aalonmagari

நான் வாழ….

ஆழிலையின் ஆழம் தொட்டு வரும் அமைதி வேண்டும் ... ஆனால் அதில் அடங்கும் அழுத்தம் தாளமுடிகையில் ...சட்டென்று மேலெழுந்து பறக்கும் சிறகுடன் ஏறி ....கழுகுக்கும் மேலே பறந்து காற்றின் அழுத்தம் தாங்கி பறக்க நினைக்கிறேன் .....ஹாஹா ....சொற்களும் கோர்வையில்லை ...‌மனமும் நிலையில் இல்லை ....காலம் கடந்து சீக்கிரம் செல்ல வேண்டும் ....எனக்கான நாட்களை நான்...

பொறி

பொறித்தட்டிச் சென்றதாலே ...காதலெனும் பொறி வைத்து எனை பிடித்தாயா ? பொறி பறக்க பற்ற வைத்தாயா ? - ஆலோன் மகரி

புதியதோர் பாரதம்

அறிவுரை கூறினால் ஏற்காத பருவம் ...அனுபவத்தைத் தேடியோடும் கால்கள் ...அளவிலா ஆர்வம் ...முழு பிரபஞ்சத்தையும் அளவிட முற்படும் அறிவு ....பழமையில் புதுமையை தேடிடும் தேடல் ...பண்பில் நிகரில்லா பாரதத்தை - மீண்டும்உயிர்த்திடுவோம் வா ... - ஆலோன் மகரி 

காரணம்

காரண காரியமின்றி எதுவுமில்லை ....என் காரியங்களின் காரணம் நீயானால் ... - உன்காரணத்தின் காரியங்களாய் நான் ஆவேனோ ?? - ஆலோன் மகரி

திருப்தி

கனவிலும் கற்பனையிலும் ...வாழும் வாழ்வை ...நிஜத்தில் சுவாசிக்கவே விழைகிறேன் ...ஆனதொரு வாழ்வமைந்தால் ... ஆத்ம திருப்தியடைவேனோ..... ???!!! - ஆலோன் மகரி 

எஸ்கேப்

அதிக தூரமில்லை ...எல்லையில் நிற்கிறோம் ... - உன்எல்லையில் நீ .... - என்எல்லையில் நான் ....மக்கா எஸ்கேப் ஆகிடு.. போலீஸ் வைட்டிங் அங்க.. - ஆலோன் மகரி 

எப்பொழுது

மனதில் பதிந்த பார்வை .....செவிதனில் நுழைந்த வார்த்தைகள் ....கண்களில் விழும் பிம்பமாய் நீ ....இதயத்தில் நுழைந்தது எப்பொழுது ......????? - ஆலோன் மகரி

மீள்

நிறைய சொல்ல நினைத்தும்வெளிவராத சொற்கள் .....ஒன்றும் இல்லை பேசதடையின்றி தாரை வார்க்கும் உதடுகள் ....இரண்டும் உணர்ந்தேன்உன் கருவிழியின் சிறையில் ....ஆளுனர்-க்கு மனு அனுப்பினேன் ...இச்சிறையில் இருந்து மீளாதிருக்க .... - ஆலோன் மகரி

கொடுங்கோல்

இன்சொல் நீ உரைத்திட்டால்இவ்வுலகம் வண்ணமயமாகுதடி ....கொடுஞ்சொல் நீ கூறிவிட்டால் - உன் எண்ணங்களே என் உலகென ஆகுதடி ....செங்கோல் ஆட்சி செய்த நீ ...கொடுங்கோல் எடுத்தாயோ ....என்னை மட்டும் உன்னோடு இருத்திக்கொள்ள ...?????? - ஆலோன் மகரி 

 தாய் மடி

இயற்கையின் இதயமாய் ….மரங்களின் குடும்பமாய் …..பறவைகளின் வீடாய் ……தென்றலின் தூணாய் …..அருவிகளின் பிறப்பாய் ….ஆற்றின் மொழிகளாக …அமைதியின் இருப்பிடமேபேராபத்தின் உறைவிடமாக - எந்தன்உள்ளம் தேடும் மகிழ்விடம் …உயிர்களின் தாய் மடியாம் …!!! - ஆலோன் மகரி 

Page 15 of 29 1 14 15 16 29

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!