What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]
கரைகளில் நின்று இரசிக்க வரவில்லை உன்னை…..
காணாத காட்சிகள் காண விழைகிறேன்
கணை கொண்டு துளைத்தாலும்….
அலைக்கொண்டு தடுத்தாலும்… – என்
அடி வைக்கும் முத்திரைகளை மறைக்க
முடியாது…. மறுக்கவும் முடியாது…
உன்னோடான என் போராட்டம் ….
அஸ்தமனத்திலும் தொடரும்….
எப்போராட்டமானாலும் தாக்கவும்
வெற்றியோடு உன்னை அணைக்கவும்…… !!!
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….