Tag: crime

1 – ருத்ராதித்யன்

77 – ருத்ராதித்யன்

77 - ருத்ராதித்யன்  “தங்களுக்கு பரிட்சயம் தேவையில்லை என்று புரிகிறது. ஆனால் வனயட்சி இப்படியொரு முகம் கொண்டிருக்கிறார் என்று இன்று தான் நான் அறிகிறேன்.. நான் சிங்கத்துரியன் பற்றி கூறும்பொழுது கூட தாங்கள் தெரிந்ததாய் கூறவில்லையே தமையா ?”, ஆருத்ரா கேட்டாள். “இவரின் ஓவியம் நமது தலைமை வைத்தியசாலையில் இருக்கிறது ருத்ரா... அங்கே பார்த்திருக்கிறேன்.. வனயட்சி எனும் பெயர் பலரும் கொண்டிருக்கிறார்கள் என்பதால் நான் எதுவும் கேட்கவில்லை. நேரில் கண்டதும் தான் தெரிந்தது ...

1 – ருத்ராதித்யன்

76 – ருத்ராதித்யன்

76 - ருத்ராதித்யன் “மகதா .. ““உர்ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர்ர்... “, என உருமியபடி மகதன் நரசிம்மனின் முன்னே நின்றான். “இருட்டினில் ஜொலித்த மஞ்சள் விழிகள் மெல்ல வெளிச்சத்தில் வந்தன. அதன் நீளமும், அகலமும், உயரமும் கண்ட நரசிம்மன் மனம் சந்தோஷத்தில் துள்ளியது. “கண்டுவிட்டேன் .. மகதா .. கண்டுவிட்டேன் ... “, என மகதனைத் தாண்டி முன்னே சென்றவனை மகதன் தடுத்து தன் பின்னே ...

1 – ருத்ராதித்யன்

75 – ருத்ராதித்யன்

75 - ருத்ராதித்யன்  அடுத்த நாள் காலைப் பொழுது புலர்ந்ததும் ஆருத்ராவும், வனயாத்திரையும் ஆதித்த கோட்டையை விட்டு கிளம்பத் தயாராகி வெளிவந்தனர். “மகளே .. பத்திரமாக சென்று சேருங்கள். வழியில் திருடனை பிடிக்கிறேன் என எங்கும் செல்லவேண்டாம்.. அமரா.. அங்கு சென்று சேர்ந்ததும் தகவல் அனுப்பு.. விரைவில் சந்திப்போம்..”, என மஹாராஜா கூறினார். “அதெல்லாம் சரி அரசே.. எங்கள் இளவரசியை தாங்கள் தங்களது மகனுக்கு எப்போது பெண் கேட்டு வரப்போகிறீர்கள் ? அந்த ஏற்பாட்டையும் ...

1 – ருத்ராதித்யன்

74 – ருத்ராதித்யன்

74 - ருத்ராதித்யன்  “மகதா இதென்ன இன்னொரு மலர் தருகிறார் அன்னை ? இதற்கு என்ன அர்த்தம் ?”, நரசிம்மன் கேட்க மகதன் மெல்ல உருமியபடி அன்னையின் பாதம் பணிந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். “டேய் மகதா நில்லடா .. எனக்கும் அதென்ன செய்தி என்பதை கூறுவாயாக ..”, என நரசிம்மன் அழைத்தும் மகதன் நிற்காமல் மலைவிட்டிறங்கத் தொடங்கவும், நரசிம்மன் அந்த மலரைத் தனியாக பத்திரப்படுத்திக்கொண்டு அன்னையை மீண்டும் வணங்கிவிட்டு அவனும் மலையிறங்கத் தொடங்கினான். ஒரு ...

1 – ருத்ராதித்யன்

73 – ருத்ராதித்யன்

73 - ருத்ராதித்யன் “அரசே .. நாம் உடனடியாக செயலில் இறங்கினால் அவர்கள் சுதாரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.. இன்னும் சிறிது காலம் காத்திருப்பது உகந்தது என்பது எனது அபிப்ராயம் ..”, என ஆருத்ரா கூறினாள். “என்ன சகோதரி கூறுகிறாய்.. இதற்கு மேலும் காத்திருந்து இன்னும் எத்தனை உயிர்களை நாம் பலி கொடுக்கவேண்டும் ?”, அமரன் உள்ளம் கொதித்துக் கேட்டான். “இத்தனை ஆண்டுகள் நமது கண்களுக்கும் கருத்திற்கும் அவர்களின் உறவு ஏன் வராமல் போனது ? ...

1 – ருத்ராதித்யன்

72 – ருத்ராதித்யன்

72 - ருத்ராதித்யன்  “பைரவக்காட்டை பற்றி நமக்கு இன்னும் தீர்மானமாக தெரியாது மகளே…. அதை வைத்து இப்படி ஒரு ஆராய்ச்சி அவசியம் தானா என்பதை சிந்தியுங்கள்….. “, அரசர் கூறிவிட்டு எழுந்து சென்றார். அமரபுசங்கர் பைரவக்காடு எனும் வார்த்தை காதில் விழுந்ததும் மனதளவில் குமைந்துக் கொண்டிருந்தார். அந்த காட்டிற்கு செல்லும் வழியை கண்டறிய முற்படுகையில் தான் அவனின் பெற்றோர் அகாலமரணம் அடைந்தனர். அந்த மரணத்தினால்  தான் இவர்களுக்கு ‘பைரவக்காடு’ என்ற  இடம் இருப்பதே தெரிந்தது. ...

1 – ருத்ராதித்யன்

71 – ருத்ராதித்யன்

71 - ருத்ராதித்யன்  அரண்மனையில் இருந்து கிளம்பிய நரசிம்மன் முதலில் வடக்கு பக்கமாக சென்றான். மிகவும் அடர்ந்த காடுகள் கொண்ட வடக்கு பக்கத்தில் பல அபாயகரமான விலங்குகள் வாழ்கின்றன. வடக்கில் இருக்கும் கூட்டப்பாறை என்ற இடத்தில் மகர வகை யாளிகள் வாழ்வதாக சிலர் கூறுகிறார்கள். நரசிம்மன் அந்த யாளியை காணும் ஆவலோடு மகதனை தனக்கு முன்னால் செல்லவிட்டு பின்னால் வந்தான். 21 நாட்களுக்குள் அவன் அனைத்து தேவிகளையும் தரிசித்து ஆசியோடு மலரும் பெற்று வரவேண்டும். 8 ...

1 – ருத்ராதித்யன்

70 –  ருத்ராதித்யன்

70 -  ருத்ராதித்யன் “யாத்திரை என்ன பேச்சு இது? உன் தமக்கை இதை கேட்டால் என்ன நினைப்பாள்? “, நரசிம்மன் கோபமாக கேட்டான். “அவள் என்ன நினைத்தால் தங்களுக்கு என்ன அத்தான்? நான் மகாராணியாரிடம் கேட்ட கேள்விக்கு தங்களிடம் பதில் இருந்தால் கூறுங்கள்…. சரி தானே மகாராணி?”, யாத்திரை புன்னகை மாறாத முகத்துடன் அவனிடம் வம்பு வளர்க்க தொடங்கினாள். “மிக்க சரி…. ஆருத்ராவின் எண்ணம் பற்றி உனக்கு என்ன வந்தது மகனே? நீ தான் ...

1 – ருத்ராதித்யன்

69 – ருத்ராதித்யன்

69 - ருத்ராதித்யன்  பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்… அகண்ட பாரத கண்டத்தின் தென்கிழக்கு பகுதி ஆதித்த நாடு என்று பெயர் கொண்டு விளங்கியது. இன்றைய பாரதத்தோடு இலங்கை தாண்டியும் பல நூறு மைல்கள் நிலமாக அப்போது இருந்தது. வங்க கடலும், அரபிக் கடலும் உள்வாங்கி தான் இருந்தது. மிகவும் அகண்ட தென் பிரதேசமாக, பச்சை பசேலென இருந்த முழு நில பரப்பையும் ஒற்றை கொடையின் கீழ் ஆதித்த வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வருகின்றனர். குறுநிலமாக ...

1 – ருத்ராதித்யன்

68 – ருத்ராதித்யன்

68 - ருத்ராதித்யன் நாச்சியார் தான் எடுத்த குறிப்புகளோடு, எடுத்த புகைப்படத்தையும், சுவடியில் இருந்த வரிகளையும் பார்த்து சிலை எங்கே இருக்கிறது என ஆராய்ந்து கொண்டிருந்தாள். வல்லகி இன்னும் தன்னிலை திரும்பவில்லை. அங்கிருக்கும் அதிர்வலைகளை அவள் உடல் தாங்க முடியாமல், வலியில் சன்னமாக முனகல் எழுந்தது அவளிடம். அவளை சுமந்து வந்த யாளி அவளின் அருகில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. மெல்ல தனது துதிக்கையை மீச்சிறு உருவமாக படுத்திருப்பவள் அருகே வைத்து அவளது விரல்களை ...

Page 1 of 12 1 2 12

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!