதல் நிஜமே….!!
உருவம் காணாது…..
உன் மனமும் தெரியாது…..
பிரபஞ்சங்களின் எண் தாண்டி….
நீள்கிறது உன் மீதான என் நேசம்….!!!
எக்கணம் உனைக் கண்டாலும்…..- உன்
நிழலாய் மாறி நிஜத்தில் வாழ……
நிதர்சனமாய் காத்திருக்கிறேன்…..!!!
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….