Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
தேனூறும் மலராய் நான் இல்லை……
தேன் தேடும் வண்டாக நீ வரவில்லை…..
உன் கூடு தேடி வந்தாயா?
உன் கூ(வீ)டாய் எனை மாற்ற வந்தாயா?
கருவண்டாய் நீ திரிந்து…. – என்
கருவிழியில் நீ சிக்கி கொண்டாய்…..
முதல் அழைப்பு யார் விடுக்க ?
முதல் முத்தம் எப்போது சுவைக்க… ?
தேனோடு காத்திருக்கும் மலராக நான்….. ♥
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….