aalonmagari

நேசம்

நீயும் விடவில்லை ....நானும் பற்றிக் கொள்ளவில்லை .... நமக்குள் புகைந்தபடி இருக்கிறது .... நமது நேசம் ...... !!!  - ஆலோன் மகரி 

திரும்பி விடாதே

நீண்ட நெடிய காலம் தான் ... உன்னை நினையாமல் கழித்தேன் ... நீளும் நாட்களும் நினையாமலே கடந்துச் செல்ல விட்டுவிடு ... எனை கை விட்டது போல ... என் மனதை நொறுக்கியது போல ... என் நினைவுகளையும் தொலைத்து போ ... காற்றிலே மிதக்கும் நிகழ்வுகளை ... மறந்தும் சுவாசித்திடாதே ... பாவம் .. நான் தான் .. அது என்னைக் காட்டிவிட்டால் ... -...

23 – மீள்நுழை நெஞ்சே

23 - மீள்நுழை நெஞ்சே பஸ் விட்டு இறங்கும் சமயம் வில்சன் அவளுக்கு அழைத்தான். "ஹேய் ராக்ஸ்… எங்க இருக்க? ஆபீஸ் விட்டு கிளம்பிட்டியா?", எனக் குரலில் சிறிது வருத்தத்துடன் கேட்டான். "நம்ம அபார்ட்மெண்ட் கிட்டயே வந்துட்டேன் வில்ஸ்…. நீ என்ன பண்ற? எல்லாரும் வந்துட்டாங்களா?""இல்ல ராக்ஸ்…. ஃப்ளைட் டிலே… லெதர் சரியில்லன்னு இரண்டு நாள் தள்ளிட்டாங்களாம்… அண்ணன்...

என்ன அது ?

என்னுடன் நான் உரையாடும் வேளையில் .. கண்ணாடி பிம்பமாய் காண முயல்கிறேன் .. - ஏனோ திரை ஒன்று தடுத்து நிற்கிறது .. மனசாட்சி என்ற ஒன்று .. - நான் அதுவாகவோ ? அது நானாகவோ ?!எதுபோல் ஆனாலும் உண்மையை உரைத்திட வேண்டும் .. ஆரம்பத்தில் ஆடிய கபடி இன்றில்லை .. எனை நான் பார்க்க நினைக்கும் நொடி .. எத்திரையும்...

நிதர்சனம்

பற்பல கற்பனையில் ஒன்றாய் .. இன்று அமைய ஆசை .. நினைக்காதது நடப்பதே நிதர்சனம் என்று உணர்த்திவிட்டாய் ..!!!  - ஆலோன் மகரி 

நுகரலாமோ ???

உன் கண்களில் பூக்கள் மட்டும் தெரிய .. - அதில் பயணிக்கும் எனக்கு அடியில் இருக்கும் முட்களே தெரிகிறது .. முட்களை நினைத்து மலரின் மணத்தை நுகராமல் செல்ல ..உன் முகம் வாடியாது .. உன் மனம் முகர்ந்த நான் .. - மலரின் நறுமணம் நுகரலாமோ ???  - ஆலோன் மகரி 

நொடி

மனதில் ஆயிரம் சஞ்சலங்கள் இருந்தாலும் .. உன் முகம் பார்த்த நொடி .. - என்னில் உறுதி விஸ்வரூபம் எடுப்பதேனோ ??? - ஆலோன் மகரி 

தனிமை

மனிதனின் தனிமையை விட .. மனதின் தனிமை .. சில சமயங்களில் .. - மனிதனை நிலை குலையச் செய்கிறது ..!!!  - ஆலோன் மகரி 

என் வழி..

என் மனதோடு சில வரிகள் .. மனதின் பல மொழிகளோடு .. பல மௌனங்களின் பதில்கள் .. மௌனமான கேள்விகள் .. ஏதும் அறியா கன்னியாக நான் ! பலதும் கற்ற பேதையாக வாழ்கிறேன் .. முகமறியா நட்பும் .. முகமறிந்த மோதலும் .. காதலில் தோல்வியும் .. மர்மத்தின் மையத்தில் குடி கொண்டு விட்டேன் .. விடையறியா கேள்விகள் .. கேள்விகள் இல்லா விடைகள் .. எனக்கும் உனக்கும்...

சுவாசம்

மனதில் பல சஞ்சலங்கள் .. உனக்காக பல முயற்சிகள் .. நிறை தழும்பா மனிதனாய் நான் .. அலையுறும் ஜன்மமானேன் .. இன்றும் .. உன் கைப்பற்றி உன்னை எனதாய் மாற்றும் காலத்திற்காக .. இன்னும் அலையுறுவேன் .. பெண்ணே .. காலம் தாழ்த்தாது அரவணைத்து விடு .. எனது கடைசி சுவாசம் உனதாய்  இருக்க ... !  - ஆலோன் மகரி 

Page 14 of 29 1 13 14 15 29

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!