Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
கண்ட கனவெல்லாம் கனவாகவே வளர்கிறது…
எந்நொடி அதை நிஜமாகச் செய்வாய்???
ஆயிரம் கனவல்ல நான் காண்பது….
கை எண்ணில் அடங்குபவை தான்…
ஆனால்,
காணும் கனவை கனவாக விடமாட்டேன்…
திமில் கொண்ட காளையாக ….
திமிரோடும், திறமையோடும் போராடுவேன்…
காணும் கனவில் சுயநலம் அதிகம் தான்….
என் சுயநலத்தால் பொதுநலம் பெருகுமென்றால்
இன்னும் அதிகம் சுயநலம் கொள்வேன்….
தோழனோ, தோழியோ யார் துணை கொடுத்தாலும்,
மறுத்தாலும்…..
கண்ட கனவை நிஜமாக்காது பிரியாது என் ஆத்மா….
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….