84 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

84 - ருத்ராதித்யன்  கிழக்கு மலைகளில் இருந்து வெளியே வந்ததும் நரசிம்மனும், மகதனும் தென்கிழக்கு திசை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். அவர்களை தேடி சென்ற சேயோன் ஒரு நாள் பொழுதை காடுகளில் கழித்து விட்டு இல்லம் சென்றான். அவனைத் தேடி அரசனின் பணியாளும் வந்து நின்றான். “அரசர் தங்களை உடனே வரச்சொன்னார்..” பணியாள். “இரண்டு நாழிகையில் வருகிறேன். இப்போது தான் காட்டில் இருந்து வந்தேன் என்று அரசரிடம் தெரிவி..” எனக் கூறியவன் அவசரமாக குளித்து உடைமாற்றிக் கொண்டு தன் ஆட்களில் சிலரை அழைத்து காட்டினில் வேட்டையாடிய மிருக உடல்களை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு...

83 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

83 - ருத்ராதித்யன்  அமரபுசங்கனின் உடல் மறைய தொடங்கி இரண்டு நாழிகையில் அவனது உடலே முழுவதுமாக மறைந்து போனது. வனயட்சி தவிர மற்றவர்கள் நெஞ்சம் பதறி அவன் உடல் கிடத்தப்பட்டிருந்த திட்டிற்கு  வேகமாக வந்தனர். “யாரும் அருகே செல்ல வேண்டாம்.. அவரது உடல் அந்த திரவத்தை முழுதாக உள்வாங்கி இருக்கிறது. இன்னும் ஒரு நாழிகையில் அவரது உடல் நமது கண்களுக்கு தெரியும்.. சிங்கம்மா.. இங்கு வாருங்கள்.. இந்த வரைப்படத்தை சரியாக பொருத்துங்கள்..” எனக் கூறி ஒரு கல் மேடையை அவளிடம் காட்டிவிட்டு அரசரின் அருகில் வந்து நின்றார் வனயட்சி. “அரசே.. இந்த உலகம் தோன்றிய...

1.விடா ரதி…

1.விடா ரதி…

1.விடா ரதி… கொடைக்கானல்….. அதிகாலைச் சூரியனைத் தேடி ஒரு ஜோடி கண்கள் தனது தேநீர் குவலையுடன் தன் அறைக்குள் இருந்த உப்பரிகைக் கதவினைத் திறந்து வெளியே வந்தன. ஏழு மணிக்கு கொடைக்கானலில் வெய்யோனைக் காண நினைப்பது அதிகப்படி தான். ஆனாலும் அவளுக்கு அந்த முதல் கதிர்களின் இளஞ்சூடு மிகவும் பிடிக்கும். ஐந்து ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைப் பார்த்துவிட்டு இப்போது தான் மீண்டும் தாய்நாட்டிற்கு வந்திருக்கிறாள். கழுத்தில் கட்டியிருந்தப் புதுமஞ்சள் தாலி, அவளின் வனப்பைப் பன்மடங்கு அதிகமாகக் காட்டியது.  அவள்….. ஸ்வர்ண ரதி…. பெயருக்கேற்றார் போல ஸ்வர்ணத்தில் செய்த ரதி தான். சுருக்கமாக ரதி அனைவருக்கும். “ஹே ரதி….....

82 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

82 - ருத்ராதித்யன்  சேயோனும் அவனது தந்தையும் கிழக்கு காடு நோக்கி பயணத்தை தொடங்கினர். அந்த நேரத்தில் தான் மகதனை அந்த விடலை சிறுவன் வேட்டையாட முனைந்து நரசிம்மனிடம் சிக்கியதும் நிகழ்ந்தது. “தாங்கள் யார்?” அதிகுணன் ஆர்வமுடன் கேட்டான். “நான் வனத்தில் திரிபவன்.. இந்த புலிக்கு இணை தேடி வந்தேன்.. யார் நீ? விஸ்வக் கோட்டையை சேர்ந்தவனா? அந்த வீரன் யாரை சேர்ந்தவன்?”, என மகதன் பிடித்து வைத்திருந்தவனை பார்த்தபடி கேட்டான். “அவர் எனது அத்தான்.. அவர் அரசவை அதிகாரி சேயோனின் கீழ் பணிபுரியும் வீரர்.. நன்றாக வேட்டையாட தெரிந்தவர்களை எல்லாம் திரட்டிக் கொண்டிருக்கின்றனர் என்று...

81 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

81 - ருத்ராதித்யன்  தூரத்தில் தெரியும் மலைமுகடுகளை பார்த்தபடி, பறவைகளின் சத்தத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே அரசகேசரியை அருகே அழைத்தான். “இங்கே பார் நண்பா.. என்னவோ எனக்கும் உனக்கும் பிரிக்கமுடியாத பந்தம் உருவானது போல இருக்கிறது. நமது நாடும், மொழியும், வாழ்வியல் முறைகளும் வேறு வேறாக இருந்தாலும் நீ என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறாய். நான் புத்தியில் நினைப்பதை நிஜத்தில் நடத்தி காட்டுகிறாய்.. நமது லட்சியம் பெரிதாக இருக்க வேண்டும். எனக்கு ஏனோ இந்த இயற்கை என்ற விஷயமே பிடிப்பதில்லை.. பல வித்தியாசங்களையும், ஏற்ற தாழ்வுகளையும் இது வைத்துக் கொண்டு நம்மை...

11 – வேரோடும் நிழல்கள்

1 – வேரோடும் நிழல்கள்

11 - வேரோடும் நிழல்கள்  மலை ஏறப் போகலாம் என்று விஷாலியும், கிரிஜாவும் கூறியதும் நீரஜும் அவர்களுடன் அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய ஏதுவான விவரங்களை தேடத் தொடங்கி ஓர் மலை ஏறும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, அவர்கள் கொடுத்துள்ள இடங்கள் மற்றும் போய் வரும் நாட்கள் போன்றவற்றை பார்த்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் நிழலினி விஷாலிக்கு அலைபேசியில் அழைத்தாள். “விஷா.. எங்க இருக்க? இங்க உன் அம்மா உன்னை சாப்பிட கூப்பிடறாங்க..”“சரி பத்து நிமிஷத்துல வரேன். நீங்க சாப்பிடுங்க..” என நேரம் பார்த்தபடி கூறினாள். “இல்ல நீ வா நம்ம ஒண்ணா சாப்பிடலாம். நான்...

80 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

80 - ருத்ராதித்யன்  நரசிம்மனும் மகதனும் கிழக்கு பக்கமாக தங்களது பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருந்தனர். வடக்கும், வடக்கிழக்கும் முடிந்து நாட்டினை வலப்பக்கமாக சுற்றும்படியாக இந்த பயணம் இனி தொடரும். கோவிலை வலம் சுற்றுதல் போல நாட்டினை வலம் சுற்றி அரியணையில் ஏறும் வைபவம் இது. இதற்கிடையில் அவர்கள் இருவரும் பல இன்னல்களையும், சவால்களையும், ஆபத்துகளையும் கடந்து இந்த பயணத்தை வெற்றிகரமாக முடிக்கவேண்டும். நரசிம்மனும், மகதனும் நீண்ட நாட்கள் கழித்து ஒன்றாக நேரம் செலவழிப்பது போலவும் இது அமைந்ததால், இருவரும் ஒருவரின் இருப்பை மற்றவர் அனுபவித்துக் கொண்டிருந்தனர். மகதன் விளையாடி வம்பிழுத்தால் நரசிம்மன் கண்டிப்பதும்,...

79 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

79 - ருத்ராதித்யன்  “கூறுங்கள் வனயட்சி.. பெரியம்மா என்ன மந்திரங்களை கற்றார் ? யார் அவரை கொன்றது ? இந்த விஷயம் மட்டும் ஏன் யாரும் எங்கள் யாரிடமும் கூறுவதில்லை ?பைரவக்காட்டினை பற்றிய வதந்திகள் உண்மை தானா ?”, என யாத்திரை மெல்ல திடமாக ஒவ்வொரு கேள்வியாக கேட்டாள். “நீ இன்னும் உறங்கவில்லையா யாத்திரை ?”, வனயட்சி எதிர் கேள்விக் கேட்டார். “எனது கேள்விகளுக்கான பதில் தான் முதலில் கேட்க விழைகிறேன் யட்சி.. இனியும் காலம் தாழ்த்தாமல் எங்களுக்கு அந்த மர்மத்தினை விளக்கவேண்டும்.. இதோ உங்களின் செல்ல மகள் ஆருத்ராவும் வந்துவிட்டார் …”, என...

78 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

78 - ருத்ராதித்யன்  இங்கே மகரயாளியுடன் கூட்டப்பாறையின் உள்ளே சென்ற நரசிம்மனை காண்போம் வாருங்கள்... மகதன் நரசிம்மனை கண்ணின் இமையாக பாதுகாத்துக் கொண்டு உள்ளே நடந்தான். வழியில் பல யாளிகள் அவர்களை உண்ணும் ஆவலோடு முன்னே வருவதும், மூத்த யாளியின் சத்தத்தில் ஒதுங்கி நிற்பதுமாக அந்த இடத்தின் மையப்பகுதிக்கு சென்றுச் சேர்ந்தனர். “மகதா ... பார்த்தாயா எத்தனை யாளிகள் இங்கே இருக்கின்றன .. இதில் சிலத்தை நாம் வசப்படுத்தி பழக்கப்படுத்தினாலும் போதும் நமது அத்தனை பொக்கிஷங்களும் மிகப்பெரும் பாதுகாப்பை பெரும். நாமும் நமது வீரர்களை வேறு பணிக்கு அமர்த்தி இன்னமும் நாட்டினை வளமாக்கும் முயற்சியில்...

10 – வேரோடும் நிழல்கள்

1 – வேரோடும் நிழல்கள்

10 - வேரோடும் நிழல்கள்  “எப்படி சொல்ல வைப்பீங்க?” விஷாலி கேட்டாள். “தெரியல. ஆனா அவ மனசார என்னை நேசிச்சி கல்யாணம் பண்ணிக்குவா.. அதுக்கு எல்லா வகைலையும் நான் முயற்சி எடுப்பேன்.”“அவ உங்க முகத்தையே பாக்கமாட்டா அப்படி இருக்கறப்போ எப்படி அவள காதலிக்க வைப்பீங்க?” விஷாலி காட்டத்துடன் கேட்டாள். “எம்மா.. ஏன்மா உனக்கு உன் ஃப்ரெண்ட் வாழ்க்கை மேல அக்கறை இல்லயா?” பார்த்திபன் கேட்டான். “இருக்கு அதனால் தான் இவ்ளோ பொறுமையா நான் பேசிட்டு இருக்கேன். சொல்லுங்க மிஸ்டர். நீரஜ் எப்படி அவள சம்மதிக்க வைப்பீங்க?” என விஷாலி மெல்ல அவன் அருகே வந்தாள். நீரஜ் என்ன...

Page 2 of 52 1 2 3 52

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!