5 – விடா ரதி…
5 - விடா ரதி… அவளது வாழ்வில் மறக்க முடியாத நாள், முதன்முதலில் அவனைக் கண்டு மெய்மறந்து நின்றது அன்று தான். ஆலீவ் பச்சை மேல்சட்டையும், கருப்புநிறத்தில் கால்சராயும் அணிந்திருந்தான். அவளோ வெள்ளையில் மஞ்சள் எம்ப்ராய்டரி செய்தப் பூக்கள் கொண்ட சல்வார் அணிந்திருந்தாள். அது அவளுக்கு கல்லூரி முதல் வருடத்தின் கடைசி மாதங்கள்…. அந்த வயதிற்குரிய குறும்பும், சேட்டையும் என அவளது குணம் கலகலப்பானதாக இருந்தது. அவளைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவளது வேடிக்கைப் பேச்சில் அவ்வப்போது சிரிப்பு சத்தமும் வெடித்துக் கொண்டே இருக்கும். அதிக அலங்காரமின்றி எப்போதும் கல்லூரிக்குச் செல்வது போல...



