11 – ருத்ராதித்யன்
11 - ருத்ராதித்யன் மீண்டும் ஆயுஸால் கடத்தப்பட்ட மகதன் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.ஆயுஸ் கீழே கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் மகதனை வெறித்தவாறே அமர்ந்திருந்தான். அருகில் கிஷான் காயப்பட்டுப் படுத்துக்கிடந்தான்.அடிக்கூண்டில் அடைக்கப்பட்ட மகதன் மயக்கமருந்தின் வீரியத்தால் படுத்துக் கிடந்தது.இரத்த வாடை அதன் உடலில் இருந்து வந்தபடியே இருக்க, அந்த மயக்கத்திலும் அது முகத்தை சுளிப்பது ஆயுஸின் கண்களிலும் பட்டது.பொதுவாகவே புலிகள் தூய்மை விரும்பிகள். தன்னை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்.ஒவ்வொரு முறை வேட்டையாடி உண்டபின் நீர்நிலைக்கு சென்று தன் கைகால் உடல் என அனைத்தும் கழுவிகொள்ளும். பெறும்பாலும் அது முழுதாக நீரில் குளித்து ஆட்டம்...