49 – அகரநதி
49 - அகரநதி மறுநாள் விடியும் முன்னேயே தூக்கம் கலைந்து எழுந்த நதியாள் சத்தம் செய்யாமல் அகரன் இருக்கும் அறைக்கு சென்றாள். அகரனோ தலையனையை அணைத்தபடி, உதட்டில் உறைந்த புன்னகை மாறாமல் வளர்ந்த குழந்தையாக தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் அருகில் யாரும் இல்லாதது வசதியானது நதிக்கு. பின் அவன் தலைபக்கம் வந்து கீழே அமர்ந்து அவனையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அகரன்…… அவளின் அகன் …… அவளை முழுதாய் அறியாவிட்டாலும் அவளை புரிந்து கொண்டவரை ...