35 – மீள்நுழை நெஞ்சே
35 - மீள்நுழை நெஞ்சே இவையனைத்தையும் வெளியே இருந்து வசந்தியும், பத்மினி தேவியும் கேட்டுக் கொண்டிருந்தனர்.வசந்தியை அனுப்பிவிட்டு சில நிமிடங்கள் கழிந்தபின் அவர் குரல் கொடுத்தபடி உள்ளே வந்தார்."அன்பு… அன்பு…..""இங்க இருக்கேன் க்கா… வாங்க….""இந்தா ராகிவடை… சூடா போட்டு எடுத்துட்டு வந்தேன். உடனே சாப்பிடு ஆறிட்டா கொஞ்சம் வசக் வசக்னு ஆகிடும்…. நீயும் எடுத்துக்கோ துவாரகா…. ", என அவளுக்கும் கொடுத்தார்.துவாரகா ஒன்றை எடுத்து சாப்பிட்டதும், "எப்படி இருக்கு துவாரகா?", எனக் கேட்டார்."நல்லா இருக்கு ஆண்ட்டி…", எனக் கூறி இன்னொன்றை சாப்பிட்டுவிட்டு விகாஷை பார்க்க ஆரம்பித்தாள்."அன்பு…. இன்னிக்கு மருதமலை போலாம்னு இருக்கேன். உன்னால...




