வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – S. பிரியா
2. படிப்பு – BE. EEE
3. தொழில்/வேலை – homemaker
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
2 வருடங்களுக்கு முன்பு.. Lockdown செய்த நல்ல விஷயம் …
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?
Stress அதிகமா இருந்தா… lonely யா feel பண்ணும்போது வாசிப்பேன்… நம்மகூட ஒரு கூட்டமே இருக்கமாறி தோணும்👍🏻👍🏻👍🏻… beautiful feeling…
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
Mobile.. Only
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள்?
மன்னிக்கவும்… என்னிடம் உள்ள அனைத்தும் பரிசு புத்தகங்கள் மட்டுமே… இதுவரை எதுவும் வாங்க இயலவில்லை… பொன்னியின் செல்வன் வாங்க ஆசைப்படுகிறேன்😍… மொபைல் அதிகம் உபயோகம் செய்வதால் புத்தகம் அதிகமா படித்தது இல்லை…
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
கதை நல்லா இருந்தா போதும்.. நம்மை ஆள்வது கதை மற்றும் அதன் போக்கே… so எல்லாம் ஒன்னுதான்…
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
அது புதுவிதமான Mesmerizing world… தாக்கம்னா நான் நிறைய கத்துக்கிட்டேன்.. நிறைய புது விஷயம் சொல்லி இருப்பாங்க ஒவ்வொரு கதையிலும்… கார்த்திசௌந்தர் sir ஓட எல்லா கதைகளுமே ஒவ்வொருவிதமான தாக்கம் ஏற்படுத்தும்.. தாம்பத்யம் கதை படிக்கும்போது நான் 7months pregnant… அப்போ அந்த கதை படிக்கும்போது கொஞ்சம் பயமாவும், நிறைய pregnancy issues பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சுது…. மறக்க முடியாத கதை… இப்பவும் அதன் தாக்கம் இருக்கு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
பேச்சை குறைத்து விட்டேன்.. 😜😜😜😜
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
ஆசிரியர்
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் ,சரித்திரம் , etc….)
காமெடி கலந்த கதைகள்… all stories… ரொம்ப பிடிச்சது வரலாறு … ex – மீனாட்சி அடைக்கப்பன் தீரா வஞ்சம் part1 and part2…
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
Friends💞💞💞💞….
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
தாம்பத்தியம்… ப்ரதிலிபி தான் படிச்சேன்…
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
எழுத்து நடை..
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
Yes 👍🏻👍🏻
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி”
இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
கதைக்கு ஏற்ற மொழி… கதை தான் main…
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
Yess…. ஆல்ரெடி ans 12th question la சொல்லிட்டேன்… மாந்த்ரீகன்… இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காதலும் வீரமும்… இன்னும் நிறைய கதைகள் இருக்கு…
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
Good… but எல்லாம் ஒரே மாதிரி இருக்க feel….
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
Yes… fantasy stories… ரொம்பவே பிடிக்கும்… சமீபத்தில் படிச்ச அவலையின் ரகசியங்கள் and ஆல்பா பீட்டா ரொம்பவே பிடிக்கும்….
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
இப்போ கொஞ்சம் break விட்டு இருக்கேன்.. படிக்க start பண்ணா 10hrs to 16hrs கூட படிச்சி இருக்கேன்… நிறைய கதை என்னை அழவைக்கும்… ஒரு கதை எடுத்தா அது அப்பவே fullலா படிச்சா தான் நிம்மதியா இருக்கும்…
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ?எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
கொடுத்து இருக்கேன்… இதுவரை தவறு எதுவும் சொன்னது இல்லை…. என்னை பொறுத்தவரை கதை எழுதுவதே பெரிய விஷயம் அதில் குறை கூற ஒன்றும் இல்லை…
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
கதைகள்:
செகப்பி – பூர்ணிமாகார்த்திக் (short story)
தாரமே தாரமே வா – பிரவீணாதங்கராஜ்
My angel கலா
மௌனமே காதலாய் – பர்வீன் பானு
ஜென்மம் முழுதும் – infaa
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள்என்ன?
நெறய இருக்கு… உயிருற்றின் உதிரமானவள் கதையில் காவிரி நதியின் மீது உள்ள ஹீரோவின் கோபம்…
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
நிறைய எழுத்துறாங்க நிறைய எழுத்தாளர் இருக்காங்க… படிக்கதான் நேரமில்லை… அவங்களுக்குள் ஒற்றுமை இல்லையோனு அடிக்கடி நெனைக்க தோணும்… பொங்கல் என்ற வார்த்தை கேள்விபடும் போதெல்லாம்…
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
நல்ல கதைகள் எப்போதும் வாசகர்களால் கொண்டாடப்படும்… இதில் விருப்பு மறுப்பு இல்லை..
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர்&இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அன்றைய எழுத்தாளர் பேர் மட்டும்தான் தெரியும்… அவர்களின் கதைகள் அதிகம் வாசித்தது இல்லை… பவாசெல்லதுரை கதைகள் கேட்டு இருக்கேன்… youtubeல… அவர் அன்றைய எழுத்தாளர்களின் கதைகள் சொல்லும் விதம் பிடிக்கும்…all good…
அறம்
அம்மா வந்தாள்
இருளப்பசாமியும் 21கிடாயும்
மனுஷி
கானல் இந்த கதைகள் பிடிக்கும்…
இன்றைய எழுத்தாளர்…
பூர்ணிமா கார்த்திக்
கார்த்தி சௌந்தர்
ஸ்ரீலக்ஷ்மி
பிரவீணாதங்கராஜ்
My angel கலா – இவங்க மொத்தம் எழுதினதே 3 கதைகள் தான்… இந்த கதை ஒரு நெடுநாவல் ரொம்பவே பிடிக்கும் எனக்கு… காரணம் தெரியல… simple ஸ்டோரி.. அன்புக்காக ஏங்கும் பெண்ணின் கதை…
புவனா சந்திரசேகர் அம்மா
Megavani
மீனாட்சி அடைக்கப்பன்
ரம்யா
ராணி தென்றல
வேதவிஷால்
பர்வின்பானு
கனவுகாதலி
இன்னும் நிறைய பேர் இருக்காங்க…
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
கதையின் போக்கு, எழுத்துநடை… கதைக்கரு…
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
சமமாகவே உள்ளது…
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
பெண் எழுத்தாளர்கள் அதிகம் உருவாக காரணமா இருந்த ரமணிசந்திரன் அம்மாகிட்ட…
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
Accept பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கும்…ரொம்பவே வருத்தமா இருக்கும்.. Mostly avoid பண்ணிடுவேன் அந்த மாதிரி கதைகள்… மறக்கமுடியாத கதைகள்
காதலும் கசந்து போகும்
ஸ்ரீதரின் மீரா
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
கேட்டு இருக்கேன். நாம் படிப்பதில் வரும் சுகம் அதில் வருவதில்லை…
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
நல்லா இருக்கும்… அந்த மாதிரி நிறைய படிச்சி இருக்கேன்…
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
இன்னும் நல்லா எழுதுங்க… நிறைய எழுதுங்க… நல்லதையே எழுதுங்க… காலம் கடந்தும் உங்கள் கதைகள் பேசபடும் …
நனி நன்றி🙏🙏🙏🙏🙏🙏
ரொம்பவே அழகான நேர்காணல் பிரியா சிஸ்டர் .. உங்க எளிமையான சொற்கள் மூலம் உங்க ராசனைகள அழகா எங்க கிட்ட பகிர்ந்துகிட்டது ரொம்ப சந்தோஷம்.
நிறைய நம்ம பழகற எழுத்தாளர்கள் பேர் சொல்லி இருக்கீங்க. அதுலாம் பாக்கறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் எழுத்து தோழமைகள் உங்க இஷ்ட எழுத்தாளர்களா இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
மொத்த கதை நேரம் சொல்ற மாதிரி 16 மணிநேரம் கூட நீங்க தொடர்ந்து படிப்பேன் சொன்னது ரொம்பவே அதிர்ச்சி கூடவே சந்தோஷமும் ஏற்பட்டது.
எப்பவும் படிச்சிட்டே இருங்க. உங்களோட பொன்னான நேரத்தை எங்க கூட செலவழிச்சது ரொம்ப சந்தோஷம். நனி நன்றிகள் சிஸ்டர்.
வாசிப்பை நேசிப்போம் ..